நண்பர் ஒருவர் மீது மாற்று முறையாவணம் சட்டம் 1881 பிரிவு 138 -இ கீழ் பொய் வழக்கு 2009 முதல் நடந்து வருகிறது.... நண்பரிடம் முடிந்த அளவு கறந்துவிட்டு வழக்கறிஞர் ஒருவர் திடீர்னு வழக்கில் ஆஜராக மாட்டேன் என்று கூறி கோர்ட்டிலிருந்து மறைந்துவிட்டார்.. நண்பரை நீதிபதி அவர்கள் வழக்கறிஞரை கூட்டிட்டு வரசொன்னார்.. நண்பர் அழைத்தும் கோர்ட்டுக்கு வரவில்லை என்னிடம் ஆலோசனை கேட்டார். நானும் நீங்களே ஆஜராகி வழக்கு நடுத்துங்கள் என்று கூறினேன்.. அவரும் அப்படியே நீதிபதி அய்யாவிடம் கூறி ,,, வழக்கு நடத்தி வருகிறார்... ஜட்ஜ் அய்யா உடனே ஆர்க்யூமெண்ட் பண்ணனும் என்று சொல்லி இருக்கறார் அய்யா 5ஆண்டு நட்ந்த வழக்கில் ஒரே நாளில் எப்படி வாதம் பண்ண முடியும் என்று கூறீருக்கிறார். ஜட்ஜ் அய்யா உங்களுக்கு இலவச வக்கீல் வைக்கட்டுமா என்று கேட்க.............. நம்மாளு... அய்யா காசு வாங்கினவரே விட்டிட்டுபோய்ட்டார் இலவச வக்கீல் எப்படிங் அய்யா என்று சொல்லி சரி உனக்கு ஒரு வாரம் டைம் அதுக்குள்ள ஆர்க்யூமெண்ட் பண்ணு என்று உத்திரவிட நண்பரிடம்............... நாம்(சட்டம்) இருக்க கவலை ஏன் ..? இதோ written argument ....... ஏதோ நம்மாள் முடிந்த ..... உதவி....... உங்களுக்கும்தான்...................
திருமிகு.நீதித்துறை நடுவர் (விரைவு நீதிமன்றம்)அவர்கள்
உத்தமபாளையம் முன்னிலையில்
உத்தமபாளையம் முன்னிலையில்
/2013
M. ஷாகுல் ஹமீது (வயது 40).த/பெ.முகமது ஷரிப்
195/15 ஓடைக்கரைத்தெரு,
கம்பம். உத்தமபாளையம் தாலுகா
தேனி மாவட்டம் – மனுதாரர்/குற்றம் சாட்டப்பட்டவர்
195/15 ஓடைக்கரைத்தெரு,
கம்பம். உத்தமபாளையம் தாலுகா
தேனி மாவட்டம் – மனுதாரர்/குற்றம் சாட்டப்பட்டவர்
எதிர்
P.பாண்டிக்குமார், த/பெ. பாண்டியன்
7/968, நடுத்தெரு
காக்கில்சிக்கையன் பட்டி,
க.புதுபட்டி அஞ்சல் - புகார்தாரர்
7/968, நடுத்தெரு
காக்கில்சிக்கையன் பட்டி,
க.புதுபட்டி அஞ்சல் - புகார்தாரர்
பொருள்: இந்திய அரசமைப்பு 1950 – இன் கோட்பாடு 19(1),21மற்றும் இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 157 குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 314, –இன் கீழ் எழுத்திலான(Written Argument) வாதுரை ...
தேனிமாவட்டம்,உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அஞ்சல், 195/15,ஓடைக்காரத்தெருM.ஷாகுல் ஹமீது த/பெ.முகமது ஷரிப், (வயது 40), இந்தியன்,முஸ்லீம், ஆகிய நான் இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 70 - இன் கீழ் ஏற்புரை செய்து, இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 57(1) படி நாட்டில் அமலிலுள்ள சட்டங்களை நீதிமுறையில் கவனத்தில் எந்த வழக்கிறகும் குந்தகமின்றி எழுத்துமூலம் வாதுரையாக தாக்கல் செய்வது யாதெனில்,
1.நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 19(1) அடிப்படை உரிமை மற்றும் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 302(2) –இன் கீழ் எதிர்மனுதாரர் தானே ஆஜராகி இந்த வழக்கினை நடத்துகிறார்.
