Wednesday, October 07, 2015

3330 - சட்டக் கருத்துருவை மறுபரிசீலனை செய்யத் தவறிய, கூடுதல் அரசு வழக்கறிஞருக்கு, 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

ஒப்புகை இணைந்த பதிவஞ்சலில்

15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு 

கடித எண். 00-000-00 / 0000, நாள்.  00-00-0000

1    ....................... மாவட்டம் ......................., மண்டலம் எண். 0, .......................  கிராமம், .......................  அஞ்சல், .......................  கதவு எண். 0 / 000, முகவரியில் குடியிருந்து வரும், திரு. .......................  மகனாகி, ......................., வயது 00 ஆகிய நான்,

2    .......................  மாவட்டம், ....................... நீதிமன்றம், கூடுதல் அரசு வழக்கறிஞரான, திரு. ....................... ஆகிய தங்களுக்கு அளிக்கும் 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும்.

3    தங்களது 00-00-0000-ம் தேதியிட்ட, சட்டக்கருத்துருவில் தொடர்புடைய புகார் மனுவினை, தொடர்புடைய காவல்துறை பதிவு செய்ய வேண்டாம் என தாங்கள் வழங்கிய சட்டக் கருத்துருவில், தங்களால் சொல்லப்பட்ட காரணம் சரியானது / ஏற்கத்தக்கது அல்ல.

4    அது தொடர்பான மறுபரிசீலனை குறித்து, எனது 00-00-0000-ம் தேதியிட்ட கடிதத்திற்கு, தாங்கள் நாளது தேதிவரை எந்தவொரு பதிலும் அனுப்பாமல் உள்ளீர்கள். எனவே தங்களது 00-00-0000-ம் தேதியிட்ட, சட்டக் கருத்துரு சட்டப்படியானது அல்ல என்பதைத் தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.

5    எழுந்துள்ள வழக்கு தொடர்பாக உரிமையியல் வழக்கும் குற்றவியல் வழக்கும் தொடரலாம் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

6    சட்டம் தெரியாதது என்பது மன்னிக்கக் கூடியது அல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

7    நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு உள்ளதால் குற்ற வழக்கு தொடர முடியாது என்று தாங்கள் அளித்துள்ள சட்டக் கருத்துரு, சட்ட முரணானது ஆகும். 

8    பொது ஊழியர்கள் சட்டப்படி செய்யக் கூடாத குற்றங்கள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அதனை தாங்கள் ஏற்கவில்லை என்பதை தாங்கள் அளித்துள்ள சட்டக் கருத்துரு உறுதி செய்கிறது.

9    எனது மேற்படி புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ள பொது ஊழியர்களை சட்டப்படியான தண்டனை பெறாமல் தப்ப செய்ய வேண்டும் என்ற உட்கருத்துடன் தாங்கள், சட்டக் கருத்துரு வழங்கி, புகார் மனுவின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளீர்கள்.

10   தாங்கள் வேண்டுமென்றே கடமையைச் செய்ய மறுத்து இந்திய தண்டனைச் சட்டபடியான தண்டிக்க தக்க குற்றங்களை தெரிந்தே செய்து உள்ளீர்கள். 

11   சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்யாமல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் படியான குற்றம் செய்து இருக்கிறீர்கள்.

12   உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போதும் ஏற்கனவே குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பார்க்க : வழக்கு எண் :  000 / 0000, நாள். 00-00-0000, ............. காவல் நிலையம், ............. மாவட்டம்.

13   தாங்கள் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுகிறீர்கள். 

14   தாங்கள் நல்ல எண்ணத்துடன் செயல்படவில்லை என்பதற்கு தாங்கள் அளித்துள்ள ஆவணமே தகுமுறை சாட்சியமாக உள்ளது. 

15   தங்கள் மீது ஏன் குற்ற வழக்கு தொடரக் கூடாது என்பதற்கான காரணங்களை இந்த அறிவிப்புக் கிடைத்த 15 தினங்களுக்குள் எனக்குத் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

16   சட்டங்களை ஏற்க மறுத்து செயல்பட்டு உள்ள தங்களுக்கு எதிராக மீது ஏன் தகுதி வினவும் நீதிப்பேரானை தாக்கல் செய்யக் கூடாது என்பதற்கான காரணங்களை இந்த அறிவிப்புக் கிடைத்த 15 தினங்களுக்குள் எனக்குத் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

17   சட்ட விரோதமாகச் செயல்படுவது, ஒரு பொது ஊழியரின் கடமையின் ஒரு பகுதி அல்ல. எனவே, தங்களுக்கு எதிராகக் குற்ற வழக்குத் தொடர உயர் அதிகாரிகளின் முன் ஒப்புதல் தேவை இல்லை என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.

18   கடமையில் இருந்து தவறுவது, ஒரு பொது ஊழியரின் கடமையின் ஒரு பகுதி அல்ல. எனவே, தங்களுக்கு எதிராகக் குற்ற வழக்குத் தொடர உயர் அதிகாரிகளின் முன் ஒப்புதல் தேவை இல்லை என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.

19   தாங்கள் இந்த அறிவிப்பை அலட்சியப் படுத்தினலோ, இதில் குறிப்பிட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கு உரிய பதில் அளிக்க இயலாமல் போனாலோ உரிய நடவடிக்கை எடுக்காமல் போனாலோ இதில் உள்ள சங்கதிகளை, இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் சட்டப்பிரிவு 106-ன் படி, தாங்கள் அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகும் என்பதைத் தாழ்மையுடன் பணிந்து அறிவித்துக் கொள்கிறேன்.

இடம் :                                          இப்படிக்கு,

நாள் :   
சட்டப்படியான அறிவிப்பு அளிப்பவர்.


உறுதிச் சான்று ஆவணம் :

மேற்கண்ட முகவரியில் வசித்து வரும்திரு________________ அவர்களின் மகளாகிய / மகனாகிய / மனைவியாகிய________________வயது ____, ஆகிய நான்இம்மனுவில் கண்டுள்ள சங்கதிகள் அனைத்தும்என் அறிவுக்கு எட்டியவரையில் உண்மை என்றும்எந்தவொரு மூலப் பொருளையும் மறைக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறேன்.
________________-ம் வருடம், ________________ மாதம்____-ம் தேதிதிங்கள் கிழமைஇந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் சட்டப்பிரிவு 70-ன் படி________________ இன்று கையெழுத்துச் செய்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இடம் :   

நாள் :   
                       


No comments:

Post a Comment