Showing posts with label RTI - கூட்டுறவு வங்கி. Show all posts
Showing posts with label RTI - கூட்டுறவு வங்கி. Show all posts

Wednesday, April 13, 2022

6864 - சர்வே எண் தொடர்பாக, கூட்டுறவு கடன் வங்கியில் அடமானம் வைத்த கோப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு, TNSIC, 21.01.2021

 https://drive.google.com/file/d/1LcEMromtqcG6RatNx7AC2BFhia3KL2lT/view?usp=sharing

6860 - 2000 முதல் 2016 ஆண்டு வரையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் தள்ளுபடி தொடர்பான கோப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு, TNSIC, 21.01.2021

 https://drive.google.com/file/d/1FLDdAt43UzPEBvkR-hPnxdRbdS13t0jw/view?usp=sharing

6855 - தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், த. அ. உ. ச. 2005-ன் பிரிவு 2(h)(d)(ii)-ன் கீழ், பொது அதிகார அமைப்பிற்குள் வராது என்பதை, ஏற்கவில்லை, TNSIC, 21.01.2021

 https://drive.google.com/file/d/1HJrffxB9kiijc26155kU7IViOQRPF1he/view?usp=sharing

Saturday, November 30, 2019

6051 - கூட்டுறவு சங்கத்தில், கடன் பெற்றவர் அந்த கிராமத்தில் வசிக்கவில்லை, நன்றி ஐயா. Bvenkatesh Prabu

6050 - தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983-ன் பிரிவு 82(1)-ன் கீழ் அறிவிப்பு அழைப்பாணை, நன்றி ஐயா. Bvenkatesh Prabu

6049 - கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, பிரிவு 82-ன் கீழ், ஆய்வு பணி முடிந்து, அறிக்கை பெறப்பட்டபின், நடவடிக்கை மேற்கொள்ளப்படும், நன்றி ஐயா. Bvenkatesh Prabu

6048 - கூட்டுறவு சங்கத்தின் மீது அளித்த புகார் மனுவின் அடிப்படையில், பிரிவு 82-ன் கீழ், ஆய்வு அலுவலரால், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, நன்றி ஐயா. Bvenkatesh Prabu

6034 - கூட்டுறவு சங்க அலுவலகத்தில், குந்தகம் ஏற்படா வண்ணம், கோப்புகளை ஆய்வு செய்து, குறிப்பு எடுத்துக் கொள்ள உத்தரவு

Wednesday, July 19, 2017

5850 - ஆகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு 9017/2013 படி கூட்டுறவு சங்கங்கள் விலக்களிக்கப்படவில்லை, நன்றி ஐயா. Deepak Perumbol Bhaskar

சிவில் அப்பீல் 9017/2013 உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக பொது அதிகார அமைப்பாக கருத முடியாது எனவும் ஆனாலதனை கட்டுப்படுத்தும் துறை மூலமோ அல்லது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மூலமோ தகவல் கோரலாம் என்று அதே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு 9017/2013 படி கூட்டுறவு சங்கங்கள் விலக்களிக்கப்படவில்லை.
அவ்வாறு உங்களுக்கு விலக்களிக்கப்பட்டது என்று பதில் அளித்தால் , இவ்வாறு விளக்கி மேல்முறையீடு செய்யலாம். இதனை மெழுகேற்றிக்கூட செய்யலாம்.
“கேரள மாநிலத்தில் தளப்பாளம் சேவை கூட்டுறவு சங்கத்தை பொது அதிகார அமைப்பாக அந்த மாநில அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கேரளா உயர்நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியது.
அதன் பிறகு அந்த கூட்டுறவு சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரனை செய்த உச்ச நீதிமன்றம் கேரளா உயர்நீதிமன்ற உத்திரவை ரத்து செய்தது. (இதனை QUASH ORDER) என்று குறிப்பிடுவார்கள். அவை பொது அதிகார அமைப்பு என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து மட்டுமே செய்தது. அவை விளக்கலிக்கப்பட்டன என்று குறிப்பிடவில்லை.
மேலும் இதே தீர்ப்பில் பக்கம் 53,54,55 இல் , கூட்டுறவு சங்கமானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அல்லது எதாவது ஒரு அரசு துறையால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே அந்த துறை மூலம் தகவல் கோரலாம் என்று வழிகாட்டியுள்ளது.
இது புதிய வழிகாட்டி அல்ல. தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலேயே பிரிவி 2(f) இதனை வலியுறுத்துகின்றது. இந்த பிரிவின் மூலம் ஒரு தனியார் அமைப்பை அதனை கட்டுப்படுத்தும் அரசு துறை மூலம் தகவல் கோரலாம்.
ஆகவே நான் கோரிய தகவல்கள்________துறையினரால் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஆகும். நான் கோரிய அனைத்து ஆவணங்களும் ________(துறை) அலுவலரால் ஆய்வு செய்யப்பட வேண்டியவை. ஆகவே எனது முதல் மேல்முறையீட்டு மனு மீது உரிய விசாரணை நடத்தி கோரிய தகவல்களை பிரிவு 7(6) இன் படி செலவு தொகையின்றி அளிக்க கேட்டுக்கொள்கின்றேன்"