குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் கீழ், ஒன்றைப் பகல் ஒளியில்தான் சோதனை செய்ய வேண்டும் என்று சட்டம் ஆனது கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஒரு முறையாக, வீட்ட்டில் வசிப்பவர்களை, அதனைக் காலி செய்யும் படி செய்துவிட்டு, வீட்டில் முத்திரையிட்டு, காவல் காத்து, பகல் ஒளிக்குக் காத்திருக்க வேண்டும்.
Showing posts with label PSO. Show all posts
Showing posts with label PSO. Show all posts
Tuesday, January 26, 2016
4786 - PSO 668 - இறுதி அறிக்கையின் பேரில், குற்றவியல் துறை நடுவரின் ஆணைகள் :-
Orders of Magistrate on Final Reports :-
குற்றவியல் வழக்கு நடைமுறை விதித் தொகுப்பு, 173-வது பிரிவின் கீழ், ஒரு வழக்கு பொய் ஆனது என்று, குற்றவியல் துறை நடுவருக்கு செய்யப்படும் இறுதி அறிக்கை மேல், அப்பிரிவே, காட்டுகின்றபடி, மேற்கொண்டு, காவலர் விசாரணை செய்யும்படி குற்றவியில் துறை நடுவர் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கலாம். ஆனால், அவ்-வழக்கு பொய் ஆனது என்று, காவலரே செய்த அறிக்கைக்கு எதிராக, அவ்-வழக்கில், குற்றச்சாட்டை தாக்கல் செய்யும் படி காவலருக்கு கட்டளையிட, குற்றவியல் துறை நடுவருக்கு உரிமை இல்லை. இவ்-வழக்கு பொய் ஆனது என்று, காவலர் செய்த அறிக்கையின் மேல் குற்றவியல் துறை நடுவர், மனநிறைவு அடையாவிட்டால், கு. வி. மு. ச. 190-வது பிரிவின் கீழ், அவருக்கு தானாகவே, நடவடிக்கை எடுத்துக் கொள்ள அதிகாரம் உண்டு.
4785 - PSO 665 - கு. வி. மு. ச. 195-வது பிரிவின் கீழ், குற்றச்சாட்டு :-
Complaint under section 195, Criminal Procedure Code.
1. இந்திய தண்டனை சட்டம் 211-வது பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க ஒரு குற்றத்திற்காக, அக்குற்றம் யாதேனும் ஒரு நடவடிக்கையில் / அது சம்பந்தமாக செய்யப்பட்டிருப்பதாகச் சாற்றும் பொழுது, அந் நீதிமன்றமோ / அது கீழ்ப்பட்டுள்ள வேறு எந்த நீதிமன்றமோ எழுத்தில் கொடுத்த புகாரின் மேல் அன்றி, மற்றப்படி, வழக்கு எதுவும் தொடரக் கூடாது.
2. ஆகவே, கீழ்க்கண்ட நேர்வுகளில் அத்தகைய நீதிமன்றத்தின் எழுத்து மூலமான, குற்றச்சாட்டு ஒன்று அவசியம் ஆகும்.
(a) முதல் குற்றச்சாட்டு, காவலருக்கு கொடுக்கப்பட்டு, அவர்களால் அக்குற்றம் பொய் என்று தீர்வு செய்யப்பட்ட ஒரு வழக்கில், குற்றவியல் துறை நடுவர் நீதிமன்ற நடவடிக்கை ஏதேனும் எடுத்திருக்கும் போது,
(b) கு. வி. மு. ச. 159-வது பிரிவின் கீழ், புலனாய்வு இன்றி, ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால், அது நீதிமன்ற நடவடிக்கையாக அமையாது.
Monday, January 25, 2016
4784 - PSO 664 - அரசு பணியாளர்கள் மீது வழக்குத் தொடர்பு :
Prosecution to Government Servants:
1. எந்த அரசு பணியாளர் எவரேனும் தனது பதவிக்கு உரிய அலுவல் வழிக் கடமைகளை நிறைவேற்றுகையில் செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்களுக்காக, அவரை, குற்றஞ்சாட்டுவதற்கு முன்னதாக, காவலர் தலைநகர் அல்லாதா புறப்பகுதியில், ஆட்சியரிடமிருந்தும், சென்னை மாநகரில், அரசுப் பணியாளர்களுக்கு உரிய துறையின் தலைவரிடமிருந்தும் முன் சம்மதத்தைப் பெற வேண்டும்.
