Friday, August 07, 2015

2541 - அரசு உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்று ஒரு வகுப்பு மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க கோருதல் - தொடர்பாக, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

மனு எண் 01/2015 / T.L.F / ERODE.
அனுப்புனர் : 08.08.2015.
திரு. பெ.சுப்ரமணியன் த / பெ பெருமாள், c.f.s. Rs. . 5/- enclosed. ஈரோடு
மாநில அளவிலான கௌரவத் தலைவர்
ஈரோடு மாவட்ட LAW FOUNDATION – கிளை
எண்: ௦6, ரோஜா கார்டன், திண்டல்,
ஈரோடு 638012.
பெறுனர் :
உயர்திரு. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, 94425 92900
மாவட்ட கல்வித்துறை அலுவலகம்,
பழைய ரயில் நிலையம் ரோடு ,
ஈரோடு – 639001.
பெருமதிப்பிற்குரிய அம்மா / ஐயா, வணக்கம்.
பொருள் ;
1. ஈரோடு திண்டலில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்று ஒரு வகுப்பு மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க கோருதல் - தொடர்பாக.
********
1.நான் ஈரோடு மாவட்ட Law Foundation அமைப்பின் அமைப்பாளர் ஆவேன். எங்களது தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. LAW FOUNDATION CHENNAI பதிவு எண் : 26 / 2010 ஆகும்.
2. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51- A குறிப்பிடும் கடமைகளை ஏற்று செய்ய வேண்டியது நமது கடமை ஆகும். அக்கடமையை ஆற்றுவதில் முனைப்புடன் LAW FOUNDATION செயல்பட்டு வருகிறது .
2. தேச பக்தி குறித்து ஈரோடு மாவட்ட Law Foundation உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.
3. ஈரோடு மாவட்ட Law Foundation உறுப்பினர்கள் மனு எழுதப் பயிற்சி பெற வேண்டி உள்ளது. அதற்கு ஒரு வகுப்பு அறை தேவைப்படுகிறது. ஆகையால், தாங்கள் ஈரோடு திண்டலில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஒரு வகுப்பு மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து உதவும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
4. அதற்கு ஏதேனும் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் அதனைச் செலுத்த தயாராக உள்ளோம்.
. நன்றி.
இப்படிக்கு, . தங்கள் உண்மையுள்ள,
திரு. பெ.சுப்ரமணியன் த / பெ பெருமாள்,
ஈரோடு மாவட்ட LAW FOUNDATION – மாநில அளவிலான கௌரவத் தலைவர்

No comments:

Post a Comment