Showing posts with label TNSIC - எதிரான உத்தரவு. Show all posts
Showing posts with label TNSIC - எதிரான உத்தரவு. Show all posts

Saturday, January 11, 2020

6083 - Written Argument in TNSIC Case, Thanks to Mr. Leenus Leo Edwards

Written Argument என்பது ஒரு வழக்கின் விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தில் வழக்கறிஞரால் சமர்பிக்கப்படும் வழக்கின் மொத்த சாராம்சமாகும். முகநுால் நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன் சமர்பிக்கும் வகையில் எழுத்துமூல விவாத உரையின் ஒரு மாதிரி படிவத்தை இணைத்துள்ளேன்.
.
இந்த பதிவிலான “எழுவினாக்கள் (issues) மற்றும் விவாதங்கள் இந்த பிரச்சனைக்கு மட்டுமே பொருந்தும். மற்ற பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு எழுவினாக்கள் மற்றும் வாதங்களை முன் வைக்க வேண்டும்.
.
மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கானது குறிப்பிட்ட தேதியில் விசாரணைக்கு வருகின்றது என்று அறிவிப்பானை கிடைத்ததும், கீழ்கண்டவாறு எழுத்துமூல விவாத உரையினை முன்னரே தயாரித்து வைத்திருந்து, அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். எழுத்துமூல விவாத உரையில் அனைத்தும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருப்பது என்பது விசாரணையை இலகுவாக எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.
.
(மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் இரண்டாம் மேல் முறையீடு செய்ய அவர்கள் கொடுத்திருக்கும் படிவத்தை உபயோகப்படுத்துவது என்பதே சரியானதாகும்.)
.
நான் இதுவரை தமிழ்நாடு தகவல் ஆணைய விசாரணைக்கு சென்றதில்லை என்பதால், இந்த எழுத்துமூல விவாத உரை எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என்று ஏற்கனவே விசாரணைக்கு சென்றவர்கள்தான் கருத்து கூறவேண்டும். எனது முயற்சியில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் ஆலோசனை வழங்கினால், உரிய திருத்தங்களை (எழுத்து பிழைகள் உட்பட) மேற்கொள்ள தயாராக இருக்கின்றேன். ...


நன்றி Mr. Leenus Leo Edwards

https://drive.google.com/open?id=1VbwUAc4oiCXfazIoQtTDkQeiIL4dzIve
https://drive.google.com/open?id=1ryvAJNFII8DE5s7mutyA9iXPksGXlkxs
https://drive.google.com/open?id=1a9NZgudzFPk3X3aYSkU1MLxyhir4qDUh
https://drive.google.com/open?id=1Uh6YI0ZIE9bpxl_QMrgwF3e6gH3nfDnR
https://drive.google.com/open?id=1s7niLfA-Ojv5w5WJCnDy75jcH3WYbgZ0
https://drive.google.com/open?id=1seCDETpsrrhHYvVDL9vJT4m34E5_Qhb9
https://drive.google.com/open?id=1BBnL0mp8q6Rel8DTHGdqbPumrWv6j4O2
https://drive.google.com/open?id=1o20NQyc_onrZmFeAqYJaBTw5EAMje8nf

Tuesday, March 28, 2017

5709 - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் நியமனம் செய்யப்பட்ட தகவல் ஆணையர்கள் நீதியரசர்கள் அல்ல., நன்றி ஐயா. Leenus Leo Edwards

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் நியமனம் செய்யப்பட்ட தகவல் ஆணையர்கள் நீதியரசர்கள் அல்ல. 

