Showing posts with label காசோலை மோசடி. Show all posts
Showing posts with label காசோலை மோசடி. Show all posts

Tuesday, April 14, 2020

6233 - கூட்டாண்மை நிறுவனத்தின் பெயரில் காசோலை வழங்கப்பட்டு, அது போதிய பணமின்றி திரும்பிய நிலையில், நிறுவனத்தை எதிரியாக சேர்க்காமல், இயக்குநர்களுக்கெதிராக குற்ற நடவடிக்கை துவக்கப்பட முடியாது, Crl OP No. 13147/2015, 23.07.2019, MHC, நன்றி. சட்டக்கதிர்

6218 - வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகைகள் முழுவதுமாகத் திருப்பி செலுத்திய நிகழ்வில், குற்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது சரியே, Crl A Nos. 2107-2125 / 2017, 18.02.2019, SCI, நன்றி. சட்டக் கதிர்

Thursday, April 12, 2018

5892 - வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது...,CRL.M.P.No 808/2017 Dated 26/03/2018, நன்றி ஐயா. Chandru Karur

மிக முக்கியமான தீர்ப்பு...
வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது , கடன் வாங்கிய தொகைக்கு மேல் பல மடங்கு அதிக தொகையை இட்டு காசோலையை நிரப்பி வழக்கு தொடுக்கப்படும் நிலையில், கை எழுத்தை தவிர, மற்ற வாசகங்களை கடன் வாங்கியவர்தான் எழுதினாரா என கண்டுபிடிக்க, கை எழுத்து நிபுணர் முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையாகி, 30 தடவை அதே காசோலை வாசகங்களை எழுதி காண்பிக்க வேண்டும். அதை காசோலையில் உள்ள எழுத்துக்களின் தன்மையை ஒப்பிட்டு பார்த்து, கை எழுத்து நிபுணர் அறிக்கை தர வேண்டும். அதை முக்கிய சாட்சியாக கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என சமீபத்தில் மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்திரவிட்டுள்ளது.

Wednesday, April 26, 2017

5792 - காசோலை மோசடி வழக்கு, புகார்தாரரால் கொடுக்கப்படும் அறிவிப்பு மாதிரி, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

அனுப்புனர் :
ப. தனேஷ் பாலமுருகன், பி, ஏ., பி, எல்
அட்வகேட்
திருவைகுண்டம்
பெறுநர் :
மலர் க/பெ முகிலன்
15,தெற்கு மாடத் தெரு
திருவைகுண்டம்
அன்புடையீர்,
பொருள் - மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138(b)-ன்படி கொடுக்கப்படும் அறிவிப்பு
தாங்கள் எனது நெருங்கிய நண்பர் ஆவீர்கள். அதனையிட்டு தங்களுடைய குடும்ப அவசிய செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதால் என்னிடம் 9.12.2016ம் தேதியில் எனது வீட்டிற்கு வந்து ரூ. 2,00,000/- கடனாக பெற்றுக் கொண்டு அதனை மூன்று மாதத்தில் திருப்பி செலுத்திவிடுவதாக கூறி நான் பணமாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு தங்கள் பெயரிலுள்ள குரும்பூர், பாரதியார் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கணக்கு காசோலை எண் - 699931 மூலம் ரூ 2,00,000/-க்கு காசோலை கொடுத்தீர்கள். மேலும் நான் 8.1.2017ம் தேதி தங்களை நேரிடையாக சந்தித்து கடன் பணத்தை கேட்ட போது தாங்கள் என்னிடம் காசோலையை வங்கியில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினீர்கள். தங்களின் பேச்சினை நம்பி நான் 9.1.2017ம் தேதியன்று நீங்கள் கொடுத்த காசோலையை திருவைகுண்டம் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள எனது கணக்கில் வசூலுக்காக தாக்கல் செய்தேன். ஆனால் தங்கள் வங்கி கணக்கில் போதிய அளவுக்கு பணம் இல்லை என்று குறிப்பிட்டு தாங்கள் கொடுத்த காசோலை 10.1.2017ம் தேதி அன்று திருப்பப்பட்டு விட்டது. தாங்கள் என்னிடம் பெற்ற கடன் தொகை ரூ. 2,00,000-யும் மோசடி செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் தங்கள் வங்கி கணக்கில் போதிய அளவுக்கு பணம் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும் காசோலையை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். தாங்கள் என்னை ஏமாற்றி உள்ளீர்கள். தங்களின் செயல்கள் அனைத்தும் சட்ட விரோதமானதாகும்.
ஆகவே இந்த அறிவிப்பு கண்ட 15 நாட்களுக்குள் காசோலையில் குறிப்பிட்டுள்ள தொகை ரூ. 2,00,000/-யும் என்னிடம் செலுத்தி தங்கள் காசோலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறேன். தவறினால் தங்கள் மீது நான் மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138ன் கீழ் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வேன் என்றும் அதனால் எனக்கு ஏற்படும் சகல செலவுகளுக்கும், நஷ்டத்திற்கும் தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன்.

