Friday, September 25, 2015

3162 - A. அரசியல் கட்சி வேட்பாளர் Vs B. வாக்காளர் ஒப்பந்த உடன்படிக்கை மாதிரி (மாற்றத்திற்கு உட்பட்டது)

1. A & B இருவருக்கும் இடையில் எந்தவொரு பணம் பொருள் சொத்து தொடர்பான வரவு செலவு வைத்து கொள்ளக் கூடாது - A Govindaraj, Tirupur

2. தொகுதி வேட்பாளர் தொகுதி மக்களுக்கு மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வதை உறிதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும் - Mr. Elangovan

3. A ஆகிய நான், இந்திய அரசியல் சாசனம் 1950-யினை மீறி நடக்க மாட்டேன் - A Govindaraj, Tirupur

4. A ஆகிய நான், B ஆகிய தங்களுக்கு, எந்தவொரு பொய்யான வாக்குறுதியும் அளிக்க மாட்டேன் -  A Govindaraj, Tirupur

5. A ஆகிய நான், அரசு பணத்தில் ஒரு ரூபாய் கூட கையாடல் செய்ய மாட்டேன் - A Govindaraj, Tirupur

6. அரசுவாகனத்தை எனது சொந்தபயன்பாட்டுக்கு எடுக்கமாட்டேன் - Mr. Gnana Sekar

7. A ஆகிய நான், B ஆகிய தங்களுக்கு சேவை செய்பவன் என்பதால், என் முகவரிக்கு அனுப்பும் புகார் / கோரிக்கை மனுமீது 60 நாட்களுக்குள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் - A Govindaraj, Tirupur

8. என்னிடம் உதவி கேட்டு வரும்/கோரிக்கை வைக்கும் குடிமக்களை மனிதராக மதித்து பதில் சொல்வதோடு, அவர்களுடைய கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க ஆவன செய்வேன் என்று உறுதி மொழி கூர வேண்டும் - திரு. சரவணன் அரவிந்த் அவர்கள்.

9. மக்களின் நலன் தவிர்த்து வேறு எந்த சுயலாபத்திற்காகவும் சமூக விரோதிகளுடனும், பெரும் தொழிலதிபர்களுடனும் கள்ல உறவு வைத்துக் (கொல்ல) கொள்ள மாட்டேன் என்று உறுதிமொழி கூற வேண்டும் - திரு. சரவணன் அரவிந்த் அவர்கள்

10. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய சொத்து மதிப்பை உண்மையாகக் காட்டுவேன். அது தவிர, தன் பெரிய வீடு, சின்ன வீடு, ஒன்று விட்ட, ரெண்டு விட்ட, மூன்று விட்ட உறவுகள், பால்ய நண்பர்கள், மாமனார், மாமியார் போன்ற உறவுகள் மீது கள்ளத்தனமாக சொத்து சேர்க்கமாட்டேன் என்ரு உறுதி அளிக்க வேண்டும் திரு. சரவணன் அரவிந்த் அவர்கள்

11. IPC 30 ன் படி எனது செயல் சரியன படி இல்லை என்றால் நான் அவர்களுக்கு மதிப்பாவனம் தர சம்மதம் என்று உறிதி மொழி அளிக்கமுடியும் என்று உறிதி கூறவேண்டும் - Mr. Gnana Jothi 

12. A ஆகிய நான், B ஆகிய உங்களை மாதந்தோரும் நேரிடையாக வந்து சந்தித்து உங்கள் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன் - Mr. Mega Nathan

13. பொதுப் பணிகளை அந்தந்த பகுதி மக்களிடமே ஓப்பந்த வேலையாக ஓப்படைப்பேன் எனவும் - திரு. செந்தில் தில்லா அவர்கள்

இன்னும் தொடரும்.........

No comments:

Post a Comment