Wednesday, March 21, 2018

5854 - 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு மாதிரி...நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன்.
15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு
.............. மாவட்டம் ..............வட்டம் .......................பகுதியில் .........................என்ற முகவரியில் வசித்து வரும் ...................என்பவரின் மகன் .................. திரு செந்திகுமார் (வயது 32) நான்,
.............. மாவட்டம் ..............வட்டம் .......................பகுதியில் .........................என்ற முகவரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றும் தங்களுக்கு அளிக்கும் 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும்.
1. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டமுரணான செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகின்றனர்.
2. சட்டங்கள் செயல்படுத்தப்படுவது இல்லை. அநீதி இழைக்கப்படுகிறது. அதிகாரத் துஷ் பிரயோகம் நடக்கிறது.
3. மக்கள் முன் விசாரணை செய்யப்பட்ட வேண்டும் என்ற சட்டம் செயல்படவில்லை. நடைமுறை என்ற பெயரில் அநீதி நடக்கிறது.
.
4. கு.வி.மு.ச.பிரிவு 200-ன் கீழ் கொடுக்கப்பட்ட மனுக்கள் 2 வருடம் ஆகியும் வழக்கிற்கு எடுக்கப்படவில்லை.
.
5. தனது வழக்கில் தானே முன்னிலைப் படுவோரை நீதிபதிகள் அலைக்கழிக்கின்றனர்.
.
6. இ.த.ச பிரிவு 499 விதிவிலக்கு 4 & 5 -ன் படி நீதிமன்ற நடவடிக்கைகளை உள்ளது உள்ளபடி வெளியிடுவது அவதூறு ஆகாது. ஈரோடு மாவட்ட நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை உள்ளது உள்ளபடி ஏன் நான் வெளியிடக் கூடாது ? என்பதற்கான காரணங்களை எனக்கு தெரிவிக்கவும். தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் அதையும் தெரிவிக்கவும்.
7. இவ்வறிவிப்பு கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் தங்களது பதிலை அளிக்க வேண்டுகிறேன். இல்லையெனில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தீர்மானித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை மற்றும் சட்டமுரணான செயல்களை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று பணிந்து அறிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
திரு செந்திகுமார்
இடம்: ஈரோடு
தேதி : 09.03.2018.
நகல் பெறுவோர்:
1. PORTFOLIO JUDGE,ERODE DISTRICT.
2. REGISTRAR GENERAL,CHENNAI.

No comments:

Post a Comment