Complaint under section 195, Criminal Procedure Code.
1. இந்திய தண்டனை சட்டம் 211-வது பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க ஒரு குற்றத்திற்காக, அக்குற்றம் யாதேனும் ஒரு நடவடிக்கையில் / அது சம்பந்தமாக செய்யப்பட்டிருப்பதாகச் சாற்றும் பொழுது, அந் நீதிமன்றமோ / அது கீழ்ப்பட்டுள்ள வேறு எந்த நீதிமன்றமோ எழுத்தில் கொடுத்த புகாரின் மேல் அன்றி, மற்றப்படி, வழக்கு எதுவும் தொடரக் கூடாது.
2. ஆகவே, கீழ்க்கண்ட நேர்வுகளில் அத்தகைய நீதிமன்றத்தின் எழுத்து மூலமான, குற்றச்சாட்டு ஒன்று அவசியம் ஆகும்.
(a) முதல் குற்றச்சாட்டு, காவலருக்கு கொடுக்கப்பட்டு, அவர்களால் அக்குற்றம் பொய் என்று தீர்வு செய்யப்பட்ட ஒரு வழக்கில், குற்றவியல் துறை நடுவர் நீதிமன்ற நடவடிக்கை ஏதேனும் எடுத்திருக்கும் போது,
(b) கு. வி. மு. ச. 159-வது பிரிவின் கீழ், புலனாய்வு இன்றி, ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால், அது நீதிமன்ற நடவடிக்கையாக அமையாது.
No comments:
Post a Comment