2. ஆட்சியர்களும், சென்னை மாநகரில் துறைத் தலைவர்களும் காவலரிமிருந்து, அத்தகைய தேவைக் கோரிக்கையைப் பெற்ற பத்து நாட்களுக்குள்ளாக, காவலருக்கு பதில்களை அனுப்பிவிட வேண்டும். காவலருக்கும் ஆட்சியருக்கும் / சென்னை மாநகரத்தில் ஒரு துறைத் தலைவருக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்தால், அது விசயத்தில், காவல் அரசாங்கத்தாரின் உத்தரவைப் பெற வேண்டும்.
3. இவ்-ஆணை ஆனது, சென்னை மாவட்டக் காவல் சட்டம் 1859 (1859-ன் XXIV)-ன் கீழ், குற்றஞ்சாட்டப்பட்டக் காவல் சார்நிலைப் பணியாளர் நேர்வுகளிலும், மாநில அரசினரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இல்லாத, அரசாங்கப் பணியாளரைக் குற்றச்சாட்டுவதற்கு பொருந்தாது.
குறிப்பு : அறிக்கை அனுப்பபட வேண்டிய ஆட்சியர், குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட வேண்டிய, மாவட்டத்தின் ஆட்சியராகும்.
4783 - PSO 663 - இந்திய தண்டனை சட்டம் 182 (பொது ஊழியரிடம் நெஞ்சறிந்த பொய் கூறுதல்) / 211 (பொய் குற்றம் சுமத்தி, ஒருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயல்வது) வது பிரிவின் கீழ் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அனுமதி :-
Sanction to initiate proceedings under section 182 / 211, Indian Penal Code,
இந்திய தண்டனை சட்டம் 182 / 211 வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளை, காவல் கண்காணிப்பாளர் / காவல் உட்கோட்ட அலுவலரின் உத்தரவின்றித் தொடங்கல் ஆகாது.
4782 - PSO 662 - முறையீட்டாளர் மீது வழக்குத் தொடர்வு :- (Prosecution to complainant)
விசாரணை அலுவலர், ஒரு வழக்கை, திட்டமிட்ட பொய் என்றோ / வன்மமான பொய் என்றோ அறிக்கை செய்கையில், அவர், இறுதி அறிக்கையில் வாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கிறாரா / இல்லையா என்றும், அப்படி உத்தேசிக்காவிட்டால், அவ்வாறு செய்யாததன் காரணங்களையும் கூற வேண்டும்.
4781 - PSO 660 - முறையீட்டாளருக்கு அறிவிப்பு : Notice to complaintant
குற்றவியல் வழக்கு நடைமுறை விதி தொகுப்பு, 175, 157 (ஆ), பிரிவுகளின் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டவை உட்பட முடிவு செய்யப்பட்ட வழக்குகளில், காவலர் படிவம் எண். 90-ல், அறிவிப்பு ஒன்றை, புகார்தாரருக்கு / தகவலாளருக்கு சேர்ப்பித்து, அதன் நகலில் முறைப்படி, மேல் ஒப்பம் இட்டு, இறுதி அறிக்கையோடு சேர்த்து, சம்பந்தப்பட்ட குற்றவியல் துறை நடுவருக்கோ / சென்னை காவல் ஆணையருக்கோ அனுப்பி வைக்க வேண்டும். புகார்தாரருக்கு (அ) தகவலாளருக்கு, ஒரு வழக்கில் நேரடித் தொடர்பு கொள்ளாதவராயிருக்கும் இடத்து, அறிவிப்பை, இறந்தவருக்கு அடுத்துள்ள, உறவினருக்கோ / மிக நெருங்கிய உறவினர் ஒருவருக்கோ சேர்ப்பித்து, இன்னார் எனத் தெரியாமல் இருந்தால், காவல் நிலைய அறிவிப்பு பலகையின் மேல் முப்பது நாள் கால அளவுக்கு ஒட்டி வைக்க வேண்டும். காவல் விசாரணை மறுக்கப்பட்ட வழக்குகளில் அறிவிப்பு நகலை, முதல் தகவலுடன் சேர்த்து, நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
4780 - PSO 659 - பொய் வழக்குகளின் பேரில் அறிக்கை - அறிவுறுத்தல்கள் :-
Reporting on false cases - instructions
வழக்குகள், பொய் என்று தெளிவாய் இருந்தால் அன்றி, அவற்றை அவ்வாறு அறிக்கை செய்வது ஆகாது. பெரும்பாலும் அவ்வாறு இருக்க கூடும் என்பது போதுமானதாயிராது. தகாத தாமதம் ஏற்பட்ட வழக்குகளை, அவை பொய் என்று மெய்ப்பிக்கும் புதிய விசயங்கள் வருவிக்கப்பட்டிருந்தால் அன்றி, துலங்காதவை என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
4779 - PSO 658 - இறுதி அறிக்கைகள் (Final Reports) :-
இறுதி அறிக்கையானது, (படிவம் எண். 89) அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவருக்கு அனுப்பபட வேண்டிய, கு. வி. மு. ச. 1973-வது பிரிவால் நிர்ணயிக்கப்பட்ட அறிக்கையாகும். இவ்-வடிவம் ஆனது, வழக்குகளைப் பொய் என்று கூறி அனுப்புவதற்காகவும், துப்பறிய முடியாதவை என்று அவற்றை அறிவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.
