Showing posts with label RTI - ஓய்வூதியம். Show all posts
Showing posts with label RTI - ஓய்வூதியம். Show all posts

Sunday, March 27, 2016

5150 - அனைத்து வழக்குகளிலும் நேரில் ஆஜராகி வென்ற, 76 வயது முதியவர், திரு. வேணுநாதன் ஐயா அவர்கள், உயர்நீதிமன்ற உத்தரவுகளுடன். நன்றி ஐயா. TK Raman அவர்கள்

அனைத்து வழக்குகளிலும் நேரில் ஆஜராகி வென்றார்: ஓய்வூதியத்துக்காக 4 ஆண்டுகள் போராடிய ‘திண்ணை’ தாத்தா- நீதிபதிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி


சொந்த மகன்களால் புறக்கணிக்கப் பட்டு திண்ணையில் வசிக்கும் 76 வயது முதியவருக்கு ஓய்வூதியம் வழங்காமல் வழக்கு மேல் வழக்கு போட்டு 4 ஆண்டுகளாக தாமதப்படுத்திய அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தின் கடுமையால் மொத் தமாக ஓய்வூதியம் வழங்கினர்.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் என்.வேணுநாதன் (76). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். வள்ளியம்மாள் சில ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறப்புக்குப் பிறகு மகன் கள் கவனிக்காததால், வீட்டை விட்டு வெளியேறி சந்திரபாளையத் தில் உள்ள ஒருவரது வீட்டின் திண்ணையில் குடியேறினார்.

தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப் பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகி யோரிடம் 2013-ல் மனு அளித்தார். அவருக்கு ஓய்வூதியம் வழங்க அதிகாரிகள் மறுத்ததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். அவரது மனுவைப் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் 2-வது முறையாக மீண் டும் நீதிமன்றத்தின் படியேறினார்.

கலங்கிய முகம், கந்தலான உடை, கைத்தடியுடன் நீதிமன்றத் தில் நேரில் ஆஜராகி, ‘சொந்த மகன்களால் விரட்டியடிக்கப்பட்டு, ஒருவேளை சாப்பாட்டுக்கே வழி யின்றி திண்ணையில் வாழ்வதாக’ நீதிபதியிடம் கண்ணீர் மல்க முறை யீடு செய்தார். அவரது கோரிக் கையை ஏற்று, மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்க 11.9.2014-ல் தனி நீதிபதி உத்தர விட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது தள்ளுபடி யானதால் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி யானது. இதனிடையே நீதிமன்றத் தின் உத்தரவை நிறைவேற்றா ததால் மதுரை ஆட்சியர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் மீது நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற் கொள்ளக்கோரி வேணுநாதன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, முதியோர் உதவித்தொகை வழங்க மறுக்கும் அதிகாரிகள் செயலில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வேணுநாத னுக்கு இதுவரை வழங்க வேண்டிய முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.80,500-க்கான காசோலையுடன் ஆஜராகினர் அதிகாரிகள். அந்த காசோலையை வேணுநாதனிடம் நீதிபதிகள் நேரில் வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட அவர், கண்ணீர் மல்க நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

முதியோர் ஓய்வூதியத்துக்கான 4 ஆண்டுகால பேராட்டம் முடிவுக்கு வந்தது தொடர்பாக வேணுநாதன் கூறும்போது, ‘‘3 மகன்கள் இருந் தும் பலனில்லை. கோயில் கோயி லாக சென்று பிரசாதத்தை சாப் பிட்டு வாழ்கிறேன். சில மாதங் களுக்கு முன்பு கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டது. அன்றிலிருந்து ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வருகி றேன். இந்தப் பணத்தை மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துவேன்” என்றார்.

ஓய்வூதியத்துக்காக வேணு நாதன் 2 ரிட் மனுக்களும், ஒரு நீதி மன்ற அவமதிப்பு மனுவும் தாக் கல் செய்தார். அரசு சார்பில் மேல் முறையீடு, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்திலும் வேணுநாதன் வழக் கறிஞர் வைக்காமல் அவரே ஆஜ ராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.


