Wednesday, September 09, 2015

2938 - இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு., நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

கோட்பாடு 5 : நீங்கள் இந்தியக் குடிமகன் ஆவீர்கள். .
கோட்பாடு 14: சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
கோட்பாடு 19: சுதந்திரம். 
1. 19 (1) ( அ ) சுதந்திரமாக நீங்கள் சிந்திக்க உரிமை .. சுதந்திரமாக நீங்கள் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல உரிமை...
2. 19 (1) ( ஆ ) ஆயுதங்கள் இன்றி நீங்கள் அமைதியாக ஓரிடத்தில் கூடுவதற்கு உரிமை.
3. 19 (1) ( இ ) அமைப்புகளை மற்றும் சங்கங்களை ஏற்படுத்துவதற்கான உரிமை.
4. 19 (1) ( எ ) எந்தத் தொழிலையும் செய்வதற்கான உரிமை. எந்த தொழிலிலும் ஈடுபடுவதற்கான உரிமை.
கோட்பாடு 2௦:
2௦ (1) அமலில் உள்ள சட்டத்தை மீறிச் செயல்பட்டதற்காக ஒரு நபர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
5. 2௦ (1) செய்த குற்றத்திற்கு ஒரு நபரை இரண்டு முறை தண்டிக்க கூடாது.
6. 2௦ (2) குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான சாட்சியத்தை குற்றம் சாட்டப்பட்ட நபரே அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
கோட்பாடு 21: நீதிமன்றத்தில் நீதி பெறும் உரிமை.
சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படி அன்றி வேறு எந்தவிதமாகவும் ஒருவரது சுதந்திரத்தையும், உரிமையை மற்று சொத்தையும் பறிக்கக் கூடாது.
( சட்டபடியான விசாரணை நடக்கிறதா ? என்று கவனிக்க வேண்டியது உங்கள் கடமை ஆகும்.
சட்டபடியான விசாரணை இல்லையன்றால் விசாரணையை நிருத்ததும்ப்டி நீங்கள் தான் கேட்க வேண்டும். )
கோட்பாடு 32: அரசியல் சாசன உரிமைகள்.
32 (1)... உச்ச நீதிமன்றத்தில் நீதி பெறும் உரிமை உங்களுக்கு உள்ளது. .
32 (4)... அரசியல் சாசன விதிப்படி அன்றி வேறு எந்த விதமாகவும் அரசியல் சாசன உரிமைகளை அரசு நிறுத்தி வைக்கக் கூடாது.
கோட்பாடு 37: அரசின் கடமைகள் .
நாட்டின் ஆட்சி முறைக்கு அடிப்படையான கொள்கைகளை பயன்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும்.
( அரசு கடமையைச் செய்கிறதா ? இல்லையா என்று கவனிக்க வேண்டியது மக்களின் கடமை ஆகும். )
. கோட்பாடு 51: மக்களின் கடமைகள் .
51 –A (8) : சீர்திருத்ததை வளர்ப்பது உங்கள் கடமை ஆகும். சீர்திருத்ததை காப்பது உங்கள் கடமை ஆகும்.
( சீர்திருத்தம் செய்ய வேண்டியது அரசின் கடமை அல்ல...... சீர்திருத்தம் செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும். )
51 –A (1௦ ) : துறைகள் அனைத்தும் சிறப்படைய முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும்.
( துறைகள் அனைத்தும் சிறப்படைய தனியாக முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும். துறைகள் அனைத்தும் சிறப்படைய தேவைப்பட்டால் கூட்டாக முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும்.)

No comments:

Post a Comment