Tuesday, January 26, 2016

4786 - PSO 668 - இறுதி அறிக்கையின் பேரில், குற்றவியல் துறை நடுவரின் ஆணைகள் :-

Orders of Magistrate on Final Reports :-

குற்றவியல் வழக்கு நடைமுறை விதித் தொகுப்பு, 173-வது பிரிவின் கீழ், ஒரு வழக்கு பொய் ஆனது என்று, குற்றவியல் துறை நடுவருக்கு செய்யப்படும் இறுதி அறிக்கை மேல், அப்பிரிவே, காட்டுகின்றபடி, மேற்கொண்டு, காவலர் விசாரணை செய்யும்படி குற்றவியில் துறை நடுவர் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கலாம்.  ஆனால், அவ்-வழக்கு பொய் ஆனது என்று, காவலரே செய்த அறிக்கைக்கு எதிராக, அவ்-வழக்கில், குற்றச்சாட்டை தாக்கல் செய்யும் படி காவலருக்கு கட்டளையிட, குற்றவியல் துறை நடுவருக்கு உரிமை இல்லை.  இவ்-வழக்கு பொய் ஆனது என்று, காவலர் செய்த அறிக்கையின் மேல் குற்றவியல் துறை நடுவர், மனநிறைவு அடையாவிட்டால், கு. வி. மு. ச. 190-வது பிரிவின் கீழ், அவருக்கு தானாகவே, நடவடிக்கை எடுத்துக் கொள்ள அதிகாரம் உண்டு.

No comments:

Post a Comment