அவர்களுக்கு மேற்படி சட்டத்திற்கு பொருள் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் இல்லை. மேற்படி சட்டத்திற்கு பொருள் விளக்கம் அளிக்க மாண்புமிகு உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தகவல் ஆணையர்களின் பணியானது மேற்படி சட்டத்தினை முறையாக அமல்படுத்த வேண்டிய பணியாகும். ஆகவே அவர்கள் கொடுக்கும் ஆணைகளை முன் ஆணைகளாக காண்பித்து இந்த சட்டத்தின் உபயோகத்தை மாண்புமிகு நீதிமன்றங்களை தவிர மற்ற யவராலும் கட்டுப்படுத்தமுடியாது. 
.
இந்த கீழ்கண்ட பைலில் கொடுத்துள்ள பல விளக்கங்கள் தவறானது. அதைப்பற்றி சிறிது பார்ப்போம். 
.
1. நடவடிக்கையை பற்றி நேரடியாக கேட்கமுடியாது. ஆனால் மனு எந்த தேதியில் பெறப்பட்டது, மனுவிற்கான உருவாக்கப்பட்ட கோப்பு எண், மனுவை பரிசீலிக்கும் அலுவலர் பெயர், அதிகாரியின் பெயர், கோப்பு குறிப்பின் நகல், இதே பிரச்சனை சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, இதுவரை தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை...என்ற விபரங்களை தாரளமாக கேட்கமுடியும். கோரிய தகவல்களில் இருந்து நாம் கொடுத்த மனுவின் நிலையை மறைமுகமாக அறியமுடியும். 
.
2. ஏன் என்ற கேள்வியை மட்டுமே கேட்கமுடியாது. அதைவிட்டு ஒட்டு மொத்தமாக கேள்விகள் கேட்கமுடியாது என்று கூறுவது சரியல்ல. தஅஉ சட்டத்தில் தகவல்களை இவ்வாறுதான் கேட்கவேண்டும் என்று எங்கு எழுதப்படாத நிலையில், தஅஉ சட்டத்தில் இல்லாத ஒன்றை கூறுவது என்பது சட்டத்தை பழிப்புரைப்பதாகும். உதாரணமாக - தலைமை தகவல் ஆணையரின் பெயர் என்ன? இது கேள்விதான். அதற்காக அவர்கள் பதில் சொல்ல மறுக்க முடியுமா? எங்கு பொருண்மைகள் ஆவணங்களாக ஒரு அலுவலகத்தில் இருக்கின்றதே அது தகவல் ஆகும். அதை அவர்கள் வழங்கி ஆகவேண்டுமே தவிர அதை கோரும் முறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யமுடியாது. 
.
3. கருத்துகள் தாரளமாக கேட்கலாம். கோரும் கருத்துகள் பொருண்மைகளாக அந்த அலுவலக கோப்புகளில் இருக்க வேண்டும். உதாரணமாக – எத்தனை நாட்களுக்குள் ஒரு மனுவை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். பொதஅ அதற்கான பதிலை (உம். 30 நாட்கள்) கூறவேண்டும் இங்கு அவர் கூறும் கருத்து அவரது சொந்த கருத்து அல்ல. அந்த அலுவலக நடைமுறைப்பற்றிய கருத்து ஆகும். 
.
4. கேள்விகளாக கேட்க தடை ஏதும் இல்லை (ஏன் என்ற கேள்வியை தவிர) என்ற நிலையில் கேள்விகளாக கேட்கப்பட்டவை தகவல்கள் எனும் பதத்தில் வராது என்று கூற யவருக்கும் அதிகாரம் இல்லை. கேள்விகளாக கேட்டவை அந்த அலுவலகத்தில் பொருண்மைகளாக இருந்தால் அந்த தகவலை வழங்கியே ஆகவேண்டும். 
.
5. அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைத்து ஆவணங்களின் நகலை பெற மனுதார்ருக்கு உரிமை உண்டும். அந்த ஆவணம் அவர் கொடுத்த மனுவாக இருந்தாலும். ஆவணத்தை கோருவது என்பது சான்றிட்ட நகலை பெறுவதற்கு சம்ம். அதற்கு சட்டப்படி மனுதார்ர் ரூ.2 பக்கத்திற்கு செலுத்த தயாராக இருக்கும்போது, மனுதார்ரின் ஆவணத்தை பெறமுடியாது என்று கூறுவது சட்டத்தை இழிப்பதாகும். 
.
6. ஒரு அரசு ஊழியர் முறையாக பணி நியமனம் பெற்றாரா என்பதை அறிய அனைத்து பொதுமக்களுக்கும் உரிமை உண்டு. இந்த தகவல் 3ம் நபர் தகவல் என்று சொல்லுவதே தவறு. அவ்வாறு பொது தகவல் அலுவலர் சொன்னால், அந்த தகவல் 8(i)(j) பிரிவில் உள்ள வரம்புரையாக சொல்லப்பட்ட தகவல் எனும் பத்த்தில் வருகின்றதா என்பதையும் அவர் முன்வந்து கூறவேண்டும். 
.
7. சரியானது.
.
8. சட்டத்தின் பிரிவு 4(1)(b) தகவல்கள் அனைத்தையும் அந்த அலுவலகம் தானகவே முன் வந்து அவர்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய தகவல்கள் ஆகும். அதில் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பெயர், வாங்கும் சம்பளம் அனைத்தும் அடங்கும். சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டதற்கு தவறான பொருள் விளக்கம் அளிக்க யவருக்கும் உரிமையில்லை. 
.
9. கோப்பு அளிக்கப்பட்டிருப்பின் எந்த தேதியில் அது அழிக்கப்பட்டிருக்கின்றது என்ற விபரத்தை மனுதார்ருக்கு வழங்கவேண்டும். 
.
10. அந்த தகவல் 8(i)(j) பிரிவில் உள்ள வரம்புரையாக சொல்லப்பட்ட தகவல் எனும் பதத்தில் வருகின்றதா என்பதையும் பொதஅ கூறவேண்டும். சட்டத்தின் பிரிவு 4(1)(b) குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் வழங்கியே ஆகவேண்டும்.

