வெறும் ஒன்றரை ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் மனைவியுடன் குமாரபாளையத்தில் இருந்து சங்ககிரிக்கு அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் பேருந்தில் ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், குமாரபாளைம் - சங்ககிரிக்கு கட்டணம் ரூ.8.50 மட்டுமே.
இந்த நேர்மையற்ற வணிக முறையை எதிர்த்து பாலசுப்பிரமணி நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கம் மூலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. குறைதீர்மன்றத் தலைவர் அய்யப்பன், உறுப்பினர் மலர்க்கொடி அளித்த தீர்ப்பில், பயணியிடம் கூடுதலாக வசூலித்த ரூ.1.50-ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், பயணியின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5,000, வழக்குச் செலவுக்கு ரூ.2,000, நுகர்வோர் நல நிதிக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும் என அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டனர்.
தினமணி நாளிதழ் செய்திகள் - 13.08.2015
No comments:
Post a Comment