Tuesday, May 19, 2015

1824 - நில எடுப்பு

நில எடுப்பு:



  • அரசுத் துறைகள் / அரசு நிறுவனங்களுக்கு பொது நோக்கத்திற்காக நிலங்கள் தேவைப்படுகின்றன. அவ்வாறு தேவைப்படும் போது அரசு நிலங்கள் இல்லாவிட்டால், 1894- ஆம் ஆண்டு நில எடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டா நிலங்களைக் கையகப்படுத்தலாம்.
  • கையகப்படுத்தும் செயல்முறைகளை முடிப்பதற்கான கால அவகாசம் மூன்று ஆண்டுகள்.
  • அரசுக்கு மிக விரைவாக நிலங்கள் தேவைப்படும் போது பிரிவு17(1) மற்றும் பிரிவு 17(2)-இன் கீழ் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தலாம்.

    கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்:

  • நில எடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அறிவிப்புகளை கிராமத்தில் அவ்வப்போது விளம்பரம் செய்வதுடன் நோட்டீஸ்களை நில உரிமையாளரிடம் சரியான முறையில் சார்வு செய்ய வேண்டும்.
  • நிலத்தின் உண்மையான மதிப்பினை நில எடுப்பு அலுவலருக்குத் தெரிவிக்கவும், கிராமக் கணக்குகள் நகலை வழங்குவதும் கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.
  • சில சமயங்களில் நிலத்திற்கு அதிக இழப்பீடு பெற, தீய நோக்கத்துடன் நிலமதிப்பை உயர்த்திக் காட்டி பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் நிலத்தின் உண்மையான மதிப்பை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்
  • No comments:

    Post a Comment