Showing posts with label RTI - கணவன் & மனைவி. Show all posts
Showing posts with label RTI - கணவன் & மனைவி. Show all posts

Tuesday, June 19, 2018

5930 - கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால்., CRL. OP. NO - 15994/2010, DT - 2.1.2018, நன்றி ஐயா. Dhanesh Balamurugan


கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால் அதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 கூறுகிறது.
ஆனால் இந்த குற்றச் செயலை பொறுத்தவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய முடியாது. இருதார மணம் (Bigamy) குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன் கீழ் தனிப் புகார் ஒன்றினை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமே தவிர, காவல்துறையினரிடம் புகார் அளிக்க முடியாது. காவல்துறையினரும் FIR பதிவு செய்ய முடியாது. அவ்வாறு இருதார திருமணம் தொடர்பாக காவல்துறையினர் FIR பதிவு செய்வது சட்டப்படி தவறானது ஆகும்.
அதேபோல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்துறையிடம் அளிக்கும் புகாரில் உடனடியாக ஒரு FIR-ஐ பதிவு செய்யக்கூடாது. அந்தப் புகாரை மாவட்ட சமூகநல அதிகாரியின் விசாரணைக்கு அனுப்பி அவரிடமிருந்து ஒரு அறிக்கையை பெற்று அதன்பிறகே காவல்துறை FIR-ஐ பதிவு செய்ய வேண்டும். இது வரதட்சனை புகார்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 15994/2010
DT - 2.1.2018
D. கெளதமன் பாபு மற்றும் பலர் Vs ஆய்வாளர், W-16 அனைத்து மகளிர் காவல் நிலையம், புளியந்தோப்பு காவல் நிலையம், சென்னை
2018-1-TLNJ-CRL-105

Thursday, April 12, 2018

5896 - குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20., நன்றி ஐயா. Dhanesh Balamurugan

மனைவி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 18,19,20,22 ஆகியவற்றின் கீழ் பரிகாரங்கள் கேட்டு கணவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்காக மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மாவட்ட சமூகநல அலுவலர் விசாரணை நடத்தி 14.12.2017 ல் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் மனைவிக்கும் அவரது குழந்தைகளுக்கும் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமைகளை கணவர் செய்யவில்லை என்றும் கணவர் மனைவியோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கணவர் கூறியதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மனைவி பிரிவு 23 ன் கீழ் இடைக்காலமாக 4 வகையான பரிகாரங்களை வழங்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவிற்கு கணவர் எதிருரை தாக்கல் செய்தார். கணவர் தெர்மல் பவர் ஸ்டேஷனில் பொறியாளராக வேலை பார்த்து வருவதன் மூலம் மாதம் ரூ 1,00,000/- சம்பளம் பெற்று வருவதால் தனக்கும், குழந்தைகளுக்கும் இடைக்கால ஜீவனாம்சமாக ரூ. 20,000/- தர உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நடுவர் இரண்டு பரிகாரங்களை வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவின் முடிவில் இந்த உத்தரவு மேல் நடவடிக்கைக்காக மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் பண நிவாரணம் வழங்கி உத்தரவிடலாம். பிரிவு 20(4) ன்படி உத்தரவின் நகலை புகார்தாரருக்கும், எதிர்மனுதார் மற்றும் அவரது எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது. மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறவில்லை.
மேலும் உத்தரவுப்படி கணவர் இடைக்கால ஜீவனாம்ச தொகையை தர மறுத்ததால், நடுவர் கணவருக்கு சம்பளம் போடும் அதிகாரியை பணத்தை பாதிக்கப்பட்ட மனைவிக்கு நேரிடையாகவோ அல்லது நீதிமன்றத்திலோ செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கூறுகிறது.
சட்டம் இப்படியிருக்க நடுவர் உத்தரவு நகலை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்பி வைத்திருப்பது சட்டப்படி தவறுதானே? நண்பர்களே
மாவட்ட சமூகநல அலுவலர் ஏற்கனவே தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்க என்ன அதிகாரம் உள்ளது?
இடைக்கால உத்தரவுகளை நிறைவேற்ற என்ன அதிகாரம் உள்ளது?


