Sunday, April 03, 2016

5184 - " பொது நல வழக்கு வெற்றி! வெற்றி!", W. P. No. 1133 of 2016, W. M. P. No. 867 of 2016, 12.01.2016, High Court, Madras, Thanks to Mr. Nanjil K Krishnan

" பொது நல வழக்கு வெற்றி! வெற்றி! "
அரியலூர் மாவட்டத்தில் காலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்லத்தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தின் சிறிய மாவட்டமான அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாகும்.
இங்கு சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளது.
இந்த தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்களால் அதிக அளவில் விபத்துகளும், உயிர் இழப்புகளும் தொடர்ந்து நடை பெற்று கொண்டிருக்கிறது.
2014 &2015. ல் 297 பேர்களும் 2016 நடப்பு ஆண்டில் 36 பேர்களும் ,உயிர் இழந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 35 பேர்களும், உடல் உறுப்புக்கள் இழந்தவர்கள், சிறு சிறு காயம் அடைந்தவர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கனரக வாகன விபத்துகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதனால் கவலை அடந்த சமூக ஆர்வலரும் "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மாநில தலைவருமான அரியலூர் R. சங்கர் அவர்கள் மாவட்ட. ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலை துறையினர், சுற்றுச்சூழல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் தலைமை செயலர், மனித உரிமை ஆணையர் என சம்பந்தபட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் விபத்தினை தடுக்கக்கோரி புகார்மனு அனுப்பியுள்ளார்கள்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம், இந்திய சாட்சியச்சட்டம் மூலம் விண்ணப்பம் அனுப்பி தகவல்கள் பெற்றுள்ளார்கள்.
இருப்பினும் கடமை தவறிய அதிகாரிகள் விபத்தினை தடுத்திட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே சங்கர் அவர்கள் விபத்தினால் உயிர் இழந்தவர்களின் விபரங்கள், அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடமை தவறிய அதிகாரிகள் மீது "பொது நல வழக்கு " தொடுத்தார்கள் .
வழக்கினை விசாரணை செய்த நீதியரசர் வியத்தினை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் நகருக்குள் வர தடை விதித்துள்ளார்கள்.
இனி மேல் கனரக வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட. வாய்ப்பில்லை என்பதினால் பயமில்லாமல் அரியலூர் மக்கள் சாலையில் சென்று வருவார்கள் .
மக்கள் சேவை ஆற்றி வரும் சமூக ஆர்வலர் அரியலூர் R. சங்கர் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல நினைப்பவர்கள் :98655 43303. என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
நன்றி.
அன்புடன் 
LAACO Nanjil.






No comments:

Post a Comment