2.ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கான சட்டபடியான வழிகளை கையாள வேண்டிய கடமையும்,அதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் சட்டபடி செயல்படாமல் இருப்பது இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 2-இன் கீழ் குற்றமாகும் அதன் அடிப்படையில் மனு சமர்பிக்கப்படுகிறது.
3.இந்திய அரசமைப்பு 1950 - இன் கோட்பாடு 375-இன் படி “இந்திய அரசமைப்பில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு உரிமையியல் குற்றவியல் மற்றும் வருவாய்த்துறை ஆகிவற்றிற்கான அதிகாரவரம்புள்ள நீதிமன்றங்களும் மற்றும் நீதித்துறை செயல்துறை நிர்வாகத்துறை அலுவலர்களும் அவர்களுடைய அலுவல்களைத் தொடர்ந்து நடத்தி வரவேண்டும்” என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
4.உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்“ ‘ நீதிபதிகள் இடமாற்ற வழக்கின், ஏழு நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு, வறுமை அல்லது வேறு ஏதாவது காரணத்தால் நீதிமன்றத்தை அணுக முடியாதவரது குறையை களையைக்கோரி, நேரடியான பாதிப்புக்கு ஆளாகாதாவர் நீதிமன்றத்தை அணுக முடியுமா என்ற விவாதத்தை தீர்த்துவைத்தது. இத்தகையோரது அடிப்படை சட்டபூர்வமான அல்லது அரசமைப்பு சட்ட உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு போதுமான ஈடுபாடு கொண்ட எந்த ஒரு பொது மனிதனும் ஒரு அஞ்சல் அட்டையின் மூலமாக கூட நீதிமன்றத்தை நாடலாம் ‘(எஸ்.பி.குப்தா மற்றும் ஏனையோர் எதிர் குடியரசுத்தலைவர் மற்றும் ஏனையோர்,AIR 1982 SC 149) என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இம்மனு பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது.
5.இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடுகள் 29(1),350, குற்றவிசாரணை சட்டம் 1973 பிரிவு 272 மற்றும் தமிழ்நாடு ஆட்சி மொழி சட்டம் 1956 – இன் பிரிவு 4 படி இந்நீதிமன்றத்தின் வழக்கு தமிழில் நடத்த மாண்பமை நீதிமன்றத்தினை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
6.மேற்படி வழக்கில் எதிர்மனுதாரர் மனுதாரரிடம் 01-02-2009 அன்று 1,00,000 (ஒரு லட்சம் ) கடன் வாங்கினார் என்று மனுவில் கூறப்பட்டது முற்றிலும் தவறாகும், கொஞ்சம் கூட உண்மையில்லை மேலும் எதிர் மனுதாரர் கடந்த 23-09-2009 அன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கந்துவட்டி கும்பல் சுரேந்திரன் த/பெ தங்கபாண்டி வடக்குதெரு கம்பம் மற்றும் 5 நபர்கள் மீது கடனுக்கு அதிகமாக வட்டி வசூல் செய்து காசோலை, புரோ நோட்டு வாங்கிவைத்து கொலைமிரட்டல் சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டு (புகார் மனு மற்றும் ஒப்புதல் ரசீது நகல் இணைக்கப்பட்டுள்ளது) அந்த மனுவில் இந்த வழக்கு சம்பந்தப்பட்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி காசோலை எண்:0081041 ரூபாய் இருபதாயிரம் (20,000)கடன் வாங்கி வட்டி மட்டும் சுமார் 23,000 (இருபத்திமூன்றாயிரம்) கட்டி அந்த கடனுக்கு பொறுப்புக்காக 2 செக்குகள், 1புரோநோட்டு வழங்கியதாக குறிப்பிட்டு புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனு மீதான விசாரணையில் சுரேந்திரன் கடன் நிலுவையில்லை, காசோலை மற்றும் புரோ நோட்டு தருவதாக கூறினார். ஆனால் அந்த காசோலையை அவருடைய மைத்துனர் பாண்டிக்குமார் பிணாமி பெயரில், மற்றும் பொய்யான கடன் தொகையான 1,00,000 (ஒரு லட்சம்) என்று அவராகவே நிரப்பி கொண்டு வங்கியில் செலுத்தி இந்நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடர்ந்துள்ளார். என்பதை மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். மனுதாரரின் இச்செயல் மற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 பிரிவு 138-இன் படி “ கடன் பெற்றவர் குற்றவாளி, தான் பெற்ற கடன் தொகைக்காக அல்லது மற்ற சட்டபூர்வமான பொறுப்புக்கு காசோலை கொடுத்து இருக்கவேண்டும்” என்ற விதிக்கு முரணாகவும் 1997(89 COM CAS 531 (C 531)(AP) வழக்கின் படி ‘’காசோலையை பெற்றவர் அல்லாமல் வேறு ஒருவர் காசோலை மூலம் பணம் பெற இருந்தவர் புகார் மனுவை தாக்கல் செய்தார் . காசோலை மூலம் பணம் பெற இருந்தவர் தனது காசோலையை மற்ற நபரிடம் கொடுத்திருக்கும் போது பணம் பெறுபவரை பொருத்த வரை காசோலையில் உள்ள அனைத்துவிதமான உரிமைகளும் இல்லாது போய் விடுகிறது அதனால் பணம் பெறுபவர் எதிரிக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்திட உரிமையற்றவர் ஆவார், 1997(89 COM CAS 531 (C 531)(AP) என்று தெரிவிக்கப்படுள்ளது என்றும் அதன் அடிப்படையில் மாண்பமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள்வேண்டும் என்பதை எதிர்மனுதாரர் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்.
7.புகார்தாரர் கடன் அல்லது இதரபொருப்பிற்காக காசோலை கொடுத்தார் என்பதை தனிப்பட்ட சாட்சியங்கள் மூலம் மெய்பிப்பதற்கு புகார்தாரர் தவிர வேறு எவரும் சாட்சியாக விசாரிக்கவில்லை. வங்கி மேலாளர் இருவரும் விசாரிக்கப்படவில்லை, மேலும் புகார்தாரர் வசந்தவிழா வைத்து கடன் கொடுத்தார் என்பதற்கான வசந்த விழா அழைப்பிதல் மற்றும் மொய் நோட்டு முன்னிலைபடுத்தவில்லை, மேலும் புகார்தாரர் 30-07-2013 அன்று மாண்பமை நீதிமன்ற குறுக்கு விசாரணையில் வசந்த விழாவில் எழுதிய செய்முறை நோட்டை சமர்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார் ஆனால் குற்ற பல்வகை மனு எண்: 5290/13, 5291 24-10-2013 அன்று தாக்கல் செய்த எதிருரையில் செய்முறை நோட்டை சமர்பிக்கமுடியாது என்று முரணாக தெரிவித்துள்ளார். இதிலிருந்து எதிர்மனுதாரர் ஆகிய நான் மனுதாரரிடமிருந்து கடன் பெற்றேன் என்பதற்கு சாட்சிகளே இல்லை என்றே கூறவேண்டியுள்ளது இதற்கு ஆதரவாக மாண்பமை உச்சநீதிமன்றம் AIR 1984 Page 1622 –இல் தெரிவித்துள்ள கருத்துகளை மாண்பமை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டுமாய் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” It is well settled that the prosecution must stand or on its own legs and it cannot derive any strength from the weakness of the defance. Where various links in a chain are in themselves complete,then a false plea or false defence may be be called into aid only to lend assurance to the court. In other words, before using the additional link it must be proved that all the links in the chain are completeand do not suffer from any infirmity.It is not the law that where there is any infirmity or lacuna in the prosecution case, the same could be cured or supplied by false defence or a plea which is not accepted by a court”, புகார்தாரர் வழக்கானது அதனுடைய பலத்திலேதான் நின்று வெற்றி பெறவேண்டும் அப்படி இல்லாமல் எதிரி தரப்பின் பலவீனத்தை சாதகமாக்கிக்கொள்ள அனுமதிக்கமுடியாது என்பது முடிவான சட்டக்கருத்தாக உள்ளது என்றே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுள்ளது என்றும் அதன் அடிப்படையில் மாண்பமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை எதிர்மனுதாரர் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்.
