Wednesday, October 07, 2015

3329 - சட்டக் கருத்துருவை மறுபரிசீலனை செய்யக் கோருதல் தொடர்பாக மனு மாதிரி, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

ஒப்புகை இணைந்த பதிவஞ்சலில்

அனுப்புநர் :         கடித எண். 00-00-00 / 0000, நாள். 00-00-0000

கோவிந்தராஜ், வயது 38,
/ பெ. அங்கமுத்து,
. எண். 3 / 269 பி, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அருகில்,
இடுவம்பாளையம் அஞ்சல், முருகம்பாளையம்,
திருப்பூர் 641 687.

பெறுநர் :

திரு. .................................... அவர்கள்,
கூடுதல் அரசு வழக்கறிஞர்,
மாவட்ட முதன்மை நீதிமன்றம்,
............. மாவட்டம் 000 000.

மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்,

பொருள் : தாங்கள் அளித்துள்ள சட்டக் கருத்துருவை கீழ்க்கண்ட சங்கதிகளின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யக் கோருதல் தொடர்பாக

பார்வை 1: திரு. .......................... அவர்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், .................... அஞ்சல், .................... மாவட்டம் ....................அவர்களுக்கு அனுப்பிய புகார் கடித எண். 00-00-04 / 0000, நாள். 00-00-0000, பெற்றுக் கொண்ட நாள். 00-00-0000.

பார்வை 2:     தங்களின் சட்டக் கருத்துரு நாள். 00-00-0000, பெற்றுக் கொண்ட நாள். 00-00-0000.

     நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். மேலும், கடந்த 00-00-0000-ம் தேதியன்று, பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் மனு ஒன்றினை தாக்கல் செய்ததற்கு, கடந்த 00-00-0000-ம் தேதியன்று, பார்வை 2-ன் படி, தாங்கள் ஓர் சட்டக் கருத்துரு வழங்கியுள்ளீர்கள். இதில்,

1    கருத்துரு, பத்தி எண். 1-ல், அரசு அதிகாரிகளுக்கு எதிராக மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்திய தண்டனை சட்டம் – 1860”-ன் பிரிவுகளின்படி மேற்படி பொது ஊழியர்கள், தண்டனைக்குரிய குற்றச் செயல்களை புரிய அதிகாரம் உடையவர்கள் அல்ல. எனவே தங்களது கருத்து ஏற்கத்தக்கதல்ல.

2   பத்தி 3-ல் குறிப்பிட்டுள்ளபடி, மேற்படி பள்ளி, அரசு பள்ளி அல்ல. இந்த பிரச்சினை அடி நிலம் சம்பந்தப்பட்டது மற்றும் கட்டிடம் சம்பந்தப்பட்டது ஆகும் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

3   பத்தி 4-ல் குறிப்பிட்டுள்ளபடி, ................. மாவட்டம், ................. அஞ்சல், ................. கிராமம், . . எண். .................-ல் அமைந்துள்ள அந்த பள்ளி, மொத்தம் ................. சென்ட் இடப்பகுதிகளை கொண்டதாகும். இதில் மேற்படி பள்ளி ................., திரு. .................அவர்களுக்கு, பத்திரப்படி அடி நிலம் சுமார் ................. சென்ட் மட்டுமே பாத்தியப்பட்டு, அவ்வாறே பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மேற்படி பள்ளியின் கட்டிட வரைபடத்தில் .................சென்ட் காட்டப்பட்டுள்ளதுஎனவே மீதமுள்ள .................சென்ட் க்குரிய ஆவணங்கள் இல்லை. இது முண்ணுக்குப்பின் முரணானது ஆகும். எனவே தங்களது கருத்து ஏற்கத்தக்கதல்ல.

4   பத்தி 5-ல், எழுந்துள்ள வழக்கு தொடர்பாக, உரிமையியல் வழக்கும், அதே வழக்கு தொடர்பாக குற்றவியல் வழக்கும் தாக்கல் செய்யலாம். குற்றவியல் வழக்கில், உரிமையியல் பிரச்சினையைப் பற்றி குறிப்பிட தேவையில்லை.  ஆகையால் உரிமையியல் பிரச்சினைகளைப் பற்றி மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, தங்களது கருத்து ஏற்கத்தக்கதல்ல.

5   பத்தி 6-ல், எனது மனு குற்றவியல் சம்பந்தப்பட்டது. எனவே, குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். எனவே, காவல்துறை குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமாகவும், நியாயமாகவும் நீதியின் நலனுக்கு உகந்ததாகவும் இருக்கிறது.

6   உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளபொழுது, ஏற்கனவே ஓர் குற்ற எண். 000 / 0000, நாள். 00-00-0000-க்குரிய குற்றவியல் வழக்கு எண். 000 / 0000, குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண். 0, .................-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதுஆகையால், தாங்கள், பத்தி எண். 8-ல் கூறியுள்ள கருத்து ஏற்கத்தக்கதல்ல.

ஆகையால், தாங்கள், திரு. காவல் ஆய்வாளர், ................. காவல் நிலையம், ................. மாவட்டம் அவர்களுக்கு அளித்த கருத்துருவை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி ஐயா, வணக்கம்.

இடம் :   

நாள் :                                
மனுதாரர் கையொப்பம்.

இணைப்பு :

சுய சான்றிட்ட மனுதாரரின் சான்றொப்ப ஆவணங்களின் பட்டியல்


No comments:

Post a Comment