Wednesday, April 05, 2017

5753 - காசோலை மோசடி வழக்கு சம்மந்தமாக பார்டி இன் பர்சன் ஆஜராவது தொடர்பாக தீர்ப்பு, Crl. Rev. P. No. 1509 of 2007, 22-08-2007, High Court, Kerala, நன்றி ஐயா. Saravanan Palanisamy

 As  long  as  there  is  no  request  before  court  that  the  power-of-attorney-holder  of  the 
complainant  (payee  or  holder-in-due-course)  should  be  permitted  to  conduct  the  prosecution 
without engaging a pleader or legal practitioner, there is no question of Sec. 302 Cr. P.C. coming 
into  operation  obliging  the  complainant himself  to  seek  permission  of  the  Court  to  allow  the 
power-of-attorney-holder to conduct the  prosecution

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wVzVady1aU2xSSnM/view?usp=sharing

Sunday, April 02, 2017

5752 - ஒரு கடனுறுதிச் சீட்டை பூர்த்தி செய்யாமல், கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்துள்ளதை பிரதிவாதி ஒப்புக் கொண்டதால், அந்த கடனுறுதிச் சீட்டிலுள்ள தேதியில் திருத்தம் (Alteration) செய்து கொள்வதற்கு மாற்றுமுறை ஆவணச் சட்டப்படி கடன் கொடுத்தவருக்கு (வாதிக்கு) உரிமையில்லை, SA.No.267 of 2015, 14/11/2016, High Court, Madras, Thanks to Mr. Dhanesh Balamurugan

கடனுறுதி சீட்டு வழக்கு - ஒரு கடனுறுதிச் சீட்டை பூர்த்தி செய்யாமல், கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்துள்ளதை பிரதிவாதி ஒப்புக் கொண்டதால், அந்த கடனுறுதிச் சீட்டிலுள்ள தேதியில் திருத்தம் (Alteration) செய்து கொள்வதற்கு மாற்றுமுறை ஆவணச் சட்டப்படி கடன் கொடுத்தவருக்கு (வாதிக்கு) உரிமையில்லை. கடனுறுதிச் சீட்டில் கண்ட கையெழுத்தை கடன் பெற்றவர் ஒப்புக்கொண்டுள்ளதால், அந்த கடன் தொகையை பெற்றுக் கொண்டார் என்று சட்டப்படி அனுமானிக்க வேண்டும் என்று மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 20 ல் கூறப்பட்டுள்ளது என்றும் அதனால் கடனுறுதிச் சீட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்ற ஒரு கேள்வியை கடன் பெற்றவர் எழுப்ப முடியாது என்பதை ஏற்க முடியாது. மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 20ன்படி, ஒரு நபரால் பூர்த்தி செய்யப்படாமல், கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட கடனுறுதிச் சீட்டை பூர்த்தி செய்து கொள்வதற்கு, கடனுறுதி சீட்டை பெற்றவருக்கு உரிமை உள்ளது என்பது உண்மைதான் என்றாலும் அந்த கடனுறுதிச் சீட்டை பூர்த்தி செய்ததற்கு பின்னர் அதிலுள்ள தேதி அல்லது வாசகங்கள் ஆகியவற்றை கடனுறுதிச் சீட்டை பெற்றவர் அவருடைய விருப்பம் போல் மாற்றிக் கொள்வதற்கு அல்லது திருத்திக் கொள்வதற்கு உரிமை உடையவர் என்று கருத முடியாது. அவ்வாறு ஒரு திருத்தம் செய்யப்பட்டு, அதனை கடனுறுதிச் சீட்டை எழுதி கொடுத்தவர் மறுக்கும்போது அந்த திருத்தம் மா. ஆ. ச பிரிவு 20ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பினை பெறுவதற்குரிய ஒன்றாக ஏற்றுக்கொள்ள இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. SA. NO - 267/2015, DT - 14.11.2016, Annadurai Vs Rajendhiran (2016-6-CTC-752)