8.காசோலை தன்னால் எழுதப்படவில்லை என்று எதிரி மறுத்தால் அந்த காசோலை எதிரியால் எழுதப்பட்டதா என்பதை கண்டறிவதற்கு கையெழுத்து வல்லுனருக்கு அனுப்பிகருத்து கேட்கலாம் 1997 CRLJ 479(KER –D.B) என்று தெரிவிக்கப்படுள்ளது என்றும் அதன் அடிப்படையில் காசோலையில் பூர்த்தி செய்யப்பட்ட எழுத்தினை ஆய்வு செய்ய மனுதாரரின் கோரிக்கை இந்நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை மாண்பமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை எதிர்மனுதாரர் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்.
9.எதிர்மனுதாரர் புகார்தாரருக்கு மேற்படி காசோலையை கொடுக்கவில்லை , காசோலையை வேறு வகையில் முறைப்படி பெற்றுள்ளதாகவும் (Holder in due course) புகார்தாரர் தரப்பு இந்த வழக்கு இல்லை. இதற்கு ஆதரவாக 2001 Criminal Law Journal Page 745–இல் தெரிவித்துள்ள கருத்துகளை மாண்பமை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டுமாய் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். “ A Plain reading of sec 139 NIAct goes to show that the presumption created by it is as has been rightly observed by the learned Sessions Judge , a rebuttable presumption that presumption may get displaced by prosecution evidence on record itself, or the accused may choose to lead independent evidence in rebuttal thereof. If the circumstances of suspect character emerge proved from the prosecution evidence which are found to be badly damaging the credibility of the prosecution case,they are sufficient to displace the presumption available to the complaint under S 139.once that presumption gets dislodged by such suspicious circumstances borne out by prosecution evidence,then heavy burden would lie on the complainant to prove by independent positive evidence the most material fact of existence of debt or other liability against the accused drawer of the cheque in respect of that particular cheque amount. The case of the complainant is therefore, required to be examined in tha backdrop of this legal position”.
1996 Criminal Law Journal Page 636 – “The Drawer of the cheque can always take the plea that the amount covered by the cheque was not for the discharge o f any legally enforceable dept Or liability. The intial burden is on the complainant to show that the cheque was issued for the discharge of a legally enforceable dept Or liability. That burden shifts to the respondent to estabilish that the cheque issued was not of the nature referred to in the Section 138. In doing so, he may also rely upon circumstantial evidence. KundalLalV.Custodian,Evacuee property AIR 1961SC1316, மேற்படி தீர்ப்பின் படி மாற்று முறை ஆவணங்கள் சட்டம்1881 பிரிவு 138 –இல் குறிப்பிட்டுள்ள அனுமானம் என்பது மறுக்கத்தக்க அனுமானம் என்றும் ( REBUTTABLE PRESUMPTION) புகார்தாரர் தரப்பில் தரப்படும் சாட்சியங்கள் அல்லது எதிரிதரப்பில் அளிக்கப்படும் தனிப்பட்ட சாட்சி மூலம் அனுமானத்தை மறுக்க வாய்ப்புள்ளது என்றும் புகார்தாரர் தரப்பில் வழக்கின் நம்பகதன்மை பாதிக்கப்படுகிற நிலையில் அவையே பிரிவு 139 –இல் குறிப்பிட்டுள்ள அனுமானத்தை மறுப்பதற்கு போதுமானது என்றும் அதன் பின் கடன் அல்லது இதர பொறுப்புகளுக்கு காசோலை கொடுக்கப்பட்டது என்று புகார்தாரர் காட்டுவதற்கு அதிகப்படியான நிரூபணம் தேவைப்படுகிறது என்றும் வழக்கில் காணப்படும் சூழ்நிலை சாட்சியங்கள் மூலமாக அனுமானத்தை மறுக்கலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு மிகவும் தாழ்மையுடன் கொண்டுவருகிறேன்.
