குற்ற வழக்கு, விசாரணை நடைபெற்று, குற்றவாளி அல்ல என விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அதே நீதிமன்றத்தில், அதே குற்ற வழக்கில், புகார்தாரர் & வழக்கு பதிவு செய்த, காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை / பொய்ப்புகார் குறித்த வழக்கு பதிவு செய்ததன் ஆதாரங்கள் இருப்பின் பகிர வேண்டுகிறேன் என்பது கேள்வி!
பதில்!
குற்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர் வழக்கின் முடிவில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் அந்த வழக்கு தகுந்த ஆதாரமின்றி காவல் அதிகாரியால் ஒரு அப்பாவிக்கெதிராக பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கருதி அந்த காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2014 ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் அப்பாவிகள் மீது பொய் வழக்குகள் போடாமல் தடுக்க காவல் அதிகாரிகளுக்கு மாநில அரசு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
உங்கள் தகவல் அறியும் சட்டக்குழுவை பயன்படுத்தி இது எந்த அளவிற்கு தமிழ்நாடு மாநில அரசு செயல்படுத்தியிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பொதுமக்களுக்கு தெரிவியுங்கள்.
உங்கள் தகவல் அறியும் சட்டக்குழுவை பயன்படுத்தி இது எந்த அளவிற்கு தமிழ்நாடு மாநில அரசு செயல்படுத்தியிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பொதுமக்களுக்கு தெரிவியுங்கள்.
நன்றி ஐயா. Kaviraman Rasu அவர்கள்.
CRIMINAL APPEAL NO. 1485 OF 2008, IN THE SUPREME COURT OF INDIA CRIMINAL APPELLATE JURISDICTION
State of Gujarat … Appellant Versus Kishanbhai Etc. … Respondents
No comments:
Post a Comment