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wU3VKVzBqWTdENU0/view?usp=sharing

Saturday, April 01, 2017

5733 - மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118, அசல் வழக்கு எண்.238 / 2014, 13.04.2015, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி .ஏ.உமாமகேஸ்வரி பி.எஸ்ஸி.¸பி.எல்.¸
2015 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் திங்கட்கிழமை
அசல் வழக்கு எண்.238 / 2014
ராமலிங்கம் … வாதி
/எதிர்/
1. உஷா சக்கரவர்த்தி
2. மைனர் உமாமகேஸ்வரி(வயது சுமார் 17)
3. மைனர் செல்வகணபதி (வயது சுமார் 15)
(மைனர் பிரதிவாதிகளுக்காக நீதிமன்ற காப்பாளர் வழக்கறிஞர் செல்வி.எஸ்.ஜெயஅருணி) … பிரதிவாதிகள்
/தீர்ப்புரை/
இவ்வழக்கானது 1 முதல் 3 பிரதிவாதிகள் வசமிருக்கும் இறந்துபோன சக்கரவர்த்தி என்பவரின் சொத்துகளிருந்து இறந்துபோன சக்கரவர்த்தி என்பவர் வாதியிடமிருந்து வாங்கிய கடனுக்காக¸ பிரதிவாதிகள் தாவாத்தொகை ரூ.63¸425.00 ம்¸ அதற்கு அசல் தொகையான ரூ.50¸000 க்கு தாவா தாக்கல் செய்த தேதிமுதல் தீர்ப்பாணைத் தேதிவரை 9% வட்டியும்¸ பின்னிட்டு தொகை முழுவதும் பைசலாகும் தேதிவரை 6% வட்டியுடனும் வாதிக்குக் கொடுக்க வேண்டுமென்றும்¸ மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. வழக்குரையின் சுருக்கம்:
முதல் பிரதிவாதியின் கணவரும்¸ 2 மற்றும் 3 பிரதிவாதிகளின் தகப்பனாருமான¸ சக்கரவர்த்தி என்பவர் 01.10.2011 ஆம் தேதி வாதியிடமிருந்து ரூ.50¸000 கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு 12% வட்டி கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கு ஈடாக ஒரு கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுத்துள்ளார். அதன்படி வாதி கேட்கும்போது வாதியிடமோ¸ வாதியின் ஆணை பெற்றவரிடமோ கடனைக் கொடுத்து பைசல் செய்வதாக கண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி சக்கரவர்த்தி என்பவர் அசல்தொகையோ¸ வட்டியோ எந்த தொகையும் செலுத்தவில்லை. வாதி பலமுறை கடனை பைசல் செய்யக்கோரியும் மேற்படி சக்கரவர்த்தி என்பவர் கடனை பைசல் செய்யவில்லை. எனவே வாதி 6.2.12 ஆம் தேதி வழக்கறிஞர் மூலம் சக்கரவர்த்திக்கு அறிவிப்பு அனுப்பினார். மேற்படி அறிவிப்பை 10.2.12 ஆம் தேதி பெற்றுக்கொண்டு சக்கரவர்த்தி என்பவர் பதிலறிவிப்பும் அனுப்பவில்லை¸ கடனையும் பைசல் செய்யவில்லை. பின்னிட்டு 16.11.12 ஆம் தேதி மேற்படி சக்கரவர்த்தி என்பவர் 1 முதல் 3 பிரதிவாதிகளை வாரிசுகளாக விட்டுவிட்டு இறந்துவிட்டார். வாதி¸ பிரதிவாதிகளை அணுகி மேற்படி கடன்தொகையை பைசல் செய்யக்கோரியும் இதுநாள்வரை அவர்கள் பைசல் செய்யவில்லை. அதனால் வாதி¸ 22.9.14 ஆம் தேதி முதல் பிரதிவாதிக்கு அறிவிப்பு அனுப்பினார். மேற்படி சக்கரவர்த்தி என்பவர் குடும்ப செலவுக்காகவும்¸ மளிகை வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும் மேற்படி கடனை வாங்கினார். எனவே மேற்படி கடன் இந்த பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தும். எனவே மேற்படி சக்கரவர்த்தி வாங்கிய அசல்தொகையை வட்டியுடன் கோரி இவ்வழக்கு 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3) 2 மற்றும் 3 மைனர் பிரதிவாதிகளுக்காக நீதிமன்ற காப்பாளர் தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:
