த / பெ. அங்கமுத்து,
“பாதிக்கப்பட்டோர் கழகம்”-உறுப்பினர்,
3/269பி, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அருகில்,
இடுவம்பாளையம் அஞ்சல், முருகம்பாளையம், திருப்பூர் 641 687
90035-05555, goindhu@yahoo.com
விரைவு அஞ்சலில்
“இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 21-ன்
கீழ் மனு
கடித எண். 00-000-000 / 0000, நாள்.
00-00-0000
பெறுநர் :
சட்டத்துறை, தலைமை செயலகம்,
சென்னை 600
009.
***********
பொருள் : உச்சநீதிமன்ற
உத்தரவை ஏற்க மறுத்து, சட்ட விரோத அறிக்கை தாக்கல் செய்த, கூடுதல் அரசு
வழக்கறிஞரின் பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி
***********
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு,
பார்வை
1 திரு. காவல் ஆய்வாளர் அவர்கள், ___________ காவல் நிலையம், ___________ கிராமம், ___________000 000
அவர்களுக்கு தாக்கல் செய்த புகார் கடித எண். 00-000-00-0000, நாள். 00-00-0000,
பெற்றுக் கொண்ட நாள். 00-00-0000.
2 திரு. ___________, ___________
அரசு வழக்கறிஞர் அவர்கள், மாவட்ட முதன்மை நீதிமன்றம், ___________ நகர், ___________000
000 அவர்களின் சட்டக் கருத்துரை நாள். 00-00-0000
3 மேற்படி
சட்டக் கருத்துரை தொடர்பாக, மறுபரிசீலணை செய்யுமாறு கோரி, மேற்படி அரசு / பொது
ஊழியருக்கு அனுப்பிய மனு நாள். 00-00-0000, பெற்றுக் கொண்ட நாள். 00-00-0000
4 மேற்படி
சட்டக் கருத்தின் மீது மீது எந்தவொரு பதிலும் வழங்காத காரணத்தினால், மேற்படி அரசு
/ பொது ஊழியருக்கு, 15 தினங்கள் கொண்ட ஓர் சட்டப்படியான அறிவிப்பு நாள். 00-00-0000, பெற்றுக் கொண்ட
நாள். 00-00-0000
5 திரு.
அரசு சார்பு செயலாளர் அவர்கள், பொது (சட்ட அலுவலர்கள்) துறை, தலைமைச் செயலகம்,
சென்னை 600 009 அவர்களின் கடித எண். 27055 / ச. அ / 2015-3, நாள். 14-08-2015.
6 திரு.
காவல் ஆய்வாளர், பெருமாநல்லூர் காவல் நிலையம், திருப்பூர் மாவட்டம் அவர்களின்
முதல் தகவல் அறிக்கை எண். 1952 / 2011, நாள். 24-08-2011.
***********
1
மேற்கண்ட முகவரியில்
வசித்து வரும், திரு. ___________அவர்களின் மகனாகிய,
___________, வயது 39, ஆகிய
நான், இம்மனுவின் மனுதாரர் ஆவேன். மேலும், இம்மனு ரூ. 10/-க்காண நீதிமன்ற வில்லையுடன் தாக்கல் செய்யப்படுகிறது.
2
“இந்திய
அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 19(1)(அ), 14, 21 & 51 (A) (ஒ)-ன்
படியான உரிமையின் படி, பார்வை 5-ன் படி, “அரசு
வழக்கறிஞரை பணியில் அமர்த்தும் / நீக்கும் அதிகாரம் படைத்த” தங்களுக்கு இம்மனு
சார்பு செய்யப்படுகிறது.
3
இம்மனுவில் சொல்லப்பட்டுள்ள, திரு. ___________, ___________ அரசு
வழக்கறிஞர் அவர்கள், மாவட்ட ___________ நீதிமன்றம், ___________ நகர், ___________000
000 அவர்கள், “இந்திய தண்டனை சட்டம் 1860”-ன் சட்டப்பிரிவு 21-ன் கீழ் பொது ஊழியர் / அரசு ஊழியர் ஆவார்.
4
பார்வை 1-ன் படி, கடந்த 00-00-0000-ம் தேதியில், மேற்படி காவல்
நிலையத்தில், ஓர் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
5
பார்வை 2-ன் படி, கடந்த 00-00-0000-ம் தேதியில், மேற்படி திரு. ___________, ___________ அரசு வழக்கறிஞர் அவர்கள், மேற்படி
புகார் மனு தொடர்பாக ஓர் சட்டக் கருத்துரை வழங்கியுள்ளார்.
6
பார்வை 3-ன் படி, கடந்த 00-00-0000-ம் தேதியில், மேற்படி அரசு /
பொது ஊழியர் அவர்களிடம், மேற்படி
சட்டக் கருத்துரை தொடர்பாக, மறுபரிசீலணை செய்யுமாறு ஓர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
7
பார்வை 4-ன் படி, கடந்த 00-00-0000-ம் தேதியில், மேற்படி அரசு /
பொது ஊழியர் அவர்களுக்கு,
15 தினங்கள் கொண்ட ஓர் சட்டப்படியான அறிவிப்பு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த
00-00-0000-ம்
தேதியில், மேற்படி புகார் மனுவினை, மேற்படி அரசு
/ பொது ஊழியர் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்.