Monday, September 14, 2015

2987 - ஓய்வூதியம் தொடர்பான தகவல் சட்ட மனு, நன்றி ஐயா. Sekar Krishnasamy

80 வயது ஏழை முதியவரின் ஓய்வூதியம் காரணமின்றி நிறுத்தப்பட்டது. மறுநாள் RTI யில்...

1. எங்கள் பகுதியில் தங்களின் பணிக்காலத்தில் ஓய்வூதியம் வழங்கிய நபர்கள் பட்டியல் விவரம்
2.அவர்களில் தங்களால் தகுதியற்றவர் என தற்போது ஓய்வூதியம் வழங்காமல் நிறுத்தப் பட்டவர் பட்டியல் விவரம்
3. தவறான நபர்களுக்கு தங்களால் இவ்வளவு ஆண்டுகளாக வழங்கப்பட்ட தொகைக்கு உங்களுக்கு தணிக்கையில் உங்களைப் பொருப்பாக்கி உங்களுக்கு தண்டத்தீர்வை அறிவிப்பு தணிக்கையாளரால் செய்யப்பட்ட விவரம்
4. இது தொடர்பாக தங்களுக்கு தண்டத்தீர்வை
(SURCHARGE) அறிவிப்பு செய்யும் அதிகாரம் பெற்ற அலுவலர் முகவரி

Tuesday, May 19, 2015

1826 - ஓய்வூதியத் திட்டங்கள்

ஓய்வூதியத் திட்டங்கள்:

  • மத்திய/மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் VAOவின் பங்கு குறிப்பிடத்தக்கது.
  • சமூக நலத்துறையின் கீழ் இயக்கி வரும் முதியோர் ஓய்வூதியத் திட்டங்களை வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.
    1) முதியோர் ஓய்வூதியத் திட்டம்
    2) ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம்
    3) ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம்
    4) ஆதரவற்ற வேளாண்மைத் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம்
    5) கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம்

    1. முதியோர் உதவித் திட்டம் (சாதாரணம்)

  • இந்தத் திட்டம் அரசு ஆணை எண் 73, நிதித்(ஓய்வூதியம்) துறை, நாள் 22-1-1962-இன் படி வழங்கப்பட்டு வருகிறது.
  • 65 வயது நிறைவு பெற்றவர், வருமானம் ஏதுமில்லை. சொத்து மதிப்பு ரூ.5000-க்கு, மிகாமல் இருக்க வேண்டும்.
  • பிச்சைக்காரராக இருக்கக் கூடாது.
  • வயது வந்த மகன் இருக்கக் கூடாது.
  • சுயமாக வேலை செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருத்தல் வேண்டும்.
  • மைய அரசின் நிதி: 75 ரூபாயும் மாநில அரசின் நிதி: 125 ரூபாயும் சேர்த்து ரூ. 200 வழங்கப்பட்டது.
  • தற்போது ரூ. 400லிருந்து ரூ. 1000 வரை வழங்கப்படுகிறது.

    2. முதியோர் உதவித் திட்டம் (குருடர், பக்கவாதம், கை, கால் இழந்தவர்)

  • வயது வரம்பு – 60 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். வருமானம் – ஏதும் இல்லை. சொத்து மதிப்பு ரூ.1000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பிச்சைக்காரராக இருத்தல் கூடாது.
  • வயது வந்த மகன் இருக்கக் கூடாது.
  • சுயவேலை செய்ய இயலாதவராய் இருத்தல் வேண்டும்.
  • மத்திய அரசின் நிதி ஏதும் இல்லை. முழுவதும் மாநில அரசே வழங்குகிறது(ரூ.200). தற்போது ரூ. 400-லிருந்து ரூ. 1000 வரை வழங்கப்படுகிறது.