கடைசியாக– நீதியரசர்கள் மட்டுமே சட்டத்திற்கு பொருள் விளக்கம் அளிக்க முடியும். சட்டத்தில் கூறப்பட்டவைகளில் ஒரு தெளிவற்ற தன்மை இருக்கும் நிலையில் மட்டுமே பொருள் விளக்கம் அளிக்க முடியும். அதுவும் முதலில் (Litra Legis) இலக்கண மரபு குன்றாப் பொருள் விளக்கம் அளிக்க வேண்டும். பின்னர் சட்டமன்றத்தின் கருத்திற்கு இணங்க பொருள் கொள்ள வேண்டும் (Sententia Legis). சட்டத்தில் 4(1)(b) எவையெல்லாம் தானக முன் வந்து வெளியிடப்பட்டிருக்க வேண்டிய தகவல் என சட்டம் கூறியபிறகு, அதற்கு மாறாக பொருள் விளக்கம் அளிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
.
அரசு அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான ஆணைகளை மக்கள் முன் வைத்து (ஆணைகள் என்பது அந்த வழக்கின் தன்மையை பொருத்தது. அதை அனைத்து வழக்குகளுக்கும் முன் ஆணையாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆணைகள் வாயிலாக வழங்கப்படும் பொருள் விளக்கம் சட்டத்திற்கு எதிராக இருந்தால், அதை முன் ஆணையாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை), இந்த சட்டத்தினை முடக்குவதற்காக தவறான பிரசாரங்களை செய்கின்றார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.




