Tuesday, September 01, 2015

2769 - மேதகு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம், 02-09-2015, ஐயா. சுப்பிரமணியன் பெருமாள், பொருளாளர், ஈரோடு அவர்கள்

FEDERATION OF REFORMERS. Regd. No: 315 / 2015 என்ற அமைப்பு துவங்கப்பட்டு உள்ளது. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51-A - ன் படி துறைகள் அனைத்தையுன் சீர் திருத்தம் செய்வதைக் கடமையாக ஏற்றுக் கொண்டு உள்ளோம். 

சட்டம் தெரியாது என்பது மன்னிக்க கூ டியது அல்ல. ஆகையால், இந்திய அரசியல் சட்டத்தைப் பரப்ப வேண்டியது அவசியமாகவும், நியாயமாகவும் இருக்கிறது. இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தைப் பரப்பும் பணியை நாங்கள் துவக்கி உள்ளோம்.

ஈரோடு மாவட்டத்தில் இந்திய அரசியல் சாசனத்தை செயல்படுத்த தாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.

அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால், அதனைச் செயல்படுத்துகிற காவல் துறை இந்திய அரசியல் சாசனத்தை மதித்து ஏற்றுச் செயல்பட வேண்டும்.

ஆகையால், ஈரோடு மாவட்டக் காவல் துறை இந்திய அரசியல் சாசனத்தை அறிய ஆவன செய்யும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தங்கள் உண்மை உள்ள ,
பெ.சுப்ரமணியன் த/ பெ. பெருமால் வயது சுமார் 63 வருடங்கள்.
பொருளாளர்,
FEDERATION OF REFORMERS. Regd. No: 315 / 2015

No comments:

Post a Comment