Monday, July 06, 2015

2253 - சேலம் மாவட்ட காவல்துறையின் சட்ட விரோத செயலை கண்டித்து, மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு, 07-07-2015, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

மாதிரி புகார் மனு .
எண் : 01/2015/ c.t.c. /T.S.P/ ERODE. ................. 07.07.2015.
..........................................................................ERODE.
அனுப்புதல் : 
./
/
.பெறுதல் :
.
Thiru V Sampath, IAS
District Collector
Salem - 636001
Phone : 0427-2330030,0427 2400200
Fax : 0427-2400700...
.மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்.
.
பொருள் :
.
. 1. சேலம் மாவட்ட காவல் துறையினரின் சட்ட விரோதச் செயல் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக.
.
. 2.அலைபேசி எண். 9750064352. திரு. ஜான் பிரிட்டோ, ஏற்காடு, சேலம். அவர்களுக்கும் அவரது குடும்பத்தினரின் உடமைக்கும் உயிருக்கும் உடனடிப் பாதுகாப்பு அளிக்க கோருதல் தொடர்பாக.
. .................
1. திரு. ஜான் பிரிட்டோ, ஏற்காடு, சேலம் அவர்கள் சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆவர். இம்மனுவின் மனுதாரராகிய நாங்கள் ( சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு ) இந்திய அரசியல் சாசனக் கோட்பாட்டு 51-A வின்படி துறைகள் அனைத்தையும் சீர்திருத்தும் செய்வதைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
கு.வி.மு.ச.பிரிவு 151 (1) -ன் படி உரிய நடவடிக்ககை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் உத்திரவிட வேண்டுமாய் பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.
2. திரு. ஜான் பிரிட்டோ, ஏற்காடு, சேலம். அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சேலம் மாவட்ட காவல் துறையினரின் சட்ட விரோதச் செயலால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்று திரு. ஜான் பிரிட்டோ, ஏற்காடு, சேலம். அவர்கள் செல் போன் மூலம் தகவல் அளித்து உள்ளார்.
.
3. தகவல் சட்டத்தில் தகவல் கேட்டதால், திரு. ஜான் பிரிட்டோ வீட்டிற்கு சென்ற காவல் அலுவலர்கள் பெண்களை விபச்சார வழக்கில் கைது செய்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டி உள்ளதாக திரு. ஜான் பிரிட்டோ, தகவல் தந்து உள்ளார்.
.
4. சேலம் மாவட்ட காவல் துறையினரின் செயல் பொறுத்துக் கொள்ளக் கூடியது அல்ல, என்பதை பணிந்து தெரிவித்துக் கொள்கிறோம்.
.
5. சேலம் மாவட்ட காவல் துறையினரின் செயல் மனித உரிமை மீறல் மற்றும் சட்டவிரோதச் செயல் ஆகும்.
.
6. சேலம் மாவட்ட காவல் துறையினரின் செயல் திரு. ஜான் பிரிட்டோ வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் செயல் ஆகும்.
.
7. அவர்களது உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால், அதற்கு , சேலம் மாவட்ட காவல் துறையினரே முழுப் பொறுப்பு ஆவார்கள்.
.
8. தாங்கள், உடனே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்குபடி பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.
.
. இப்படிக்கு ,
. தகவல் அளிப்பவர்
.
. திரு. பெ சுப்ரமணியன்.
. சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு

No comments:

Post a Comment