Tuesday, February 16, 2016

4973 - 30 தினங்களுக்குள், மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு, நீதிப்பேராணை வழக்கு எண். 24995 / 2015, 13-08-2015, உயர்நீதிமன்றம், சென்னை, நன்றி ஐயா. Nanjil K Krishnan

" தமிழ் நாடு தகவல் ஆணையம் வேஸ்ட்! "
" உயர் நீதி மன்றமே பெஸ்ட் ! "
தமிழ் நாடு தகவல் ஆணையம் தபால் ஆபிஸாக மாறி விட்டது!
இங்கே மனுதாரர்களுக்கு நீதி கிடைப்பதில்லை
மனுதாரர்கள் மிரட்டப் படுகின்றனர்!
தகவல் ஆணையத்தில் எந்த விபரமும் தொகுத்து வைக்கபட வில்லையாம்.
வழக்கு விசாரணையின் போது ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தவறான தீர்ப்பு வழங்குகின்றனர்!
மறு விசாரணை என்று மனுதாரர்களை அங்கும் இங்கும் தேவையில்லாமல் அலைய வைக்கின்றனர்.!
ஒரு வழக்கிற்கு இரண்டு வழக்கு எண் கொடுக்கின்றனர்.!
தேவையற்ற நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டி காட்டி பல மனுக்களை தள்ளுபடி செய்கின்றனர்!
தகவல் ஆணையர்கள் சர்வாதிகாரிகளைப் போல் செயல் படுகின்றர்.
அவர்கள் முயலுக்கு மூன்று கால்கள் என்றால் அதனை ஏற்று கொள்ள வேண்டுமாம்!
மறுப்பு தெரிவித்தால் இது தான் எனது இறுதி தீர்ப்பு ! முடிந்தால் நீதிமன்றம் போ
என்கின்றனர்!
ஆணையரை எதிர் கேள்வி கேட்க கூடாதாம்!
பல்லாயிர கணக்கான மேல் முறையீடுகள் நிலுவையில் உள்ளது.!
இதற்கெல்லாம் காரணம் சட்டத்துக்கு எதிராக செயல் படும், மானம் கெட்ட,, கேடு கெட்ட, கடமை தவறிய தகவல் ஆணையர்கள் தான்
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை கண்காணிக்கவும், அதனை செம்மை படுத்தவும் நியமிக்கப் பட்டுள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் சார்பு செயலாளர், துணை செயலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் (STATE NODAL OFFICER) இதனை கண்டு கொள்வதே இல்லை!
இதற்கு தீர்வு தான் என்ன?
கடமை தவறிய ஆணையர்களிடம் மேல் முறையீடுகள் மீது நடவடிக்கை எடுத்திட உயர் நீதி மன்றம் மூலம் நீதி பேராணை (WRIT PETITION) வழக்கு தொடுத்து தான் நீதியை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் மனு தாரர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
நண்பர் ஒருவர் உயர்நீதி மன்றம் மூலம் உத்தரவு பெற்ற உத்தரவு நகல் உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன். நன்றி
RTI ஆர்வலர்கள் முடிந்த வரை பகிருங்கள்!


No comments:

Post a Comment