இவ்வழக்கில் முதல் பிரதிவாதி தோன்றாத்தரப்பினராகிவிட்டார். 2¸3 பிரதிவாதிகள் மைனர் என்பதால் நீதிமன்றம் மூலம் நீதிமன்ற காப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காப்பாளர் தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரையில்¸ வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்று. வழக்குரையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் உண்மைக்கு மாறானவை. இந்த மைனர் பிரதிவாதிகளின் தந்தையான சக்கரவர்த்தி என்பவர் வாதியிடம் கடன் வாங்கியதாக கூறுவதும்¸ வழக்குரையில் கூறப்பட்டுள்ள தொகைகளும் தவறாகும். இந்த மைனர் பிரதிவாதிகளின் தந்தை குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறுவது தவறு. தாவா கடனுறுதிச்சீட்டு குறித்து இந்த பிரதிவாதிகளுக்கு ஏதும் தெரியாது. மேலும் வாதி அனுப்பியதாக கூறும் நோட்டீஸ் குறித்தும் இந்த பிரதிவாதிகளுக்கு தெரியாது. எனவே இந்த மைனர் பிரதிவாதி மேற்படி கடனை திருப்பி செலுத்த கடமைப்பட்டவரல்ல. மைனர் பிரதிவாதிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். எனவே இந்த வழக்கு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும்.
4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 17.03.2015 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதா¸ செல்லத்தக்கதா¸ தகுந்த மறுபயன் கொண்டதா?
2) தாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா?
3) வாதி வழக்குரையில் கோரியுள்ள தொகை மற்றும் அதற்கான பின்வட்டி அவருக்கு கிடைக்கத்தக்கதா?
4) வாதிக்கு கிடைக்கக்கூடிய இதர பரிகாரங்கள் என்ன?
5. இவ்வழக்கில் வாதிதரப்பில் வா.சா.1 மற்றும் வா.சா.2 ஆகிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதிகள்தரப்பில் சாட்சிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை¸ சான்றாவணங்கள் ஏதும் குறியீடு செய்யப்படவில்லை.
6) வழக்கெழு வினாக்கள் 1 மற்றும் 3 :
வாதிதரப்பில் தங்களது வாதத்தின்பொழுது¸ முதல் பிரதிவாதியின் கணவரும்¸ 2 மற்றும் 3 பிரதிவாதிகளின் தகப்பனாருமான¸ சக்கரவர்த்தி என்பவர் 01.10.2011 ஆம் தேதி வாதியிடமிருந்து ரூ.50¸000 கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு 12% வட்டி கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கு ஈடாக ஒரு கடனுறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்துள்ளார். அதன்படி வாதி கேட்கும்போது வாதியிடமோ¸ வாதியின் ஆணை பெற்றவரிடமோ கடனைக் கொடுத்து பைசல் செய்வதாக கண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி சக்கரவர்த்தி என்பவர் அசல்தொகையோ¸ வட்டியோ எந்த தொகையும் செலுத்தவில்லை. வாதி பலமுறை கடனை பைசல் செய்யக்கோரியும் மேற்படி சக்கரவர்த்தி என்பவர் கடனை பைசல் செய்யவில்லை. எனவே வாதி 6.2.12 ஆம் தேதி வழக்கறிஞர் மூலம் சக்கரவர்த்திக்கு அறிவிப்பு அனுப்பினார். மேற்படி அறிவிப்பை 10.2.12 ஆம் தேதி பெற்றுக்கொண்டு சக்கரவர்த்தி என்பவர் பதிலறிவிப்பும் அனுப்பவில்லை¸ கடனையும் பைசல் செய்யவில்லை. பின்னிட்டு 16.11.12 ஆம் தேதி மேற்படி சக்கரவர்த்தி என்பவர் 1 முதல் 3 பிரதிவாதிகளை வாரிசுகளாக விட்டுவிட்டு இறந்துவிட்டார். வாதி¸ பிரதிவாதிகளை அணுகி மேற்படி கடன்தொகையை பைசல் செய்யக்கோரியும் இதுநாள்வரை அவர்கள் பைசல் செய்யவில்லை. அதனால் வாதி¸ 22.9.14 ஆம் தேதி முதல் பிரதிவாதிக்கு அறிவிப்பு அனுப்பினார். மேற்படி