Saturday, May 09, 2015

1683 - TNSIC-க்கு சட்டப்படியான அறிவிப்பு, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal, Erode அவர்கள்

பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன்

கடித எண் ௦௦1 / 2015 / T.SP. / T.I.C. 

15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு



ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் திண்டல் பகுதியில் உள்ள ரோஜா தோட்டம் என்ற இடத்தில் கதவு எண் 6 ல் குடியிருக்கும் திரு. பெ. சுப்பிரமணியன் த/பெ பெருமாள் வயது சுமார் 52 வருடங்கள் ஆகிய நான்;



சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையராகப் பணி புரியும் தங்களுக்கு அளிக்கும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 1௦1-ன் படியான அறிவிப்பு யாதெனில், 



1. எனக்கு தகவல் அளிக்காமலேயே தகவல் அளித்து உள்ளதாகத் தாங்கள் தவறான ஆவணத்தை நாள் ..........................உருவாக்கி எனக்கு அளித்து இ.த.ச. பிரிவு 1௦8,166, 167 ன் படியான குற்றச் செயல் புரிந்து உள்ளீர்கள். .



2. தங்கள் நல்ல எண்ணத்துடன் செயல்படவில்லை என்பதற்கு தங்களின் ஆவணமே தகுமுறைச் சான்று ஆகும்.



3. கடமையில் இருந்து தவறுவது தங்களின் கடமையின் ஒரு பகுதி அல்ல.எனவே , தங்களுக்கு எதிரான குற்ற வழக்கு தொடர அரசு அனுமதி தேவை இல்லை. என்பதை அறிவித்துக் கொள்கிறேன். 



4. எனக்கு தகவல் அளிக்காமலேயே தகவல் அளித்து உள்ளதாகத் தாங்கள் தவறான ஆவணத்தை எனக்கு அளித்து மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளீர்கள்.



5. தங்களது முறைகேடான செயலால் எனக்கு தீங்கு நேரிடும் என்று தெரிந்தே அத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள். 



6. எனக்கு தகவல் அளித்ததாக சொல்லும் தங்கள், அந்த ஆவணத்தின் நகலை எனக்கு அளிக்க வில்லை. 



7. இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், உரிய பதில் அளிக்க தங்களால் அளிக்க இயலாமல் போனாலும், இதில் கண்டுள்ள சங்கதிகளை சட்டப்படி தாங்கள் அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகும். மறுக்கப்படாத சங்கதிகள் ஒப்புக் கொண்டதாகவே ஆகும். 



8. இதுவே, தங்களுக்கு எதிரான சாட்சியமாகவும், தகுமுறை சாட்சியமாகவும் ஆகிவிடும் என்பதை பணிபுடன் அறிவித்துக் கொள்கிறேன். 
இப்படிக்கு,



அறிவிப்பு அளிப்பவர், 


இணைப்பு ஆவணங்கள்

No comments:

Post a Comment