Sunday, May 08, 2016

5344 - W.P.No.3690/2016 before the Hon’ble High Court of Madras seeking a direction against the Chief Commissioner, Tamil Nadu Information Commission, Case No.10393F/2015, 17.03.2016

5343 - W. P. No. 3291 / 2016-ல், தாக்கல் செய்த 2-வது மேல் முறையீட்டு மனுவின் மீது, 6 வார காலத்திற்குள் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்ய உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 11888 / A / 2015, 30.03.2016

Sunday, April 03, 2016

5185 - "தமிழ் நாடு தகவல் ஆணையம் மீது பொது நல வழக்கு", பொதுநல வழக்கு எண் :W.P.No. 5467/2014, 01.08.2014, நன்றி ஐயா. Nanjil K Krishnan

நன்றி ஐயா. Ramesh Balasubramaniam, Vediappan Chinnasamy & N R Mohan Raam

" தமிழ் நாடு தகவல் ஆணையம் மீது பொது நல வழக்கு "
தமிழ் நாடு தகவல் ஆணைய விசாரணைக்கு மனுதாரர் சார்பாக அவரது பிரதிநிதி விசாரணைக்கு செல்லலாம்!
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல ்செய்த காரணத்தினால் தகவல் ஆணைய மேல்முறையீட்டு விதிகளில் மனுதாரர் மட்டுமே வழக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்ற விதிமுறையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது!







Tuesday, February 16, 2016

4973 - 30 தினங்களுக்குள், மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு, நீதிப்பேராணை வழக்கு எண். 24995 / 2015, 13-08-2015, உயர்நீதிமன்றம், சென்னை, நன்றி ஐயா. Nanjil K Krishnan

" தமிழ் நாடு தகவல் ஆணையம் வேஸ்ட்! "
" உயர் நீதி மன்றமே பெஸ்ட் ! "
தமிழ் நாடு தகவல் ஆணையம் தபால் ஆபிஸாக மாறி விட்டது!
இங்கே மனுதாரர்களுக்கு நீதி கிடைப்பதில்லை
மனுதாரர்கள் மிரட்டப் படுகின்றனர்!
தகவல் ஆணையத்தில் எந்த விபரமும் தொகுத்து வைக்கபட வில்லையாம்.
வழக்கு விசாரணையின் போது ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தவறான தீர்ப்பு வழங்குகின்றனர்!
மறு விசாரணை என்று மனுதாரர்களை அங்கும் இங்கும் தேவையில்லாமல் அலைய வைக்கின்றனர்.!
ஒரு வழக்கிற்கு இரண்டு வழக்கு எண் கொடுக்கின்றனர்.!
தேவையற்ற நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டி காட்டி பல மனுக்களை தள்ளுபடி செய்கின்றனர்!
தகவல் ஆணையர்கள் சர்வாதிகாரிகளைப் போல் செயல் படுகின்றர்.
அவர்கள் முயலுக்கு மூன்று கால்கள் என்றால் அதனை ஏற்று கொள்ள வேண்டுமாம்!
மறுப்பு தெரிவித்தால் இது தான் எனது இறுதி தீர்ப்பு ! முடிந்தால் நீதிமன்றம் போ
என்கின்றனர்!
ஆணையரை எதிர் கேள்வி கேட்க கூடாதாம்!
பல்லாயிர கணக்கான மேல் முறையீடுகள் நிலுவையில் உள்ளது.!
இதற்கெல்லாம் காரணம் சட்டத்துக்கு எதிராக செயல் படும், மானம் கெட்ட,, கேடு கெட்ட, கடமை தவறிய தகவல் ஆணையர்கள் தான்
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை கண்காணிக்கவும், அதனை செம்மை படுத்தவும் நியமிக்கப் பட்டுள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் சார்பு செயலாளர், துணை செயலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் (STATE NODAL OFFICER) இதனை கண்டு கொள்வதே இல்லை!
இதற்கு தீர்வு தான் என்ன?
கடமை தவறிய ஆணையர்களிடம் மேல் முறையீடுகள் மீது நடவடிக்கை எடுத்திட உயர் நீதி மன்றம் மூலம் நீதி பேராணை (WRIT PETITION) வழக்கு தொடுத்து தான் நீதியை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் மனு தாரர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
நண்பர் ஒருவர் உயர்நீதி மன்றம் மூலம் உத்தரவு பெற்ற உத்தரவு நகல் உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன். நன்றி
RTI ஆர்வலர்கள் முடிந்த வரை பகிருங்கள்!