8
மேற்படி அறிவிப்பை பெற்றுக் கொண்ட, மேற்படி அரசு /
பொது ஊழியர் அவர்கள்,
நாளது தேதிவரை, எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
9
இதன்படி,
“இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 106-ன் கீழ், “மறுக்கப்படாத
சங்கதிகள், ஏற்றுக் கொண்டதாக பொருள்”.
10 பார்வை
1-ன் படி, மேற்படி 00-00-0000-ம்
தேதியிட்ட, புகார் மனுவில் தொடர்புடைய குற்றங்கள், “இந்திய தண்டனை சட்டம் – 1860”-ன் சட்டப்பிரிவு 467, 468, 470 & 471-ன் கீழ்
தண்டிக்கத் தக்கது ஆகும்.
11 பார்வை
6-ன் படி, “எதிரிகள் நால்வர், திரு.
சொக்கன், வருவாய் கோட்டாட்சியர், திருப்பூர் & திரு. முத்துசாமி, கிராம
நிர்வாக அலுவலர்” ஆகியோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட்டுள்ளது.
12 மேற்படி அரசு
/ பொது ஊழியர் அவர்களின் மேற்படியான செயல்பாடுகள், “இந்திய தண்டனை சட்டம் 1860”-ன் பிரிவு 108-ன் படி ஏற்புடையது அல்ல.
13 மேற்படி அரசு
/ பொது ஊழியர் அவர்களின் மேற்படியான செயல்பாடுகள் ஆனது, “இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 14 & 21-ன் அடிப்படையில் சட்டத்தை மீறிய செயலாகும்.
14 மேற்படி
அரசு / பொது ஊழியர் அவர்கள், மாண்பமை
உச்சநீதிமன்றம், புதுடில்லி, Sh. Vishnu Dutt Sharma Vs. Smt. Daya Sapra, வழக்கு
எண். Civil Appeal No. 3238 of 2009 (Arising out Of SLP (C) No. 10997 of 2008),
Dated 05-05-2009-ல் சொல்லியுள்ள, “உரிமையியல்
& குற்றவியல் வழக்குகளை ஒரே சமயத்தில் தொடரலாம்” என்று உத்தரவிட்டுள்ளதை
ஏற்கவில்லை.
15 மேற்படி அரசு
/ பொது ஊழியர் அவர்கள், மேற்படி புகார் மனுவின் மீது “முதல் தகவல்
அறிக்கை” பதிவு செய்ய விடாமல், குற்றத்திற்கு உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள் /
அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்பது உறுதி செய்கிறது.
16 உச்சநீதிமன்றம், வழக்கு எண். 6237 / 1990, நாள். 05-11-1993-ல் சொல்லப்பட்டுள்ள உத்தரவின் படி, “ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு?” என்பதை உச்சநீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளது
17
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தால், இழப்பீடு ரூ.
2,00,000/- & வழக்கு செலவுத்
தொகை ரூ. 50,000/-யினை, மனுதாரர் ஆகிய
எனக்கு செலுத்த, மேற்படி எதிர்மனுதாரர்கள் கடமைப்பட்டவர் ஆவார்கள் (பார்க்க : Appeal No. 1921 of 2009, SLP (C) No.10483 of 2007, Dated
26-03-2009)
18
மனித உரிமை மீறலுக்காக, ரூ. 1,00,000/-யினை, மனுதாரர் ஆகிய எனக்கு செலுத்த, மேற்படி எதிர்மனுதாரர்கள்
கடமைப்பட்டவர் ஆவார்கள் (பார்க்க : திரு. லோகநாதன் பிரதிவாதி தாசில்தார் & நால்வர், வழக்கு எண். SHRC 4105 / 2009, நாள். 25-07-2011)
19
அரசு / பொது ஊழியரான மேற்படி
அரசு / பொது ஊழியர் அவர்கள், சட்டப்படி செய்யக்கூடாத குற்றங்கள் என “இந்திய தண்டனை
சட்டம் – 1860”-ன் சட்டப்பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ளது.
20
இதனை, மேற்படி அரசு / பொது ஊழியர் அவர்கள் ஏற்கவில்லை என்பதை மேற்படி ஆவணங்கள் உறுதி
செய்கிறது.
21
சட்டப்படியான
விசாரணை முறை அன்றி, எனது
தனிப்பட்ட சுதந்திரத்தையும் உரிமையையும் பறிக்கிறார்கள் (பார்க்க :
“இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 21)
22
சட்டப்படியான விசாரணை முறையின்றி
செய்யப்படும் செயல்கள் அனைத்தும் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டது அல்ல. இதற்கு, மனுதாரர் ஆகிய என் வசம், அதிகப்படியான ஆவணங்கள் தகுமுறை சாட்சியமாகவும் சான்றாகவும்
உள்ளது.