10. 2001 CRI L J 24, SASSRIYIL JOSEPH, APPELLANT VS DEVASSIA, வழக்கில், “காலாவதியான கடனை அடைப்பதற்கு காசோலை வழங்கப்பட்டது. கடன் வழங்கி மூன்றாண்டு கழித்தபிறகு காசோலை வழங்கப்பட்டிருக்கும்போது, அது காசோலை வழங்கப்பட்ட காலத்தில் சட்டபூர்வமாக அமலாக்கக்கூடிய கடன் ஆகாது(Debt not legally enforceable at time of issuance of cheque)அதனால் காசோலை மோசடி வழக்கில் எதிரியை தண்டித்தல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் என்பதையும் அதன் அடிப்படையில் இந்த எழுத்து மூல வாதுரையை (WRITTEN ARGUMENT) பரிசீலனை செய்ய மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
1996 Criminal Law Journal Page 636 – “The Drawer of the cheque can always take the plea that the amount covered by the cheque was not for the discharge o f any legally enforceable dept Or liability. The intial burden is on the complainant to show that the cheque was issued for the discharge of a legally enforceable dept Or liability. That burden shifts to the respondent to estabilish that the cheque issued was not of the nature referred to in the Section 138. In doing so, he may also rely upon circumstantial evidence. KundalLalV.Custodian,Evacuee property AIR 1961SC1316, மேற்படி தீர்ப்பின் படி மாற்று முறை ஆவணங்கள் சட்டம்1881 பிரிவு 138 –இல் குறிப்பிட்டுள்ள அனுமானம் என்பது மறுக்கத்தக்க அனுமானம் என்றும் ( REBUTTABLE PRESUMPTION) புகார்தாரர் தரப்பில் தரப்படும் சாட்சியங்கள் அல்லது எதிரிதரப்பில் அளிக்கப்படும் தனிப்பட்ட சாட்சி மூலம் அனுமானத்தை மறுக்க வாய்ப்புள்ளது என்றும் புகார்தாரர் தரப்பில் வழக்கின் நம்பகதன்மை பாதிக்கப்படுகிற நிலையில் அவையே பிரிவு 139 –இல் குறிப்பிட்டுள்ள அனுமானத்தை மறுப்பதற்கு போதுமானது என்றும் அதன் பின் கடன் அல்லது இதர பொறுப்புகளுக்கு காசோலை கொடுக்கப்பட்டது என்று புகார்தாரர் காட்டுவதற்கு அதிகப்படியான நிரூபணம் தேவைப்படுகிறது என்றும் வழக்கில் காணப்படும் சூழ்நிலை சாட்சியங்கள் மூலமாக அனுமானத்தை மறுக்கலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு மிகவும் தாழ்மையுடன் கொண்டுவருகிறேன்.
