Saturday, November 30, 2019

6027 - தற்காப்பு மனு மாதிரி, நன்றி ஐயா. Subramanian Perumal

தற்காப்பு மாதிரி மனு
அனுப்புதல்
பெயர்
முகவரி
பெறுதல்
காவல் ஆய்வாளர்,
----------- காவல் நிலையம்
ஊர்
மதிப்பிற்கு உரிய அய்யா, வணக்கம்.
பொருள்.
1. குவிமுச பிரிவு 149 & 150 - ன் கீழ் மனு.|
2.தாங்கள் தங்களின் சட்டப்படியான கடமையைச் செய்யக் கோரும் மனு.
. ----------+---------
1. என் மீது பொய் வழக்குப் போட்டு என்னை சிறையில் வைக்க சிலர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. ஆகையால் தாங்களுக்கு குவிமுச பிரிவு 149 & 150 படி தகவல் அளிக்கிறேன். தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்
2. சட்டப்படி செய்யக் கூடாததை செய்வது குற்றமாகும். சிலர் சட்டப்படி செய்யக் கூடாததை இந்த காவல் நிலையத்தில் செய்ய திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. ஆகையால், எந்த ஒரு குற்றமும் நடக்காமல் தடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
3. _--------------- நபர்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி என் மீது புகார் கொடுக்கும் போது இதச பிரிவு 211 ன் படி குற்றத்தை நிரூபிக்க தவறினால் எனக்கு / எங்களுக்கு சட்டப்படி தண்டனை உண்டு என்பதை அறிந்தே புகார் அளிக்கிறேன் என்று எழுதி வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
4. காவல் அதிகாரிக்கு பொய்யான தகவல் மற்றும் புகார் அளிப்பது குற்றம் ஆகும் என்பதை அறிந்து உள்ளேன் என்று புகார் அளிப்பவரிடம் இருந்து எழுதி வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
5.ஒரு வேளை எனக்கு எதிராக FIR பதியப் பட்டால் என்னை சொந்த ஜாமினில் விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
6. Mistake of facts என்று முடிவு செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளதால் தங்கள் உண்மையைக் கண்டறிந்து செயல்பட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
7. பொய் ஆவணம் புனைவது சட்டப்படி குற்றமாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு,
பெயர் கையொப்பம்
இடம்
தேதி.

No comments:

Post a Comment