    3. உடல் ஊனமுற்றோர் உதவித் திட்டம்:

  • அரசு ஆணை (பல்வகை) எண் 1402 நிதித்துறை நாள் 6-11-1974-இன் படி வழங்கப்பட்டு வருகிறது.
  • வயது வரம்பு – 45 வயது நிறைவு. வருமானம் ஏதும் இல்லை.
  • சொத்து மதிப்பு ரூ.1000-ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பிச்சைக்காரராக இருத்தல் கூடாது.
  • வயது வந்த மகன் இருக்கக் கூடாது.
  • சுயமாய் வேலை செய்து பொருள் ஈட்டும் தன்மையற்றவராய் இருக்க வேண்டும்.
  • மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மாநில அரசு ரூ.400 வழங்குகிறது.
  • தற்போது ரூ.400-லிருந்து ரூ.1000-வரை உயர்ந்துள்ளது.

    4. விதவை ஓய்வூதியத் திட்டம்:

  • அரசு ஆணை (பல்வகை) எண் 507 நிதித்துறை, நாள் 27-5-1975 – இன்படி வழங்கப்பட்டு வருகிறது.
  • வயது வரம்பு இல்லை. சொத்தின் மதிப்பு ரூ.1000/-க்குள் இருக்க வேண்டும்.
  • பிச்சைக்காரராக இருத்தல் கூடாது.
  • வயது வந்த மகன் இருந்தாலும் வருமானம் ஏதும் இல்லாதிருக்க வேண்டும்.
  • மறுமணம் செய்திருத்தல் கூடாது.
  • மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை. மாநில அரசு ரூ.400 வழங்குகிறது. தற்போது ரூ.400-லிருந்து ரூ.1000-வரை உயர்ந்துள்ளது.

    5. ஆதரவற்ற வேளாண்மைத் தொழிலாளர் ஓய்வுதியத் திட்டம்

  • அரசாணை பல்வகை எண் 1465. சமூக நலத்துறை நாள் 3-05-1984-இன்படி வழங்கப்பட்டு வருகிறது.
  • வயது வரம்பு 30. வருமானம் ஏதுமில்லை.
  • பிச்சைக்காரராக இருத்தல் கூடாது.
  • மறுமணம் செய்திருக்கக் கூடாது.
  • 5-ஆண்டுகளுக்கு மேல் கணவனை பிரிந்திருத்தல் வேண்டும்.
  • உரிமையியல் நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்துப் பெற்றிருக்க வேண்டும்.
  • வருமானம் ஏதுமின்றி வயது வந்த மகன்கள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம்.
  • மைய அரசு நிதி வழங்குவதில்லை. மாநில அரசு ரூ.400 வழங்குகிறது. தற்போது ரூ.400-லிருந்து ரூ.1000-வரை உயர்ந்துள்ளது.

    இலவச வேட்டி/சேலை வழங்குதல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வழங்கும் பிற உதவிகள்

  • பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்குச் சேலையும் வழங்கப்பட வேண்டும் என்று அரசாணை எண் 995, நிதித்துறை, நாள் 18.07.1979, 459 மற்றும் சமூக நல மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 15-10-1991-இன் படி வழங்கப்படுகிறது.

    2. முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவச சத்துணவு மற்றும் இலவச அரிசி வழங்குதல் :

  • அரசு ஆணை எண்.771, சமூக நலத்துறை, நாள் 6-10-1980-இன் படி முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு 1-11-1990 முதல், வாரத்திற்கு தலா ஒரு கிலோ இலவச அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது.
  • அரசாணை எண் 394, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 5-01-1991-இன் படி முதியோர் ஓய்வூதியம் பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் 15-9-1991 முதல் கீழே கண்ட அளவுகளின்படி இலவச அரிசி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
  • சத்துணவுக்கூடங்களில் உணவு உட்கொள்ளாதவர்களுக்கு வாரம் ஒருமுறை தலா 1-கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.
  • சத்துணவுக்கூடங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு வாரம் ஒரு முறை தலா ½ கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.

    தற்போது

  • அரசாணை எண் 288 சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை, நாள் 29-6-1997-இன் படி வாரம் ஒரு முறை அரிசி வழங்கும் முறை திருத்தப்பட்டு மாதம் ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.
  • அதன்படி சத்துணவுக் கூடங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு மாதம் 2 கிலோ இலவச அரிசியும் சத்துணவுக் கூடங்களில் உணவு உட்கொள்ளாதவர்களுக்கு மாதம் 4 கிலோ-இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது.