10. 2001 CRI L J 24, SASSRIYIL JOSEPH, APPELLANT VS DEVASSIA, வழக்கில், “காலாவதியான கடனை அடைப்பதற்கு காசோலை வழங்கப்பட்டது. கடன் வழங்கி மூன்றாண்டு கழித்தபிறகு காசோலை வழங்கப்பட்டிருக்கும்போது, அது காசோலை வழங்கப்பட்ட காலத்தில் சட்டபூர்வமாக அமலாக்கக்கூடிய கடன் ஆகாது(Debt not legally enforceable at time of issuance of cheque)அதனால் காசோலை மோசடி வழக்கில் எதிரியை தண்டித்தல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் என்பதையும் அதன் அடிப்படையில் இந்த எழுத்து மூல வாதுரையை (WRITTEN ARGUMENT) பரிசீலனை செய்ய மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
11.மாற்றுமுறை ஆவண சட்டம் 1881 பிரிவு 118,139,138 நீதிமன்றம் முன்னேற்பு கொள்ளல் (நீதிமன்றம் குற்றவாளி தான் பெற்ற பணத்திற்கு பதிலாகத்தான் வாதிக்கு காசோலை கொடுத்துள்ளார் என முன்னேற்பு (சட்டப்படி எண்ண) கொள்ள, பின்வரும் மூன்று காரணிகள் அவசியம். 1 வாதி தான் கொடுத்த பணத்தை குற்றவாளியிடம் இருந்து திரும்பகேட்டு இருக்கவேண்டும் 2, குற்றவாளி தான் பெற்ற கடன் தொகைக்காக காசோலை கொடுத்து இருக்கவேண்டும், 3,குற்றவாளி வாதிக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்கு சம்மதம் தெரிவித்து கசோலையை வாதிக்கு வழங்கி இருக்கவேண்டும். இந்த வழக்கில் வாதி எந்த தேதியில் கடன் கொடுத்தார் தான் கொடுத்த கடன் தொகை அவருக்கு எவ்வாறு கிடைத்தது (SOURCE OF MONEY) என்பது பற்றி விபரம் தெரியவில்லை எனவே எதிரி விடுதலை செய்யப்பட்டார் என்று JOHN K.ABRAHAM VS SIMON C.ABRAHAM AND ANOTHER 2014(1)SCC(CRL)791 தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் என்பதையும் அதன் அடிப்படையில் இந்த எழுத்து மூல வாதுரையை (WRITTEN ARGUMENT) பரிசீலனை செய்ய மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
12.மேற்படிவழக்கானது மாண்பமை நீதிமன்றத்தில் 25-09-2009 அன்று தாக்கல் செய்யப்பட்டது, புகார்தாரர் சத்தியபிரமாணவாக்குமூலம் 27-03-2013 அதாவது சுமார் 3 வருடம் 6 மாதங்களுக்கு பிறகு தாக்கல் செய்திருக்கிறார் என்பதையும், வழக்கு தாக்கல் ஆகி 27-04-2010 சம்மன் பெற்ற நாள்முதல் எதிர் மனுதாரர் மாண்பமை நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். ஆனால் புகார்தாரர் இது நாள் வரை நீதிமன்றத்தில் 27-03-2010, 13-06-2013, 30-07-2013 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வந்துள்ளார் என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். புகார்தாரரின் நோக்கம் எதிர்மனுதாரரை பொய் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அலையவேண்டும் மனஉளச்சல் ஏற்படுத்தி பணம் பறிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வழக்கை விரைவாக நடத்த மனுதாரருக்கு ஆர்வமில்லை. மேலும் வழக்கில் உண்மையில்லை என்று தெரிந்தே மாண்பமை நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்பதையும், இது இந்திய அரசமைப்பு கோட்பாடு 1950 கோட்பாடு 21 க்கு எதிரானதாகும் மேற்படி வழக்கானது மாற்றுமுறை ஆவண சட்டம் 1881 பிரிவு 143 –இன் படி சுருக்கமுறையில் விசாரிக்கவேண்டிய வழக்காகும் மேலும் மாற்றுமுறை ஆவண சட்டம் 1881 பிரிவு 143(3) இன்படி விசாரணை மிகவும் விரைவாக முடித்தல் வேண்டும் ,இந்த வழக்கை புகார் மனு தாக்கல் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் முடிவு செய்தல் வேண்டும்” என்ற விதிக்கு புறம்பாக நடந்துவருகிறது என்பதை மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்