சக்கரவர்த்தி என்பவர் குடும்ப செலவுக்காகவும்¸ மளிகை வியாபாரத்தை மேம்படுத்தவும் மேற்படி கடனை வாங்கினார். எனவே மேற்படி கடன் இந்த பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தும். எனவே மேற்படி சக்கரவர்த்தி வாங்கிய அசல்தொகையை வட்டியுடன் கோரி இவ்வழக்கு 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. மைனர் பிரதிவாதிகள் தரப்பில் தங்களது வாதத்தின்பொழுது¸ வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்று. வழக்குரையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் உண்மைக்கு மாறானவை. இந்த மைனர் பிரதிவாதிகளின் தந்தையான சக்கரவர்த்தி என்பவர் வாதியிடம் கடன் வாங்கியதாக கூறுவதும்¸ வழக்குரையில் கூறப்பட்டுள்ள தொகைகளும் தவறாகும். இந்த மைனர் பிரதிவாதிகளின் தந்தை குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறுவது தவறு. தாவா கடனுறுதிச்சீட்டு குறித்து இந்த பிரதிவாதிகளுக்கு ஏதும் தெரியாது. மேலும் வாதி அனுப்பியதாக கூறும் நோட்டீஸ் குறித்தும் இந்த பிரதிவாதிகளுக்கு தெரியாது. எனவே இந்த மைனர் பிரதிவாதி மேற்படி கடனை திருப்பி செலுத்த கடமைப்பட்டவரல்ல. மைனர் பிரதிவாதிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். எனவே இந்த வழக்கு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென வாதிடப்பட்டது.
7) வாதிதரப்பில் தங்களது வழக்கை நிரூபிக்கும் வகையில் வாதியானவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். மேலும் வாதிதரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா.ஆ.1 என்பது 01.10.2011 ஆம் தேதி வாதிக்கு சக்கரவர்த்தி எழுதிக்கொடுத்த அசல் பிராம்சரி நோட்டு ஆகும். வா.சா.ஆ.2 மற்றும் வா.சா.ஆ.3 என்பது 06.02.2012 ஆம் தேதி வாதி¸ சக்கரவர்த்திக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு மற்றும் அதனை அவர் பெற்றுக்கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையாகும். வா.சா.ஆ.4 மற்றும் வா.சா.ஆ.5 என்பது 22.09.2014 ஆம் தேதி வாதி¸ முதல் பிரதிவாதிக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு மற்றும் அதனை முதல் பிரதிவாதி வாங்க மறுத்து திரும்பி வந்த உறையாகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில்¸ தாவா கடனுறுதிச்சீட்டை 1.10.11 ஆம் தேதி சக்கரவர்த்தி என்பவர் தன்னிடம் ரூ.50¸000 ரொக்கமாக வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக தன் பெயருக்கு பண்ருட்டியில் எழுதிக்கொடுத்ததாகவும்¸ தாவா கடனுறுதிச்சீட்டு அச்சிட்ட படிவத்தில் இருந்ததாகவும்¸ அதனை சரவணன் என்பவர் பூர்த்தி செய்ததாகவும்¸ சாட்சிகள் மகாலிங்கம் மற்றும் சண்முகம் ஆகியோர் கையொப்பம் செய்ததாகவும்¸ சரவணன் பூர்த்தி செய்து படித்து காண்பித்தபின்¸ வாசகங்கள் சரியென ஒப்புக்கொண்டு சாட்சிகள் முன்னிலையிலும்¸ தன் முன்னிலையிலும் சக்கரவர்த்தி கடனுறுதிச்சீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டாம்பின்மேல் ஒரு கையெழுத்தும்¸ அதன் கீழ் ஒரு கையெழுத்தும் அதன் கீழே கைரேகையும் செய்ததாகவும்¸ அவ்வாறு அவர் செய்ததை தானும்¸ சாட்சிகள் மற்றும் பூர்த்தி செய்தவரும் பார்த்ததாகவும்¸ சாட்சிகள் கையெழுத்து செய்ததை தானும்¸ சக்கரவர்த்தி மற்றும் சரவணன் ஆகியோர் பார்த்ததாகவும்¸ சரவணன் பூர்த்தி செய்ததை அனைவரும் பார்த்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். அவர் தனது குறுக்கு விசாரணையில்¸ முதல் பிரதிவாதி மேற்படி கடனை பைசல் செய்துவிடுவதாக கூறியதால் தான் உடனே இவ்வழக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும்¸ மைனர் பிரதிவாதிகளுக்கு மேற்படி கடன் குறித்து தெரியாது என்றாலும்¸ மேற்படி கடன் மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்றாலும் சரியல்ல என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.
