உயிலை 3 வது நபர் கேள்வி கேட்கலாமா?
( shared by :- Advocate M Muthusamy President Trichy District Men's Welfare and Protection Association)
====================================
சென்னை உயர்நீதிமன்றம் " வள்ளியம்மாள் Vs S. ஆறுமுக கவுண்டர் (2001-1-CTC-708)" என்ற வழக்கில், வாதியின் குடும்பத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத வேற்று மனிதராக பிரதிவாதி உள்ள நிலையில், அந்த உயில் எழுதப்பட்டது குறித்து சந்தேகம் உள்ளது என்கிற ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு பிரதிவாதி தகுதி உடைய நபராக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் " S. கணேசன் Vs S. குப்புசாமி (2002-2-LW-636)" என்ற வழக்கிலும், உயிலை எழுதி வைத்தவரோடு எந்த வகையிலும் உறவு முறையில் சம்மதம் இல்லாத ஒருவர் ஒர் உயிலை மெய்பிக்க வேண்டும் என்று கோர முடியாது என்றும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ன் கீழ் அந்த உயிலை மெய்பிக்கும்படி கோர முடியாது என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே ஓர் உயிலின் உண்மைத்தன்மை குறித்து, அந்த உயிலை எழுதி வைத்தவருக்கு எந்த வகையிலும் உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவர் எந்த ஒரு வினாவையும் எழுப்ப முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
S. A. NO - 1515/1999,DT - 26.4.2016
பாக்கியம்மா Vs இராமசந்திரப்பா
(2016-3-TLNJ-CIVIL-352)
S. A. NO - 1515/1999,DT - 26.4.2016
பாக்கியம்மா Vs இராமசந்திரப்பா
(2016-3-TLNJ-CIVIL-352)
நன்றி - லீகல் அவேர்நெஸ்
No comments:
Post a Comment