    அன்னபூர்ணா திட்டம்

  • அரசானை எண் 31, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம், நாள் 04-03-2002-இன்படி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் ஆதரவற்ற முதியோர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளில் மிகவும் வயது முதிர்ந்த நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியம் மைய அரசு மானியத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
  • அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மேலே குறிப்பிட்ட 2 (அ) 4 கிலோ அரிசி மற்றும் இலவச மதிய உணவு கிடையாது.

    VAO-வின் கடமைகளும் பொறுப்புகளும்

  • ஓய்வுதியம் வேண்டி மனுக்கள் அனுப்பப்படும் போது, அம்மனுக்கள் மீது VAO தீர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    விசாரணையின் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்

  • மனுதாரர் குறிப்பிட்ட கிராமத்தைச் சார்ந்தவர்தானா?
  • மனுதாரர் ஓய்வூதியம் பெறுவதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் (வயது வரம்பு, சொத்து மதிப்பு மற்றும் பிற நிபந்தனைகள்) பெற்றுள்ளாரா?
  • மனுதாரர் உண்மையிலேயே ஆதரவற்றவரா?
  • எப்படி அவர் அன்றாட வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார்?
  • வழங்கப்படும் ஓய்வூதியம்தான் அவருடைய வாழ்வாதாரமாக இருக்குமா?
  • மனுதாரரரிடம் நேரடி விசாரணை வாக்குமூலம் மற்றும் இரு சாட்சிகளில் கையொப்பம் ஆகியவற்றைப் பெற வேண்டும்.

    தமிழ்நாடு துயர் துடைப்புத் திட்டம்

  • அரசாணை(நிலை) எண் 479 நிதித்துறை, நாள் 23-05-1989-இன் படி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின்படி ஆண்டு வருமானம் ரூ.5000-க்குட்பட்டு பொருளீட்டும் குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ. 2000 வழங்கப்பட்டு வந்தது.
  • அரசாணை (நிலை) எண் 726, வருவாய்த் துறை, நாள் 05-08-1986-இல் ஆண்டு வருமானம் ரூ. 7200 வரையுள்ள குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என ஆணையிட்டது.
  • தற்போது அரசாணை (நிலை) எண். 11, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் : 22-01-1999-இன்படி ரூ. 10,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.

    VAO-வின் கடமைகள்

  • மனுதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளனரா என VAO விசாரித்து தங்கள் வாக்குமூலத்தை அறிக்கையாக தர வேண்டும்.
  • குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.7,200-க்கு மிகாமல் உள்ளதா?
  • குடும்பத் தலைவரின் இறப்புப் பதிவேட்டில் இறப்பு பதியப்பட்டுள்ளதா? இறப்பிற்குரிய சான்றாவணம் உள்ளதா?
  • கிராமத்திலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற வேண்டும்.
  • மனுதாரரிடம் நேரடு விசாரணை வாக்குமூலம் மற்றும் இரு சாட்சிகளிடம் கையொப்பம் பெற வேண்டும்.
  • மனு, குடும்பத்தலைவர் இறந்த 6 மாதங்களுக்குள் பெறப்பட்டுள்ளதா? (அ) 1 வருடத்திற்குள் பெறப்பட்டுள்ளதா? 6 மாதங்களுக்கு மேல் இருப்பின், தாமதத்திற்கான காரணத்தை மனுதாரரிடம் விசாரித்து அறிந்து, பின்னர் மாவட்ட ஆட்சியரின் தாமத பொறுத்தல் ஆணை பெறப்பட வேண்டும்.
  • துயர்துடைப்பு நிவாரணம் வழங்கப்படும் போது வட்டாட்சியருடன் இருந்து பயனாளியை அடையாளம் காட்டி ’என்னால்அடையாளம் காண்பிக்கப்பட்டது’ என்று சான்றளிக்க வேண்டும்