Sunday, September 13, 2015

2985 - முன்னோட்டம்................. சாட்சிய சட்டம், நீதிபதிக்கான கட்டளைகள் இதில் உள்ளது, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

சாட்சிய சட்டம் கோட்பாடு. 3,4,14,15,16,34,40,44,68,50,74,76,101,118,119,120,121, 164.165, 167, ஆகியவைகளைப் பற்றிப் பார்ப்போம். 
கோட்பாடு. 3: 
சங்கதி அல்லது பொருண்மை .
கண்,காது,மூக்கு,செவி, மெய்,வாய் போன்ற புலன்களால் உணரத்தக்க பொருள் சங்கதி அல்லது பொருண்மை எனப்படும்.
ஒருவரது உணர்வுக்குப் புலனாகத் தக்க மன நிலையும் பொருள் சங்கதி அல்லது பொருண்மை எனப்படும்.
ஆவணம் ஒரு பொருளின் மீது வரையப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட பொருளைக் குறிக்கும். 
சராசரி அறிவுடைய மனிதன் ஒரு சங்கதி இருக்கிறது என்ற முடிவுக்கு வரக்கூடிய அந்த நிலையில் நீதிபதியும் ஒரு சங்கதி இருக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டும். அதாவது ஒரு சங்கதி மெய்ப்பிக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும். 
சராசரி அறிவுடைய மனிதன் ஒரு சங்கதி இருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியாத அந்த நிலையில் நீதிபதியும் ஒரு சங்கதி இருக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டும். அதாவது ஒரு சங்கதி நிறுபிக்கப்படாதது என்று கொள்ள வேண்டும். 
நீதிபதி சராசரி அறிவுடைய மனிதன் போல செயல்பட வேண்டும்.
கோட்பாடு. 4: 
சாட்சியம்:
1. ஆவண சாட்சியம் (document )
2. வாய் மொழிச் சாட்சியம் . 
ஆவண சாட்சியம் (document ) நீதிமன்றத்தின் முன் ஐவுக்ககென தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆவண சாட்சியமாகும்.

வாய் மொழிச் சாட்சியம்:
118….கேட்கப்படும் கேள்விகளைப் புரிந்து கொண்டு அத்தகைய கேள்விகளுக்கு பகுத்தறிவிக்கு உகந்த முறையில் பதில் கூறும் தகுதி உடையவர்கள் சாட்சிகள் ஆவர். 
பிஞ்சுக் குழந்தைகள், மூப்பு நிலையில் உள்ளவர்கள், உடல் நோய், மன நோய் உள்ளவர்கள், கேட்ட கேள்வியைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், சாட்சிகள் ஆக மாட்டார்கள். 
119 ..சைகை மூலமாக,மற்றும் எழுத்து மூலமாக ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் சாட்சியமானது சாட்சியம்.
ஆகும். 
12௦....... உரிமையியல் நடவடிக்கைகளில் வழக்கிற்கு உரிய தரப்பினர் தகுதியான சாட்சி ஆவர்.
கணவன் மற்றும் மனைவி சாட்சி ஆவர்.
குற்ற நடவடிக்கைகளில் வழக்கிற்கு உரிய தரப்பினர் தகுதியான சாட்சி ஆவர்.
கணவன் மற்றும் மனைவி சாட்சி ஆவர். 
121.... நீதிபதியை அவர் முன் நடந்த மற்ற செய்திகளைப் பற்றி மட்டும் விசாரிக்கப்படலாம்.
கோட்பாடு. 13: 
உரிமை உண்மையானதா ? என்பதற்கு 
தொடர்புற்ற சங்கதிகள். 
மரபு உண்டாக்கப்பட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும். 
உரிமை கொண்டாடபட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும்.
வழக்கத்தில் கொண்டாடபட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும்.
மரபு மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும். 
உரிமை மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும். 
வழக்கம் மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் சங்கதிகள் ஆகும். 
கோட்பாடு.14.:
தொடர்பு உற்றவைகள் 
உட்கருத்து, மனநிலை, அறிவு, நல்ல எண்ணம், அசட்டை, முரட்டுத்தனம், விருப்பு வெறுப்பு மனநிலை காட்டுகின்ற சங்கதிகளும் தொடர்பு உற்றவைகள் ஆகும். 
கோட்பாடு.14.:
கருத்துடன் செய்யப்பட்டதா ? தற்செயலா ? என்பதைக் காட்டுகின்ற சங்கதிகளும் தொடர்பு உற்றவைகள் ஆகும்

No comments:

Post a Comment