4778 - PSO 566 - விசாரணை நடுநிலையாக இருக்க வேண்டும் என்பது (Investigation to be importial)
1. விசாரணை அதிகாரிகள் முன்னதாக ஒருவருக்கு சார்பாகவோ / எதிராகவோ உண்மை நிகழ்ச்சிகளைப் பற்றிக் கருத்து கொள்ளலாகாது என்று எச்சரிக்கப்படுகின்றனர். உண்மையைக் கண்டுபிடிப்பதுதான் விசாரணை அதிகாரியின் குறிக்கோளாகும். இதனை நிறைவேற்றும் பொருட்டு, அவர், விசாரணை முழுவதிலும் நடுநிலை பிறழா மனத்துடன் இருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும்.
"566(2) முறையீடுகளும் எதிர்முறையீடுகளும் உள்ள வழக்குகளில் குற்றவறிக்கைகள் ;
ஒரே நிகழ்ச்சியிலிருந்து வெளிப்படையாக எழும் முறையீடு & எதிர் முறையீட்டில் புலனாய்வு அலுவலர், அவ்-இரண்டினையும் விசாரிப்பு செய்து, பின்வரும் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அதாவது (1) எதிரிகள் வலுத்தாக்குநர்களாக உள்ள வழக்குகளில் குற்றவறிக்கை முன்னிடல் / (2) இரண்டு வழக்குகளும் உண்மை அற்றவை என அவர் கண்டால், இரண்டையும் குறித்தனுப்புகை செய்துவிடல், புலானாய்வு அலுவலர் ஒரு முறையீட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் பொழுது, நீதிமன்றத்தில், எதிர்முறையீட்டைச் சான்று ஆவணமாக குறியிடுமாறு செய்வதும், எதிர் தரப்பில் காயமுற்ற ஆட்களின் மருத்துவச் சான்றிதழ்களை மெய்ப்பிப்பதுவும் அவரது கடமையாகும். நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில், அதன் பின்னர் ஒரு திட்டவட்டமான வழக்கு ஒன்றை அவர் முன்னிட வேண்டும். அத்தகைய வழக்குகளில், புலனாய்வு அலுவலர் ஒரு முறையீட்டை மட்டுமே முழுமையாக ஏற்றுக் கொண்டு, அதனை ஆதரித்து, எதிர் தரப்பினருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு விளக்கமேதும் கொடுக்காத சாட்சிகளை மட்டுமே விசாரிப்பது கூடாது. இத்தகைய வழக்குகளில் உண்மையானது பெரும்பாலும் எந்தவொரு முறையீட்டிலும் முழுமையாக இருக்காது. நீதிமன்றம் உண்மையைக் கண்டு கொண்டு, நியாயமான முடிவினை எடுக்க, நீதிமன்றத்தை இயல்விக்கும் வண்ணம், அதன் முன்னர், எல்ல விவரங்களும் முன்னிடப்பட வேண்டியது, முற்றிலும் அவசியம் ஆகும்.