Thursday, May 25, 2017

5809 - இந்தியாவில் பொய் வரதட்சனை வழக்குகள் எப்படி உருவாக்கப்படுகிறது? Crl. M.C. 722 of 2009, 06.08.2010, New Delhi, Thanks to Mr. Adv Dhanesh Balamurugan


இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் எப்படிஉருவாக்கப்படுகின்றன என்ற உண்மையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் விளக்கமாக கூறியிருக்கிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்திய உச்ச நீதிமன்றமும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. சமீபத்திய நாளிதழ் செய்திகளும் அதை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன. தொடர்ந்து படியுங்கள்…

தினம் தினம் இந்திய நகர வீதிகளில்நடந்துகொண்டிருக்கும் பல கொடிய குற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு நீதி வேண்டி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க வந்தால் குற்றச்சம்பவம் நடந்தது தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு வரவில்லை அது வேறு காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது என்று கூறி புகாரை பதிவு செய்யாமல் எல்லைப்பிரச்சனையைக் (Jurisdiction) காரணம் காட்டி அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

ஆனால் பொய் வரதட்சணை வழக்குகள் என்று வரும்போது இந்திய நாட்டிற்குள் இல்லாமல் எல்லை கடந்து வேறு நாட்டில் குற்றம் நடந்ததாக புகார்தாரர் கூறினாலும் எந்தவித எல்லைப் பிரச்சனைப் பற்றியோ, தங்களது அதிகார வரம்பு பற்றியோ கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சுறுசுறுப்பாக குற்றப்பத்திரிக்கையும் தயார் செய்துவிடுகிறார்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வருத்தப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பொய் வழக்குகளில் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர், புகார் கொடுப்பவர், குற்றச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடம் இந்த மூன்றுமே இந்திய மண்ணிற்குள் இல்லாதபோது இதுபோன்ற வழக்குகளை இந்தியாவில் உள்ள காவல்துறை அதிகாரி எப்படி புலன்விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறார் என்பது உலக மகா அதிசயம் என்று டில்லி உயர்நீதிமன்றமே ஆச்சரியப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்திற்கே புரியாத இந்த அதிசயம் பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் சராசரி இந்தியக் குடிமக்களுக்கு எப்படிப் புரியும்? இந்த ஆச்சரியம் இன்றும் தினந்தோறும் இந்தியாவில் பல பொய் வரதட்சணை வழக்குகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த உண்மையை டெல்லிஉயர்நீதிமன்றம் ஒரு பொய் வரதட்சணை வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையை கசக்சி எறிந்து (FIR Quash)கூறிய தீர்ப்பில் வெளியிட்டுள்ளது. அந்த உண்மையின் ஒரு பகுதியைப்பாருங்கள்………



IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
August 06, 2010; Crl. M.C. 722 of 2009
Amit Sharma ...Petitioner Versus State & Ors. ...Respondents
JUSTICE SHIV NARAYAN DHINGRA
1. The present petition under Section 482 Cr.P.C read with Article 227 of the Constitution of India has been preferred by the petitioner for quashing of FIR No.170 dated 15thAugust, 2008 registered at Police Station Kirti Nagar, West Delhi District, New Delhi.
2. The present FIR was registered at the behest of Smt. Kavita Gupta who a resident of USA and had come to Delhi perhaps only for registration of this FIR. A perusal of FIR reveals that Smt. Kavita Gupta was living in USA since 1993...
3. ... ... ... ... The case is being prosecuted by her father as her attorney. A perusal of this FIR would show that immediately after marriage, the parties moved to USA and thereafter all events as alleged by her are of USA. Even the allegations of her Istridhan being taken away by her father in law and mother in law is of USA and not of India. Allegations of cruelties and the attitude of her husband towards her are all of USA. It is not stated by her that she ever stayed with her in laws or husband from the time of marriage till filing of this complaint at Delhi. When the counsel for State was asked how this FIR was registered in Delhi, the response of the State counsel as given in the form of brief synopsis is that while in India, the complainant and accused cohabited at Delhi at Kirti Nagar, which is the matrimonial house of complainant and therefore there was jurisdiction of Delhi court. A perusal of FIR would show that nowhere the complainant had stated that cohabitation had ever taken place between the parties at Delhi or the parties ever lived at Delhi.
4. It is surprising that such FIRs are registered by the police whenneither complainant lives in Delhi nor the accused persons live in Delhi nor any part of alleged offence had taken place in Delhi. The alleged offence admittedly had taken place in USA. All the accused persons, as mentioned by the complainant, are living in USA. The complainant herself is living in USAand the father of complainant perhaps is living in Delhi and pursuing this complaint. I consider that registration of this FIR is a sordid story of working culture of Delhi police. It is this police which refuses to register FIRs in case of robberies, thefts and other heinous offences which take place on the roads of Delhi and when the complainant dare comes to police station for registration of FIR, he is made to run from one police station to another on the issue of jurisdiction itself, while the FIRs are registered when nothing happened in India and no investigation can be done by the police in India. Why such FIRs are registered is obvious.It seems registration of FIRs has been made a profitable business by some police officials. ... ...
இதுபோன்ற பொய்யான வழக்குகளை அப்பாவிகளுக்கெதிராக இந்தியக்காவல் நிலையங்களில் பதிவுசெய்வது எப்படி என்பதைப்பற்றியும் டெல்லி உயர்நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் நன்றாகவே விளக்கியிருக்கின்றன: “சரியான நபரை சரியாக கவனித்தால்” (“you can get any false FIR registered, if you have right connections” – Delhi HC, Crl. M.C. 722 of 2009, Date of Order: August 06, 2010).
இந்தியாவில் எப்படிப்பட்ட பொய்யான புகாருக்கும் முதல் தகவல் அறிக்கையும், குற்றப்பத்திரிக்கையும் தயார் செய்ய முடியும் என்று நீதிமன்றங்கள் விளக்கியிருக்கின்றன. அதையும் தொடர்ந்து படித்துப் பாருங்கள்………
“Police is supposed to be professional in its working culture. The fall in standard of police has gone to such an extent that in genuine cases it is difficult to get a case registered and even if registered, it wont act with sinceritybut you can get any false FIR registered with it, if you have right connections.” - Hon. Justice S. N. Dhingra, Delhi High Court (Crl. M.C. 722 of 2009 Date of Order: August 06, 2010).
“Registration of FIRs in India: There are innumerable cases that where the complainant is a practical person, FIRs are registered immediately, copies thereof are made over to the complainant on the same day, investigation proceeds with supersonic jet speed, immediate steps are taken for apprehending the accused” - The Supreme Court of India in Lalita Kumari v Govt. of U.P. & Ors Writ Petition (Crl.) No.68 of 2008 decided on 14th July, 2008

இந்தியாவில் குற்றவழக்குகளில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் இதுபோன்ற உலக மகா அதிசயங்களைக் கண்டு மாண்புமிக்க நீதிமன்றங்களே இப்படி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தால் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கித்தவிக்கும் அப்பாவிகளின் நிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wd2VwendENlhzY1E/view?usp=sharing


Monday, May 22, 2017

5805 - நீண்ட காலம் வாழ்ந்ததன் அடிப்படையில், இரண்டாவது மனைவிக்கும், கணவனின் பென்சன் தொகையை பெற தகுதி உண்டு, W.P.No.31990 of 2012, 06.08.2014, High Court, Chennai, நன்றி ஐயா. Adv. Dhanesh Balamurugan

5803 - சமரச அடிப்படையில், விவாகரத்து செய்து கொள்வதற்காக, கணவன் அனுப்பும் அறிவிப்பின் மாதிரி, நன்றி ஐயா. Adv. Dhanesh Balamurugan

அனுப்புனர் :

முகிலன் 
த /பெ பரமசிவன் 
52,திருவள்ளுவர் தெரு 
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்

பெறுநர் :

மல்லிகா
க /பெ முகிலன்
அண்ணா நகர்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம்

1. தாங்களும், நானும் கணவன், மனைவி ஆவோம்.

2. தங்களுக்கும், எனக்கும், திருவைகுண்டம், சுபா கல்யாண மண்டபத்தில் வைத்து 3.6.2016 ம் தேதி திருமணம் நடைபெற்றது.