8) வா.சா.2 ஆக சண்முகம் என்பவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சாட்சியத்தில் வா.சா.ஆ.1 எழுதும்போது தான் அதில் தான் இரண்டாவது சாட்சியாக கையெழுத்து போட்டதாகவும்¸ தாவா கடனுறுதிச்சீட்டு அச்சிட்ட படிவத்தில் இருந்ததாகவும்¸ அதனை சரவணன் என்பவர் பூர்த்தி செய்ததாகவும்¸ தானும்¸ மகாலிங்கம் என்பவரும் வா.சா.ஆ.1-ல் சாட்சி கையொப்பம் செய்ததாகவும்¸ சரவணன் பூர்த்தி செய்து படித்து காண்பித்தபின்¸ வாசகங்கள் சரியென ஒப்புக்கொண்டு சாட்சிகள் முன்னிலையிலும்¸ வாதி முன்னிலையிலும் சக்கரவர்த்தி கடனுறுதிச்சீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டாம்பின்மேல் ஒரு கையெழுத்தும்¸ அதன் கீழ் ஒரு கையெழுத்தும் அதன் கீழே கைரேகையும் செய்ததாகவும்¸ அவ்வாறு அவர் செய்ததை வாதியும்¸ சாட்சிகள் மற்றும் பூர்த்தி செய்தவரும் பார்த்ததாகவும்¸ தான் சாட்சி கையொப்பம் செய்ததை மற்றொரு சாட்சியும்¸ வாதியும்¸ சக்கரவர்த்தி மற்றும் சரவணன் ஆகியோர் பார்த்ததாகவும்¸ சரவணன் பூர்த்தி செய்ததை அனைவரும் பார்த்ததாகவும்¸ சக்கரவர்த்தி ரூ.50¸000 ரொக்கமாக வாதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
9) இவ்வழக்கில் பிரதிவாதிகள்தரப்பில் சாட்சிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை¸ சான்றாவணங்களும் குறியீடு செய்யப்படவில்லை.
10) மேலும் கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ சரியான மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது வாதியால் நிரூபிக்கப்படும்பட்சத்தில் அந்த நிரூபணமானது பிரதிவாதியால் பொய்ப்பிக்கப்படும்வரை மெய்ப்பிக்கப்பட்டதாகவே கருதப்படும். அந்த வகையில் இந்த வழக்கை நிரூபிக்கும் வகையில் வாதி¸ தன்னை வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதில் சாட்சி கையெழுத்து போட்ட சண்முகம் என்பவர் வா.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. ஆனால் பிரதிவாதி தரப்பில் எவ்வித சாட்சிகளும் விசாரிக்கப்படவில்லை. மேலும்¸ கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை ஒருவர் தாவா கடனுறுதிச்சீட்டில் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டாலே தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதாக கருதப்படும். மேற்கொண்டு விசாரிக்கப்படும் சாட்சிகள் அனைத்துமே அதனை வலுப்படுத்தும் சாட்சிகளாகும். எனவே கடனுறுதிச்சீட்டு உண்மையானது என்பதை வாதி தனது தரப்பு சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் வாதியின் கட்சியை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை மறுத்துரைக்கும் பிரதிவாதிகள்தான் அவரால் சொல்லப்படும் சூழ்நிலைகளை நிரூபிக்கக் கடமைப்பட்டவர். ஆகவே நிரூபிக்கும் சுமையானது வாதியிடமிருந்து பிரதிவாதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் பிரதிவாதிதரப்பில் எவ்வித சாட்சிகள் கொண்டோ¸ சான்றாவணங்கள் கொண்டோ தங்களது தரப்பை நிரூபிக்கவில்லை. எனவே மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118 ன்படியும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 வரையிலான சான்றாவணங்கள் மூலமும்¸ வா.