(3) இரண்டு வழக்குகளில் ஒன்றில் குற்றச் சார்த்தை முன்னிடுதல் / இரண்டையும் கைவிட்டுவிடல் எனும் ஏதாவது ஒரு வழியை தேர்வு செய்வது கடினம் என்று புலனாய்வு அலுவலர் முடிவு செய்தால், அவர் மாவட்டக் குற்றத்துறை அரசு வழக்குரைஞரது கருத்தைக் கேட்டு, அதற்கு இணங்கச் செயல்பட வேண்டும். சட்டம் சார்ந்த பிழை உள்ளது எனக் குறித்தனுப்புகை செய்யப்பட்ட வழக்குகளைப் பொறுத்து, இறுதி அறிக்கை அனுப்பபபட வேண்டும். வழக்கு எவ்வாறு முடிவு செய்யப்பட்டது என்பதை படிவம் எண். 90-ன் அறிவிப்பு மூலமாக, நிலவரத்திற்கு ஏற்ப, முறையீட்டாளருக்கு / எதிர் முறையீட்டாளருக்கு அறிவிக்க வேண்டும். காவல்துறை செய்த முடிவினால், அவர் குறையுற்றால், ஒரு குறிப்பிட்ட நடுவர் முன்பு தீர்வழி நாடிடுமாறு தெரிவிக்கப்பட வேண்டும்.
4777 - PSO 546 - கிராம அலுவலர்களை தண்டிப்பதற்கு அறிக்கை அளித்தல்
Reporting Village Officers for punishment :
1. தங்கள் கடமைகளில் தவறும் கிராம அலுவலர்கள், பணியாளர்கள் இவர்களைப் பற்றி, அவர்களது குற்றத் தன்மைக்கு ஏற்றவாறு, வட்டாட்சியருக்கு / கோட்ட ஆட்சியருக்கு அறிவிக்க வேண்டும்
4774 - PSO 5
மாவட்ட ஆட்சியர் அவரது சார்நிலைப் பணியாளர்கள் உள்ள வருவாய் துறையின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட கிராம காவல், காவல்துறைக்கு உதவிபுரிகிறது
4773 - PSO 560 - முதல் தகவல் அறிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள்
Instructions regarding first information reports...
1. முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு ஒரு தொடர்ச்சியான எண்ணைக் கொடுக்க வேண்டும்; இந்த எண் துணைப் பகுதிகளில் பதிவதற்குக் குற்ற எண்ணாக எடுத்துக் கொள்ளப்படும்.
2. எழுத்தறிவு இல்லாதவர்களாக இருந்தால் மட்டுமே, சாதாரணமாக, தகவலாளரின் பெருவிரல் அடையாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், முறையீட்டாளர் / தகவலாளரிடம் உரிய முறையான ஒப்புகை பெற்று, யாதொரு கட்டணம் இன்றி, முதல் தகவல் அறிக்கை நகல் கொடுத்திட வேண்டும்.
4772 - PSO - 559 - குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு, அதிகார வரம்புடைய காவல் நிலையம் எது என்பது குறித்து, ஐயம் ஏற்படுகையில் வழக்குகளைப் பதிவு செய்தல்
Registry of cases when station limits of occurence are doubtful...
1. இரண்டு காவல் நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு எல்லைக்கு அருகில் ஒரு குற்றம் செய்யப்பட்டு, அது எந்த காவல் நிலைய வரம்புக்குள் நிக்ழந்தது என்னும் ஐயம் ஏற்படுகையில், அது முதலில் அறிவிக்கப்பட்ட காவலர், வழக்கைப் பதிவு செய்து, புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்; அதை வைத்துக் கொள்ள வேண்டிய காவல் நிலையத்தைப் பிற்பாடு நிர்ணயிக்க வேண்டும்.
2. ரயில் காவல் அதிகார வரம்பிற்குள் செய்யப்பட்ட ஒரு குற்றமானது, அந்த ரயில் பாதை வழியில் உள்ள ஒரு மாவட்டக் காவல் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டால், இரண்டாவதாக சொல்லப்பட்ட காவல் நிலையம் சம்பந்தப்பட்ட ரயில் காவல் நிலையத்திற்கு உடனடியாக அதனைத் தந்தி செய்தி மூலம் அறிவிக்க வேண்டும்; அத்தந்திச் செய்தியைத் தொடர்ந்து, மேற்படி வழக்கை மாற்றும் வகையில், முதல் தகவல் அறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அதிகார வரம்புள்ள ரயில் காவல் நிலையத்துக்கு அவ்-வழக்கை மாற்றும் முதல் தகவல் அறிக்கையை மிக மிக விரைவான செய்தி அறிவிப்பாகவும் ரயில் காவலர், பயணச் சிப்பந்தி மூலமாகவும் உடனடியாக அனுப்ப வேண்டும்
Subscribe to:
Posts (Atom)