https://drive.google.com/file/d/1OqW_2EG_i-0PjkZEhomLDo7BAhbfDP4h/view?usp=sharing
Tuesday, December 27, 2022
Saturday, December 17, 2022
6941 - கோர்ட் தீர்ப்பின் படி மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவிற்கு, கால வரம்பு பொருந்தாது, நாள். 09.12.2022, WP No. 33186/2022, நன்றி ஐயா. MHC & திரு. வெங்கடேசன்
Thursday, April 14, 2022
Saturday, October 16, 2021
Sunday, August 01, 2021
Friday, May 07, 2021
6517 - அசல் ஆவணத்தை நேரில் சமர்ப்பிக்க வலியுறுத்தக் கூடாது, W.P.(MD)No.19745 of 2020 11.02.2021, Hon'ble High Court, Madurai Bench, நன்றி ஐயா. Dhanesh Balamurugan
ஆவணங்கள் பதிவு செய்யும் போது, முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்க தேவையில்லை
பொதுவாக நாம் ஆவணங்கள் பதிவு செய்யும்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அசல் ஆவணத்தை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என நம்மை வற்புறுத்துவார். மழை, வெயில், திருட்டு, மற்றும் காணாமல் போன காரணத்தினால் தொலைத்த அந்த ஆவணத்தை மீண்டும் நகலெடுத்து சமர்ப்பித்தாலும் அதனை சார்பதிவாளர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதற்காக நாம் மாவட்ட காவல்துறை அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் அலைந்து திரிந்து FIR பதிவு செய்து அல்லது காவல்துறையால் வழங்கப்படும் Not Traceable Certificate-யை பெற்று சமர்ப்பித்தால் மட்டுமே ஆவணத்தை பதிவு செய்வார். இதனால் நமக்கு தேவையற்ற மன உளைச்சலும், கால விரயமும், பண விரயமும் ஏற்படும்.
இதனைப் போக்குவதற்கு நமது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அவர்கள் சமீபத்தில் Sivanadiyan Vs Registration Dept, Pudukkottai எனும் வழக்கில், இந்திய பதிவு சட்டத்தில் ஒரு ஆவணத்தை பதிவு செய்யும்போது பதிவு செய்யும் அலுவலரிடம் அசல் கவனத்தை காண்பிக்க வேண்டும் என்ற குறிப்பிட்டு சட்டப்பிரிவு ஏதும் இல்லாதபோது சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அசல் ஆவணத்தை நேரில் சமர்ப்பிக்க வலியுறுத்தக் கூடாது என (W.P.(MD)No.19745 of 2020) 11.02.2021 அன்று உத்தரவிட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1QslFSarjgUK8CLySo_YL1lW1_L6_JF4H/view?usp=sharing
Monday, April 12, 2021
Tuesday, February 23, 2021
6455 -30 நாட்களுக்குள் நிலத்தின் அளவை செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் சர்வேயர்களின் சம்பளத்தில் இருந்து ரூபாய் 2500 ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டும், WP MD No 13465 / 2020, 05.10.2020, MHC, Madurai, நன்றி ஐயா. புதுப்பேட்டை சரவணன்
நிலத்தை அளவை செய்வதற்காக மனு அளித்த 30 நாட்களுக்குள் நிலத்தின் அளவை செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் சர்வேயர் களின் சம்பளத்தில் இருந்து ரூபாய் 2500 ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டும்
https://drive.google.com/file/d/1uI3IUYGoWCqYDp5exkimoofjVZwf3uaz/view?usp=sharing
6452 - DTCP ஒப்புதல் அளித்துள்ள மனைப்பிரிவு வரைபடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரிசர்வ் சைட் ( பூங்கா )பயன்பாட்டினை வேறு பயன்பாட்டிற்கு உபயோகம் மாற்றம் செய்திட அதிகாரம் கிடையாது, WA Nos 38 & 39 / 2010, 23.11.2010, MHC, நன்றி ஐயா. Rti Thiyagarajan S P
Sunday, October 11, 2020
6333 - நில அளவீட்டு பணியை கட்டணம் செலுத்திய 30 நாளில் முடிக்க வேண்டும், W.P.(MD)No.13465 of 2020, 05.10.2020, BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
மதுரையைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடிக்கடி அளவீடு செய்ய வேண்டும் என பொன்மேனி கிராம நிர்வாக அலுவலர் தொந்தரவு செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன், “தற்போதைய காலத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி நில அளவீடு பணிகளை மேற்கொள்ள முடிகிறது. நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் மனுதாரருக்கு ஏற்பட்ட தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் ரூ.2500 பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அப்பணியை மேற்கொள்ள வேண்டிய அளவையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஒரு காலத்தில் தமிழகம் நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக இருந்ததாகவும், ஊழல் அதிகாரிகளால் அந்த பெயருக்கு தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மனுதாரரின் நிலத்தை நியாயமான நில அளவையர் ஒருவரை நியமித்து அளவீடு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டுள்ளார்.
https://drive.google.com/file/d/1yghWocdvYzdW40nfSF3SIn8vfNU1dZu_/view?usp=sharing



