Saturday, September 26, 2015

3169 - நில அளவை கோரும் சொத்துப் பத்திரத்தில், நான்கு எல்லைகள் குறிப்பிடப்பட வேண்டும், பொ. த. அ., வட்டாட்சியர் அலுவலகம், வடக்கு, திருப்பூர், 23-09-2015, நன்றி ஐயா. K Palanisamy

1. நில அளவை பணி மேற்கொள்ள அதிகாரம் படைத்த அரசு அதிகாரிகளின் பதவியின் பெயர், MFS & SIS (வட்டாட்சியர், வட்ட அலுவலகம், திருப்பூர்)

2. நில அளவைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது, தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள், 1. பத்திர நகல், 2. வில்லங்க நகல், 3. சிட்டா & 4. ஒரு line க்கு, ரூ. 20/- வீதம், தொகையை, பாரத வங்கியில், செலுத்தி, செலான் இணைக்கப்பட வேண்டும்.

3. நில அளவை கோரும் சொத்து பத்திரத்தில், நான்கு எல்லைகள் குறிப்பிடப்பட வேண்டும். தனித்தனி அனுபவம் இருந்தாலும், பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது.

4. தந்தைக்கு சொந்தமான நிலத்தை, நீதிமன்ற உத்தரவையும் மீறி, அனுமதி பெறாமல், நில அளவைப் பணி மேற்கொள்ள இயலாது. (பார்க்க : 1   “தந்தை மகன் பிரச்சினையில் தலையிட்டு, தளவாடங்களை ஒப்படைக்க வேண்டும் என RDO தீர்ப்பாயம் உத்தரவிட்டது தவறு, அவ்வாறு உத்தரவிட, RDO-க்கு அதிகாரமில்லை”, உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை, சென்னை, வழக்கு எண். WP. (MD) No. 13733 OF 2012, MP (MD) Nos. 1 / 2012 & 2 / 2013, 14-08-2014-ன் படி செல்லத்தக்கது அல்ல)

5. அவ்வினங்கள் மறுக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை (கேட்டது "மாண்பமை உச்சநீதிமன்றம், Union Of India Vs. Scientific Workers Assn. (Regd), Supreme Court Of India, Judgement dated 18-03-1994-ன் படி, “தகவல் தர மறுப்பது, மனித உரிமை மீறல் என்பதை மறுக்கும் ஆதாரங்கள் இருப்பின் அதன் சான்று நகல்கள் தரவும்). 

  இந்த பதிலின் அடிப்படையில், தகவல் தர மறுப்பது, மனித உரிமை மீறல் என பொது தகவல் அலுவலரால், உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wZzlWZHNQa0lER3M/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wU1RXbFJOOTlRWGM/view?usp=sharing

No comments:

Post a Comment