13.மேற்கண்ட உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் மற்றும் உத்திரவுக்கு மற்றும் தீர்ப்புகளுக்கு விரோதமாக மனுதாரர் இந்த காசோலை மோசடி வழக்கை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து மற்றும் பொய் சாட்சி அளித்து வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
14.மேற்கண்ட மனுதாரரின் சட்டவிரோத செயல்கள் எல்லாம் , இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவுகள் 467,474,193,211 இன் கீழ் ஆள்மாறாட்டம் , பொய் ஆவணம் தயாரித்தல், பொய் ஆவணத்தை உண்மை ஆவணமாக பயன்படுத்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் பொய் சாட்சியம் சொல்லுதல், நீதி நிர்வாகத்தை பாதிக்கசெய்தல் ஆகிய தண்டனைக்குறிய குற்றங்களை செய்திருக்கிறார் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
எனவே மாண்புமிகு நீதியரசர் அவர்கள் இந்த எழுத்து மூலமான வாதுரையை (Written Argument) பரிசீலனை செய்து,
1.மாற்று முறை ஆவணங்கள் சட்டம்1881 பிரிவு 138,139,142 சட்டத்திற்கு விரோதமாகவும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு விரோதமாகவும் தொடரப்பட்ட மேற்படி காசோலை மோசடி வழக்கினை குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 255(1) படி தள்ளுபடி செய்து தக்க நடவடிக்கை எடுக்க மாண்பமை நீதிமன்றத்தினை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,
2.மேற்படி வழக்கில் மனுதாரர் ஆள்மாறாட்டம் , பொய் ஆவணம் தயாரித்தல், பொய் ஆவணத்தை உண்மை ஆவணமாக பயன்படுத்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் பொய்சாட்சியம் சொல்லுதல், நீதி நிர்வாகத்தை பாதிக்கசெய்தல் ஆகிய குற்றங்களுக்கு மாண்பமை நீதிமன்றம் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 340இன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒப்பம்,
மேலே தெரிவிக்கப்பட்ட சங்கதிகள் எனக்கு தெரிந்தவரை உண்மை எனவும் இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 70- இன் கீழ் சத்தியபிரமாணமாய்(AFFIDAVIT) தேதி ஆகஸ்ட் மாதம் 2015 வருடம் உத்தமபாளையத்தில் என்னால் கையொப்பமிடப்பட்டது.
ஒப்பம்,
தங்களின் உண்மையுள்ள
ஒப்பம்,
தங்களின் உண்மையுள்ள
தக்க நடவடிக்கை எடுக்கவும்,பதிலுக்காகவும் நகல் சமர்பிக்கப்படுகிறது:
1.குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 2(7)இன் கீழ் மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் ஒருங்கினைந்த நீதிமன்றங்கள் வளாகம் இலட்சுமிபுரம் தேனி -625531
2.இந்திய அரசமைப்பு 1950 கோட்படு 226,227 –இன் கீழ் நடவடிக்கைகளுக்காக தபால் மூலம் சார்பு திருமிகு.தலைமை நீதியரசர் அவர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) – 625023
1.குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 2(7)இன் கீழ் மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் ஒருங்கினைந்த நீதிமன்றங்கள் வளாகம் இலட்சுமிபுரம் தேனி -625531
2.இந்திய அரசமைப்பு 1950 கோட்படு 226,227 –இன் கீழ் நடவடிக்கைகளுக்காக தபால் மூலம் சார்பு திருமிகு.தலைமை நீதியரசர் அவர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) – 625023
ஆவணங்கள் இணைப்பு:
1. 23-09-2009 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சமர்பித்த புகார் மனுவின் நகல்
2. 23-09-2009 புகார் ஒப்புகை அட்டையின் நகல்
3. உச்சநீதிமன்ற்த்தின்,உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்கள்
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wSE9BeHJzaUUwUk0/view?usp=sharing
No comments:
Post a Comment