ஒப்புகை இணைந்த பதிவஞ்சலில்
15 தினங்கள் கொண்ட சட்டப்படியான
அறிவிப்பு
1
0000-ம் வருடம், ________
மாதம், 00-ம் தேதி,
2 ________ மாவட்டம் ________, மண்டலம் எண். 0, ________ கிராமம், ________ அஞ்சல், ________, கதவு எண். 000, முகவரியில் குடியிருந்து வரும், திரு. ________ மகனாகி, ________ ஆகிய நான்,
3 ________ மாவட்டம் 000 000, மாநகர காவல்துறை, ________ அஞ்சல், ப________ கிராமம் என்ற முகவரியில், ஊரக (________) காவல் நிலையத்தில், திரு. காவல் ஆய்வாளர் ஆக பணி புரிந்து வரும் தங்களுக்கு,
4 நாளது தேதியில், அளிக்கும் 15 தினங்கள்
கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும்.
5 எனது 00-00-0000-ம் தேதியிட்ட மனு தொடர்பாக தாங்கள் முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்ய மறுத்து உள்ளீர்கள்.
6 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுக்க, தங்களால் சொல்லப்பட்ட காரணம் சரியானது அல்ல. எனவே, தங்களது நடவடிக்கை சட்டப்படியானது அல்ல என்பதைத் தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.
7 எழுந்துள்ள வழக்கு தொடர்பாக உரிமையியல் வழக்கும்
குற்றவியல் வழக்கும் தொடரலாம் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
8 சட்டம் தெரியாதது என்பது மன்னிக்கக் கூடியது அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
9 நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு உள்ளதால் குற்ற வழக்கு
தொடர முடியாது என்று தாங்கள் அளித்துள்ள தகவல் சட்ட முரணானது ஆகும்.
10 பொது ஊழியர்கள் சட்டப்படி செய்யக் கூடாத குற்றங்கள்
என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அதனைத்
தாங்கள் ஏற்கவில்லை என்பதை தாங்கள் அளித்துள்ள தகவல் உறுதி செய்கிறது.
11 எனது மேற்படி மனுவில் குறிப்பிட்டு உள்ளவர்களை / பொது ஊழியர்களை சட்டப்படியான தண்டனை
பெறாமல் தப்ப செய்ய வேண்டும் என்ற உட்கருத்துடன் தாங்கள் முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்ய மறுத்து உள்ளீர்கள்.
12 தாங்கள் வேண்டுமென்றே கடமையைச் செய்ய மறுத்து இந்திய
தண்டனைச் சட்டபடியான தண்டிக்க தக்க குற்றங்களை தெரிந்தே செய்து உள்ளீர்கள்.
13 தாங்கள் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 154 –ன் படி
உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்யாமல் இந்திய
தண்டனைச் சட்டம் பிரிவுகளின் படியான குற்றம் செய்து இருக்கிறீர்கள்.
14 உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போதும்
ஏற்கனவே குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பார்க்க : வழக்கு எண் : 000 / 0000, நாள். 00-00-0000, ............. காவல் நிலையம், ............. மாவட்டம்
15 குற்ற எண். 5 / 2014, நாள். 12-07-2014, மாவட்ட குற்றப் பிரிவு, நாமக்கல் மாவட்டம்-ல், “இந்திய தண்டனை சட்டம் – 1860”-ன் சட்டப்பிரிவு 468-ன் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தினத்தந்தி, ஈரோடு மாவட்டம், நாள். 20-07-2014, பக்கம் எண். 5-ல் செய்தி வெளியாகி உள்ளது.
16 நாமக்கல் மாவட்டத்தில், மேற்படி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மறுக்கப்படுகிறது.
17 தாங்கள் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுகிறீர்கள்.
18 தாங்கள் நல்ல எண்ணத்துடன் செயல்படவில்லை என்பதற்கு
தாங்கள் அளித்துள்ள ஆவணமே தகுமுறை சாட்சியமாக உள்ளது.
19 தங்கள் மீது ஏன் குற்ற வழக்கு தொடரக் கூடாது
என்பதற்கான காரணங்களை இந்த அறிவிப்புக் கிடைத்த 15 தினங்களுக்குள்
எனக்குத் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
20 சட்டங்களை ஏற்க மறுத்து செயல்பட்டு உள்ள தங்களுக்கு
எதிராக மீது ஏன் தகுதி வினவும் நீதிப்பேரானை தாக்கல் செய்யக் கூடாது என்பதற்கான
காரணங்களை இந்த அறிவிப்புக் கிடைத்த 15 தினங்களுக்குள் எனக்குத் தெரிவிக்கும்படி தாழ்மையுடன்
பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
21 சட்ட விரோதமாகச் செயல்படுவது, காவல் அதிகாரியின் கடமையின்
ஒரு பகுதி அல்ல. எனவே, தங்களுக்கு எதிராகக்
குற்ற வழக்குத் தொடர உயர் அதிகாரிகளின் முன் ஒப்புதல் தேவை இல்லை என்பதையும் அறிவித்துக்
கொள்கிறேன்.
22 கடமையில் இருந்து தவறுவது காவல் அதிகாரியின் கடமையின் ஒரு பகுதி அல்ல.
எனவே, தங்களுக்கு எதிராகக் குற்ற வழக்குத் தொடர,
உயர் அதிகாரிகளின் முன் ஒப்புதல் தேவை இல்லை என்பதையும் அறிவித்துக்
கொள்கிறேன்.
23 தாங்கள் இந்த
அறிவிப்பை அலட்சியப் படுத்தினலோ / இதில் குறிப்பிட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கு உரிய பதில் அளிக்க இயலாமல்
போனாலோ / உரிய
நடவடிக்கை எடுக்காமல் போனாலோ இதில் உள்ள சங்கதிகளை, “இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் சட்டப்பிரிவு 106-ன் படி, தாங்கள் அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகும் என்பதைத்
தாழ்மையுடன் பணிந்து அறிவித்துக் கொள்கிறேன்.
இடம் : இப்படிக்கு,
நாள் :
சட்டப்படியான அறிவிப்பு அளிப்பவர்.
உறுதிச் சான்று ஆவணம் :
மேற்கண்ட முகவரியில் வசித்து வரும், திரு. ________________ அவர்களின் மகளாகிய / மகனாகிய / மனைவியாகிய, ________________, வயது ____, ஆகிய நான், இம்மனுவில் கண்டுள்ள சங்கதிகள் அனைத்தும், என் அறிவுக்கு எட்டியவரையில் உண்மை என்றும், எந்தவொரு மூலப் பொருளையும் மறைக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறேன்.
________________-ம் வருடம், ________________ மாதம், ____-ம் தேதி, திங்கள் கிழமை, “இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் சட்டப்பிரிவு 70-ன் படி, ________________ இன்று கையெழுத்துச் செய்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இடம் :
நாள் :
இணைப்பு : குற்ற எண். 5 / 2014, நாள். 12-07-2014, மாவட்ட குற்றப் பிரிவு, நாமக்கல் மாவட்டம்-ல், “இந்திய தண்டனை சட்டம் – 1860”-ன் சட்டப்பிரிவு 468-ன் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தினத்தந்தி, ஈரோடு மாவட்டம், நாள். 20-07-2014, பக்கம் எண். 5-ல் வெளிவந்த பொது அறிவிப்பு செய்தி.
No comments:
Post a Comment