23
அக்கறையுடனும் கருத்துடனும் செயல்படாத செயல் எதுவும், நல்ல
எண்ணத்துடன் செயல்பட்டது ஆகாது. நல்ல எண்ணத்துடன் செய்யப்படாத செயல் எதுவும், சட்டப்படி செய்யப்பட்டது ஆகாது. சட்டப்படி அன்றி, வேறுவிதமாக
செயல்பட்டு, நீதிமன்றத்தில் நீதிபெறும், எனது உரிமையை, மேற்படி அரசு / பொது ஊழியர் அவர்கள் மறுத்து, தடுத்து
உள்ளார். சட்ட
விரோதமாக செயல்பட்டு உள்ளார்.
24
கடமையில் இருந்து தவறுவது, அரசு / பொது ஊழியரின் கடமையின் ஒரு பகுதி அல்ல. எனவே, உயர் அதிகாரிகளின் ஒப்புதல் தேவை அற்றது.
25
இதனால், மேற்படி அரசு / பொது ஊழியர் அவர்களின் இத்தகைய கடமை தவறிய செயல்பாட்டினாலும், அதிகார துஷ்பிரயோகத்தினாலும், மனுதாரர் ஆகிய எனக்கு மிகுந்த மன உளைச்சல், கால விரையம்
& பண விரையம் ஏற்பட்டுள்ளது.
26
மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரிய மாண்பமை சட்டத்துறை
அமைச்சர் அவர்கள், பின்னாளில் தக்கதென கருதும் / உத்தரவிடும் சூழலில், இம்மனு தொடர்பாக கூடுதல் விவரங்கள்
/ ஆதாரங்கள் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஆகவே, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, மாண்பமை சட்டத்துறை அமைச்சர் அவர்களிடத்தில், மனுதாரர் ஆகிய நான் வேண்டுவது என்னவென்றால் :
1
மேற்படி அரசு / பொது ஊழியர் அவர்கள் மீது உரிய விசாரணை
செய்து, மாண்பமை உச்சநீதிமன்றம், புதுடில்லி, Sh. Vishnu Dutt Sharma Vs. Smt.
Daya Sapra, வழக்கு எண். Civil Appeal No. 3238 of 2009 (Arising out Of SLP (C)
No. 10997 of 2008), Dated 05-05-2009-ல் சொல்லியுள்ள, “உரிமையியல் & குற்றவியல் வழக்குகளை ஒரே சமயத்தில் தொடரலாம்”
என்று உத்தரவிட்டுள்ளதை கருத்தில் கொள்ளாமல், கடந்த 00-00-0000-ம் தேதியில் வழங்கிய சட்டக்
கருத்துரையை ரத்து செய்யக் கோரியும்;
2
அவ்வாறு மேற்படி
சட்டக் கருத்துரை, மேற்படி உச்சநீதிமன்ற உத்தரவின் படி, “சட்ட விரோதமானது” எனில், அச்சட்ட விரோத அறிக்கை அளித்த, மேற்படி அரசு / பொது ஊழியர் அவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய
கோரியும்;
3
இதனால்,
நீதிமன்றத்தில் நீதிபெறும் எனது உரிமையை, மறித்து தடுத்து பறித்து, எனக்கு ஏற்பட்ட
மன உளைச்சல், கால விரையம் & பண விரையத்திற்கு உரிய இழப்பீட்டினை, மேற்படி அரசு / பொது ஊழியர் அவர்களிடமிருந்து பெற்றுத் தரக் கோரியும்;
4
மாண்பமை சமூகம்
அவர்கள் கருதும் இன்னபிற உத்தரவுகள் பிறப்பிக்க கோரியும்;
இருகரம் கூப்பி, பிரார்த்திக்கிறேன் / வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
உண்மையுள்ள,
இடம் :
நாள் : 00-00-0000
உறுதிச் சான்று ஆவணம் :
மேற்கண்ட முகவரியில் வசித்து வரும், திரு. ________________ அவர்களின் மகளாகிய
/ மகனாகிய /
மனைவியாகிய, ________________, வயது ____, ஆகிய நான், இம்மனுவில் கண்டுள்ள சங்கதிகள் அனைத்தும், என் அறிவுக்கு எட்டியவரையில் உண்மை
என்றும், எந்தவொரு மூலப் பொருளையும் மறைக்கவில்லை என்றும் உறுதி
கூறுகிறேன்.
________________-ம்
வருடம், ________________ மாதம்,
____-ம் தேதி, திங்கள்
கிழமை, “இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் சட்டப்பிரிவு 70-ன் படி, ________________ இன்று
கையெழுத்துச் செய்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இடம் :
நாள் :
1 பார்வைகளில் சொல்லப்பட்ட ஆவணங்கள்
குறிப்பு : இம்மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பின்னாளில், “தகவல் அறியும் உரிமை சட்டம் 2005”-ன்
கீழ், உரிய தகவல்கள் / ஆவணங்கள் கோரப்படும் என்பதை, தயவு கூர்ந்து நினைவில்
வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
மனுதாரரின்
/ புகார்தாரரின் கடித எண். மற்றும் நாள்
போன்றவற்றினை குறிப்பிட்டு பதில்
தரவும்.
No comments:
Post a Comment