சா.1 மற்றும் வா.சா.2 சாட்சிகளின் சாட்சியங்களின் மூலமும் தாவா கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது உண்மையானது¸ அது செல்லத்தக்கது¸ அது தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்று முடிவுசெய்து எழுவினா எண்.1-க்கும்¸ அதன் அடிப்படையில் வாதி தாவாவில் கோரியவாறு தொகையை வட்டியுடன் பெற அருகதையுடையவர் என எழுவினா எண்.2-க்கும் இந்நீதிமன்றம் முடிவு செய்து மேற்கண்ட வகையில் எழுவினாக்களுக்கு தீர்வு காணப்பட்டு வாதிக்கு ஆதரவாக தீர்மானிக்கப்படுகிறது.
11) எழுவினா எண்.3 :
2¸3 ஆம் பிரதிவாதிகள் தரப்பில் 2¸3 ஆம் பிரதிவாதிகள் மைனர் என்பதால் அவர்களது தகப்பனார் வாங்கிய கடன்¸ அவர்களைக் கட்டுப்படுத்தாது என வாதம் செய்யப்பட்டது. இதுகுறித்து பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ தாவா கடனுறுதிச்சீட்டில் குடும்ப செலவுக்காகவும்¸ வியாபார அபிவிருத்திக்காகவும் கடன் பெறுவதாக கண்டு எழுதப்பட்டிருக்கிறது. எனவே தாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளை கட்டுப்படுத்தாது என்றாலும்¸ இவ்வழக்கில் தாவா கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுத்த சக்கரவர்த்திக்கு சொத்து பாத்தியம் இருப்பதாக வாதிதரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை பிரதிவாதிகள் தரப்பில் மறுக்கவில்லை. எனவே இவ்வழக்கில் சக்கரவர்த்தியின் மனைவியான முதல் பிரதிவாதி ஒருதலைபட்சமாகியிருந்தபோதிலும்¸ 2 மற்றும் 3 ஆம் பிரதிவாதிகள் இளவர்களாக இருந்தபோதிலும்¸ சக்கரபாணிக்கு பாத்தியமான சொத்தை 1 முதல் 3 பிரதிவாதிகள் அனுபவித்து வரும் நிலையில்¸ மேற்படி சக்கரவர்த்திக்கு பாத்தியமான சொத்திலிருந்து சக்கரவர்த்தி பெற்ற கடனை அடைக்க 1 முதல் 3 பிரதிவாதிகள் கடமைப்பட்டவர்கள் என்றே இந்நீதிமன்றம் முடிவு செய்து எழுவினா எண்.3 பிரதிவாதிகளுக்கு எதிராக தீர்வு காணப்படுகிறது.
12) எழுவினா 4 :
வாதி வழக்குரையில் கோரியுள்ள பரிகாரங்கள் எழுவினா 3 ன் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் வாதிக்கு வேறு எந்த பரிகாரங்களும் கிடைக்கத்தக்கதல்ல என இந்த எழுவினாவிற்கு விடை காணப்படுகிறது.
13) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ வாதிக்கு¸ 1 முதல் 3 பிரதிவாதிகள் தங்கள் வசமிருக்கும் இறந்துபோன சக்கரவர்த்தியின் சொத்துகளிருந்து சக்கரவர்த்தி வாங்கிய கடனுக்காக தாவாத்தொகை ரூ.63¸425.00 ம்¸ அதற்கு அசல் தொகையான ரூ.50¸000 க்கு தாவா தாக்கல் செய்த தேதிமுதல் தீர்ப்பாணைத் தேதிவரை 9% வட்டியும்¸ பின்னிட்டு தொகை முழுவதும் பைசலாகும் தேதிவரை 6% வட்டியுடனும் கொடுக்க வேண்டுமென செலவுத்தொகையுடன் அனுமதித்து வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது.

Friday, June 05, 2015

2004 - காசோலை மோசடி வழக்கு, உயர்நீதிமன்றம், சென்னை, 24-06-2014

காசோலை மோசடி வழக்கில், ஒருவரை தொடர்புபடுத்த வேண்டுமாயின், அவர் காசோலையை கையொப்பமிட்டு வழங்க அனுமதிக்கப்பட்டவரா? என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்!

நன்றி ஐயா. S. T. அரங்கநாதன், சட்டக்கதிர்.