3. தங்களுக்கும், எனக்கும் திருமணம் நடந்த காலத்திலிருந்தே பிரச்சினை ஏற்பட்டு கருத்து வேறுபாடு அதிகமாகி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

4. தாங்கள் கடந்த 1.1.2017 ஆம் தேதி அன்று நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு தன்னிச்சையாக வெளியேறி தங்களது பெற்றோர் வீட்டில் நாளதுவரை வசித்து வருகிறீர்கள்.

5. நான் எனது உறவினர்களை வைத்து பலமுறை தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தாங்கள் என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று உறுதியாக கூறிவிட்டீர்கள்.

6. ஒரு நல்ல மனைவியாக தாங்கள் என்னை பராமரித்து எனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அது தங்களின் கடமையாகும். ஆனால் தாங்கள் என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமலும், எனக்கு எவ்வித பணிவிடைகளும் செய்யாமல் தங்களது பெற்றோருடன் நெடுங்காலமாக வசித்து வருவதாலும் இனி நான் உங்களுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. இனிமேலும் தாங்களும் நானும் இணைந்து வாழ்வதற்கு வழியும் இல்லை.

7. எனவே இந்த அறிவிப்பு கிடைத்ததும் தாங்கள் என்னுடன் சேர்ந்து சமரச அடிப்படையில் விவாகரத்து பெற்றுக்கொள்ள முன் வரவேண்டும் என்றும் தவறினால் நான் விவாகரத்து கேட்டு தங்கள் மீது உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வேன் என்றும் அதனால் எனக்கு ஏற்படும் சகல செலவுகளுக்கும் தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன்.

Wednesday, April 26, 2017

5791 - ...திருமணம் செல்லாது என்று, கணவர் சார்பில் கொடுக்கப்படும் அறிவிப்பு மாதிரி, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

அனுப்புனர் :
ப. தனேஷ் பாலமுருகன், பி, ஏ., பி, எல்
அட்வகேட்
திருவைகுண்டம்
பெறுநர் :
மலர் க/பெ முகிலன்
15,தெற்கு மாடத் தெரு
திருவைகுண்டம்
அன்புடையீர்,
எனது கட்சிக்காரர் திரு. முகிலன் த/பெ பரமசிவன், 81,திருவள்ளுவர் தெரு, திருவைகுண்டம் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த அறிவிப்பு தங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
தங்களுக்கும், எனது கட்சிக்காரருக்கும் 4.3.2017ம் தேதியில், திருவைகுண்டம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது.
தாங்கள் பூப்படையாத நிலையில், எனது கட்சிக்காரரை திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
தாங்கள் பூப்படையாமல் எனது கட்சிக்காரருடன் செய்து கொண்டிருக்கும் திருமணம் சட்டப்படி செல்லாநிலைத் திருமணம் ஆகும்.
தாங்கள் பூப்படையாமல் இருப்பதால் தான் எனது கட்சிக்காரருடன் உடலுறவு கொள்வதை தவிர்த்து வந்திருக்கிறீர்கள்.
தாங்கள் பூப்படையவில்லை என்பதை மருத்துவ ரீதியாக கண்டறிய எனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் கூடிய விரைவில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.
தாங்கள் பூப்படையாமல் இருப்பதால் தங்களுக்கும் எனது கட்சிக்காரருக்கும் இடையிலான திருமணம் பூர்த்தியாகவில்லை. அதனால் தங்களுக்கும் எனது கட்சிக்காரருக்கும் இடையில் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக எனது கட்சிக்காரர் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
(ஒரு சட்ட அறிவிப்பை வழக்கறிஞர் மூலம் தான் அனுப்ப வேண்டும் என்று அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவர் நேரிடையாகவே அனுப்பலாம். அவ்வாறு அனுப்ப நினைப்பவர்கள் வழக்கறிஞர் பெயருக்கு பதில் தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு கொள்ளவும்)
(அதேபோல் "எனது கட்சிக்காரர்" என்று இருப்பதை "எனக்கும்" என்று மாற்றிக் கொள்ளவும்)

Sunday, April 02, 2017

5751 - திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர் மூலம் குழந்தை பெற்ற ஒரு பெண், அந்த ஆணிடம் வாழ்க்கை பொருளுதவி கேட்க முடியும், CRP No. 1287 / 2004, 05.01.2016, High Court, Madhya Pradesh, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர் மூலம் குழந்தை பெற்ற ஒரு பெண், அந்த ஆணிடம் வாழ்க்கை பொருளுதவி கேட்க முடியும். 

மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு வாழ்க்கை பொருளுதவி தொகை வழங்குவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரிவு தான் 125 ஆகும். உறவு முறையை மறுத்து, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை ஒரு கணவர் பிரித்து விட முடியாது. ஒரு கணவன், ஒரு பெண்ணை தன்னுடைய மனைவி இல்லை என்றோ அல்லது அந்த பெண்ணுடன் தனக்கு திருமணமே நடைபெறவில்லை என்றோ கூறி, ஜீவனாம்சம் வழங்குவதில் இருந்து அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள இயலாது.

மனைவி என்கிற உறவு முறையை நிரூபிக்க வேண்டிய ஆரம்ப கட்ட பொறுப்பு மனைவிக்கு தான் உள்ளது. ஒரு பெண் அந்த ஆண் தன்னை மனைவி போல் நடத்தினார் (She has been treated as wife) என்று நிரூபித்தால் போதும். ஒரு தம்பதியை சமூகம் கணவன், மனைவியாக ஏற்றுக் கொண்டால் போதும் அந்த நிலையை சமூகம் திருமண உறவாக அனுமானித்து கொள்ளும். ஒரு ஆணும் பெண்ணும் தொடர்ந்து உறவு வைத்துக் கொண்டுள்ள நிலையில் அவர்களை கணவன், மனைவியாக கருதுவதோடு அந்த நீடித்த உறவு திருமணம் என்கிற அனுமானத்தை உருவாக்குகிறது. கு. வி. மு. ச பிரிவு 125ல் குறிப்பிட்டுள்ள நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இ. த. ச பிரிவு 494ல் குறிப்பிட்டுள்ளது போல், திருமணத்தை மிகவும் துல்லியமாக நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

மாண்புமிகு உச்சநீதிமன்றம் "சுமித்ரா Vs பைகான் (AIR - 1985-SC-765)" என்ற வழக்கில், திருமணத்தை மிகவும் துல்லியமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுவை பரிசீலிக்கும் குற்றவியல் நடுவர் அந்த திருமணம் சட்டப்படியான திருமணமா? அல்லது சட்டத்திற்கு புறம்பான திருமணமா? என்று ஆராய வேண்டிய அவசியம் இல்லை. விவாகாரத்து சட்டத்தின் கீழ் அல்லது இ. த. ச பிரிவுகள் 494,495,497,498 ஆகியவற்றின் கீழான சட்ட நடவடிக்கைகளில் ஒரு திருமணத்தை நிரூபிப்பது போல், மிகவும் துல்லியமான ஆதாரங்களுடன் ஜீவனாம்சம் வழக்கில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு தரப்பினர்களுக்கிடையே திருமண உறவு குறித்து முகாந்திரம் இருப்பதாக குற்றவியல் நடுவர் மனநிறைவடைந்தால் கு. வி. மு. ச பிரிவு 125ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஓர் ஆணும் பெண்ணும் நீண்ட நாட்களாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான முகாந்திரம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டால்(Primafacie Proved) அந்த பெண்ணின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாகவும், அந்த பெண்ணை தன்னுடைய மனைவியாகவும் அந்த ஆண் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும், அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக சமூகம் அங்கீகரித்துள்ளது என்கிற நிலையில் அந்த பெண்ணையும், அந்த ஆணையும் கணவன், மனைவி என்று அனுமானிக்க வேண்டும். எனவே ஒரு ஆணும், பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களை சமூகம் கணவன், மனைவியாக அங்கீகரித்து ஏற்றுக் கொண்டால் அந்த ஆண் கட்டாயம் அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும். திருமணம் நடக்கவில்லை என்று கூறி ஆண் தப்ப முடியாது என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

5750 - இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒருவர் தன் மனைவிக்கு நன்கொடையாக கொடுத்த வீட்டினை அவருடைய மனைவி விற்க முடியும், SA No. 27/2008, High Court. Madras, நன்றி ஐயா. Dhanesh Balamurugan


இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒருவர் தன் மனைவிக்கு நன்கொடையாக கொடுத்த வீட்டினை அவருடைய மனைவி விற்க முடியும்.

இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு ஒரு பதிவு செய்யப்பட்ட கொடை ஆவணத்தின் மூலமாக சொத்தை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட கொடையை அந்த மனைவி பெற்றிருக்க வேண்டும் என்றும் கொடை ஆவணம் மட்டும் எழுதினால் போதாது சொத்தின் சுவாதீனம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு சொத்தின் சுவாதீனத்தை ஒப்படைக்கவில்லை என்றால் அதனை முகம்மதிய சட்டப் பிரிவுகள் 149 மற்றும் 152ன் படிஉண்மையான கொடையாக கருத முடியாது.

முகம்மதிய சட்டப்படி ஒரு சொத்தை கொடையாக கொடுக்கும் போது அதனை கொடையாக பெறுபவர் வசம் சொத்தின் சுவாதீனம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றிருந்தாலும் அச்சட்டத்தின் பிரிவு 152(3)ன் படி கொடை கொடுப்பவரும், கொடையை பெறுபவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் போது கொடை கொடுப்பவர் தன்னுடைய நோக்கத்தினை தெளிவாக குறிப்பிட்டிருந்தால் போதுமானது. அதேபோல் பிரிவு 153ன் படி சுவாதீன ஒப்படைப்பு என்பது கணவர், மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் போது அவசியம் இல்லை என்றும், கொடை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள வாசகங்களின் படி கணவர் உண்மையிலேயே மனைவிக்கு சொத்தை உரிமை மாற்றம் செய்திருந்தால் போதுமானது ஆகும். எனவே முகம்மதிய கணவரால் கொடுக்கப்பட்ட வீட்டை அவர் மனைவி தாராளமாக யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முழு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Thursday, December 22, 2016

5545 - Widow Entitled To Husband’s PF Amount Even After Remarriage, C.M.A(MD)No.1397 of 2006 and M.P(MD)No.1 of 2006, 15.12.2016, MADURAI BENCH OF MADRAS HIGH COURT, Thanks to True LegalMinds

5543 - Whether anticipatory bail can be granted to husband committing Rape on his wife? S.B. Criminal Misc. Bail Application No. 12230 of 2015, 30.10.2015, HIGH COURT OF RAJASTHAN (JAIPUR BENCH), Thanks to Law Web

Even if for the sake of arguments, it is held that the alleged act of the petitioner does not amount to rape even under the aforesaid amended provision by the reason that the complainant happens to be his wife, but his act prima facie amounts to an offence under Section 377, IPC which provides for voluntary carnal intercourse against the order of nature with any woman also. In my considered view, any woman includes wife of a man also more particularly in view of the fact that in this provision, there is no such exception as provided in Section 375, IPC. Consequently, looking to the gravity of the offence, but without expressing any final opinion on the merits and demerits of the case, I do not find it a fit case in which anticipatory bail is to be granted to the petitioner. The application for grant of anticipatory bail under Section 438, Cr.P.C. is, hereby, dismissed

Tuesday, October 11, 2016

Saturday, November 07, 2015

3596 - The salary paid to the public servant by the public authority is sourced from the tax paid by the people in general..,File No.CIC/AD/A/2012/003341­SA, 7.1.2014

The   information   about   salary   of   employee/officer   of   the   same   Public Authority cannot be considered as ‘third party information’.  The employee of the public authority is part of that public authority and hence he is not the third party...

Section 125 of Criminal Procedure Code mandated that husband has a general duty to maintain wife and children....

Especially when the wife is seeking the salary particulars of the Husband, from the public authority where he is working as public servant, it is the duty  of  the public authority to  render  required assistance by  providing necessary information to her to secure justice...

The   maintenance   of   spouse   and   children   of   the   family   is   the   legal responsibility of the earning member of the family...